Home Blog Page 5804

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

0

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. நெல்லை கண்ணனை கைது செய்த போது பாசகவினர் தாக்கிய சம்பவங்களும் நடந்தன.

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

இதையடுத்து, திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, கொலைகார கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் போடும் பிரியாணிக்காக நாக்கை தொங்கப் போட்டு கொண்டு இருக்கும் வேல்முருகனுக்கு என்னைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.

சீமானா..? வேல்முருகனா..? யார் அடுத்த டார்கெட்..? எச்.ராஜா ஆவேசம்!!

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று பொது மேடையில் பேசிய சீமானையும், அவரது கட்சி ஆட்களையும் கைது செய்ய வேண்டும் என கூறினார். நெல்லை கண்ணன் பேசியதற்கும் சீமான் பேசியதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகவே, சீமானை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை என்று கேள்வி கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை ஆதரிப்பதாக கூறினார்.

திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி

0

திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி

கடந்த சில நாட்களாக தமிழக திரைத்துறையிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆதரவு பெற்று ஊடகங்களில் கடும் விவாத பொருளாக மாறி வருகிறது திரௌபதி திரைப்படம் குறித்த கதை.

தமிழக திரைத்துறையில் இது வரை எந்த இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு என்ற பெயரில் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதி பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொண்டு பெற்றோர்களிடம் பணம் வாங்கி வர சொல்வது, போலிப் பதிவு திருமணங்கள் மூலமாக பெண்ணை பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களை செய்து வரும் சிலரை பற்றிய படம் என்று தான் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதே நேரத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்பு பேசும் படங்கள் மத்தியில் தைரியமாக சாதி உள்ளது என்று இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது பெரும்பாலான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நாடக காதல் செய்து பெண்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி பணம் பறித்து வந்த கும்பலுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இந்த படத்தின் டிரைலரும் அமைந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கூட எதிர்பார்க்காத அளவிற்கு இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது.

எந்தவொரு புரமோஷனும் இல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்த படத்தின் டிரைலரை கண்டு இடது சாரி அமைப்புகளும், போலி சாதி ஒழிப்பு அமைப்பை சேர்ந்தவர்களும் அச்சம் கொண்டனர். எங்கே இந்த படம் வெளியானால் இதுவரை நாம் செய்து வந்தவை எல்லாம் வெளி உலகிற்கு தெரிந்துவிடும் என்று எண்ணிய அவர்கள் இதை வெளியிடாமல் தடுக்க முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படம் ஆணவ கொலையை ஆதரிப்பதாக கூறி சில இடங்களில் அதை வெளியிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் விசிக மற்றும் சில இடது சாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த எதிர்ப்பின் காரணமாக படத்தின் இயக்குனர் ஏன் இந்த படத்தை எடுத்தோம் என்றும், இனிமேல் இது போன்ற படங்களை எடுக்க போவதில்லை என்றும் புலம்பியதாக தனியார் செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் திரௌபதி திரைபடத்தின் இயக்குனரான மோகன் ஜி இது முற்றிலும் தவறான கருத்து என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு ஊடகங்களில் மறைமுகமாக சாதி மறுப்பு மற்றும் இடது சாரி அமைப்பை சேர்ந்தவர்கள் மறைமுகமாக பணியில் இருந்து கொண்டு தங்கள் அமைப்பின் கொள்கைகளை பரப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் திரௌபதி படத்திற்கு எதிராக இவ்வாறு சம்பந்தமில்லாத போலிச் செய்திகளை வெளியிட்டதன் மூலம் அவர்களின் உண்மை முகம் வெளியாக ஆரம்பித்துள்ளது.

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

0

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி பயமுறுத்திய பிரபல ரவுடி கஞ்சா மணி, தப்பிச்சென்ற போது வழுக்கி விழுந்ததால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கெத்து காட்டி வந்த கஞ்சா வியாபாரி மணி, ஒரு கட்டத்தில் காவல்துறைக்கே சவால்விட்டான். சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை கஞ்சாமணியை பிடிக்க சென்ற போது கத்தியால் கீறிக்கொண்டு போலீசுக்கு படம் காட்டினான்.

ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த கஞ்சா மணி சமீபத்தில் நிலக்கரி சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடிய போது மத்திய பாதுகாப்பு படையிடம் சிக்கிக் கொண்டான். பாதுகாப்பு வீரரை கத்தியால் குத்திவிட்டு ஓடியவனை தாஸ் என்கிற பாதுகாப்பு படை வீரர் துரத்திச் சென்றார். கஞ்சா மணியின் பிடியில் மாட்டிக்கொண்ட தாஸை பயமுறுத்திய வீடியோ சம்பவம் இணையத்தில் வைரலாகியது.

இதையடுத்து, சட்டத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்ட கஞ்சா மணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைது செய்ய உத்தரவிட்டார். கஞ்சா மணியை தேடி சிறப்பு படை விரட்டி சென்றபோது தப்பி வழுக்கி விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மணியை மீட்டு மனிதநேயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிறப்பான மாவுக்கட்டு மருத்துவம் செய்யப்பட்டது.

தன்னை ஒரு தாதா போல் காட்டிக் கொண்ட ரவுயின் நிலைமை இன்று மாவுக்கட்டில் முடிந்து போனது. சிகிச்சை முடிந்து நீதிமன்றம் கொண்டு செல்லும் வேலைகள் நடந்து வருகிறது. இதுபோன்று சமீபத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களை கொன்றவர்களையும் விரைவில் பிடித்து மாவுக்கட்டு போட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது.

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

0

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக மாறியது தர்பார். இதனால் முதல் நாளிலேயே சில காட்சிகள் டிக்கெட் எளிதாக கிடைக்க ஆரம்பித்தது. இந்நிலையில் போகப் போக வசூல் மந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தர்பாரின் இந்த மந்தத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சத்யஜோதி பிலிம்ஸ் வரும் 16ஆம் தேதி வெளியாக இருந்த தங்கள் ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்து, ஒரு நாள் முன் கூட்டி 15 ஆம் தேதியே வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின்  சென்சார் பணிகளும் முடிந்து’யூ’ சான்றிதழ் வாங்கியுள்ளனர் படக்குழுவினர். தனுஷை வைத்து கொடி என்ற படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ள பட்டாஸ் படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

போனமுறை பொங்கலுக்கு தனது பேட்ட படத்தோடு களமிறங்கிய ரஜினி அஜித்தின் விஸ்வாசம் படத்தை விட கம்மியான வசூலே செய்தார். இம்முறை தனுஷின் பட்டாஸுடன் மோத இருக்கிறார். வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

0

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது.  இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் செய்வதாக சொல்லப்படுகிறது.  

ஆனால் விமர்சகர்கள் மத்தியில் கௌம் கண்டனங்களைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் என்கவுண்ட்டர் என்ற விஷயத்தை ஆதரிப்பது, மனித உரிமை அதிகாரிகளை பயந்தாங்கொல்லிகள் போல காட்சிப் படுத்தியது என அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை கடுப்பான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் தனது ட்விட்டரில் ” ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா … இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது ..” என்று கூறியுள்ளார்.

அவர் தர்பார் படத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் நேற்று தர்பார் ரிலிஸாகியுள்ளதாலும், படத்தின் கதை ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவரின் கதை என்பதாலும் தர்பாரைதான் சொல்லுகிறார் என்பது வெட்ட வெளிச்சம்.

இது ஒருபுறமிருக்க ரஜினியை இளமையாக காமிக்கிறேன் பேர்வழி என்று மோசமாக கிராபிக்ஸ் செய்யப்பட்ட காட்சிகளைக் காட்டி முருகதாஸ் கிச்சு கிச்சு மூட்டுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். மொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தும் படமாக அமையும் என தெரிகிறது.

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

0

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகை இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லலாம். கபில் தேவ், சச்சின் வரிசையில் அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சி மலரைப் போல இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை தனது தலைமையில் பெற்று தந்தவர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகி அணியில் ஒரு வீரராகப் பங்கேற்று வந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

38 வயதாகும் தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவாரா என்பதுதான் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் உள்ள கேள்வி. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவரது பேச்சில்   ‘ தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம். அது எங்கள் இருவருக்கும் இடையிலானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வை அறிவிப்பார். அவரது வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தனது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை அமையும்’ எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை டி 20 தொடரில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது ஐபிஎல் போட்டிகளில் அவரது ஆட்டத்தை பொறுத்தே அமையும் என ரவி சாஸ்திரி சொல்லாமல் சொல்லியுள்ளார்.

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

0

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

சமீபத்தில் டிரெய்லர் மட்டும் வெளியிடப்பட்டு மக்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் திரெளபதி. நாடக காதல்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை வைத்து  ஆதாரத்துடன் எடுத்துள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரெளபதி படம் வெளியே வந்தால் தமிழகத்தில் பல்வேறு சாதிய மோதல்கள் உருவாகும் என்று, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருக்கும் ஒன்பது தியேட்டர்களில் திரெளபதி படத்தை வெளியிடக் கூடாது என்று திரையரங்கு உரிமையாளர் மற்றும் மேலாளர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பலர் மனுவை அளித்தனர்.

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?

மேலும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்தும் திரெளபதி படம் வெளியிட கூடாது என்று இவர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. படம் வெளியே வந்த பிறகு காட்சிகளை நீக்குவது பற்றியோ, படத்தை தடை செய்வது பற்றியோ பேசலாம் ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பே தடை செய்யச் சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரெளபதி படத்தை வெளியிட கூடாது! பீதியில் சிறுத்தைகள் மனு..?
திரெளபதி பட இயக்குனர்

திரெளபதி படத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பெண்கள், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு சமூக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விசிக மற்றும் பெரியாரிஸ்டுகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பலருக்கு வியப்பாக உள்ளது.

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

0

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

தென்காசியில் ஜோதிடர் சொன்னதை நம்பிய கணவர் ஒருவர் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஜோதிடம் என்பது உண்மையா ? பொய்யா ? என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. எந்தெந்த விஷயத்தில் ஜோதிடத்தை நம்பலாம் ? எந்தெந்த விஷயத்தில் அது தேவையில்லை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நம் வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சனைகளைக் கொண்டு வந்து விடும் என்பதற்கு சாட்சியாக தென்காசி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தென்காசயில் உள்ள குலசேகரன் பட்டிணம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்க தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு வீடு கட்டலாம் என ஆசைப்பட்டுள்ளன்ர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள அவர்கள் ஜோதிடரை சந்தித்து ஆலோசனைக் கேட்க முடிவு செய்துள்ளனர். இது சம்மந்தமாக தென்காசியில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரை சந்தித்துள்ளார் மாரியப்பன்.

அப்போது  இருவரின் ஜாதகத்தை வைத்து ஜோதிடர் மாரியப்பனிடம் ‘உன் மனைவியின் நடத்தை தவறாக உள்ளது’ என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஜோதிடரின் வார்த்தையை நம்பிய மாரியப்பன்,  இத்தனை வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவியை நம்பாமல் கோபத்தோடு ஊருக்கு சென்றுள்ளார்.

தங்கள் பருத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி காளியம்மாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் தான் அவருக்கு தான் செய்த கொடூரம் புரிந்துள்ளது. அதனால் குற்றவுணர்ச்சிக்கு ஆளான அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்து தானும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

0

பொங்கல் பரிசுக்கு வரிசையில் காத்திருந்த இளைஞர் உயிரிழப்பு! இலவசத்திற்கு மக்களை அடிமையாக்கிய அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தமிழக அரசு சார்பாக ரூ.1,000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது நேற்று தொடங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு சார்பாக வழங்கப்படும் இந்த பொங்கல் பரிசை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை ஏழை மக்கள் மற்றவர்களை போலவே மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் பணமும் இணைத்து வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 2.5 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 9 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரையில் இந்த இலவச பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசை பெற நேற்று காலை 9 மணி முதலே தமிழக மக்கள் ரேஷன் கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் மக்களிடம் கடை ஊழியர்கள் ரேஷன் கார்டு விவரங்களை முழுமையாக சரிபார்த்து அதன் பிறகு அவர்களுக்குப் பரிசு தொகுப்புகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் ஆணைக்குப்பம் நியாய விலை கடையிலும் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச பொங்கல் பரிசை பெற மக்கள் கூட்டம் அலை மோதியுள்ளது. அந்த கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நடராஜ் என்ற இளைஞரும் ரூ.1,000 பணத்துடன் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகவும் அவர் இதற்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்த அந்த இளைஞர் நடராஜ் அங்கேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது பரிசு தொகுப்பு வாங்க வந்த அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், மேலும் கூட்ட நெரிசலின் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கவும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுக்கு ஆலோசனை கூறும் மக்களிடம் நமது சார்பாக சில கேள்விகள் அரசு இலவசமாக வழங்கும் இந்த 1000 ரூபாய் பணம் மற்றும் அந்த பொங்கல் பரிசை கூட சம்பாதிக்க முடியாத நிலையிலா உள்ளீர்கள்? இல்லை அரசியல்வாதிகள் உங்களை அடிமைகளாக வைத்து கொள்ள கொடுக்கும் இந்த இலவசங்கள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? மக்களின் மனநிலை மாறும் வரை இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !

0

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் புடவையில் எடுத்த கவர்ச்சியாக புகைப்படங்களைப் பகிர்ந்து தனக்கென ஒரு ஆர்மி உருவாக்கிக் கொண்டுள்ளார்.

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !

ஜோக்கர் மற்றும் ஆண் தேவதைப் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டினாலும் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்க்ள் போதுமான ஆதரவைத் தரவில்லை. அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் புடவையில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி லைம்லட்டுக்கு வந்தார்.

கடந்த ஆண்டின் பின் பகுதியில் ரம்யா பாண்டியன் ஆர்மி உருவாகும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் இளைஞர்களால் விரும்பி பார்க்கப்பட்டனர். இதையடுத்து வரிசையாக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் ஏமாற்றமே ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது மீண்டும் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் இந்த முறை புடவையில் இல்லாமல் மாடர்ன் உடைகளோடு களமிறங்கியுள்ளார். இதையடுத்து கொஞ்ச நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த ரம்யா பாண்டியன் ஆர்மி இப்போது விழித்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது.