Home Blog Page 5821

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

0

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில், சின்ஹள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும், தமிழில் இசைக்கப்படாது என்றும், அமைச்சர் கூறியதாக கொழும்பு போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழின அழிப்புக்கு மகிந்த ராஜபக்சே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வெற்றி கண்ட நிலையில், தற்போது அண்ணனும் தம்பியும் சேர்ந்து, தமிழின அழிப்புக்கு அடித்தளமிட்டுள்ளனரா என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

0

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

இலங்கையில் இனி தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றும் தமிழில் இசைக்கப்படாது என்றும் இலங்கை அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளது அங்குள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் என்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அங்குள்ள சிங்களவர்கள் கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்சே அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லாமல் தமிழர்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு வருவதை தமிழர்கள் அதிர்ச்சியுடன் நோக்கி வரும் நிலையில் தற்போது தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது என்று கூறியிருப்பது ஒட்டுமொத்தமாக தமிழர்களை ஒதுக்குவதுதான் இலங்கை அரசின் எண்ணமாக இருப்பதாக தமிழ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையை வைத்து அரசியல் செய்து வரும் தமிழக அரசியல்வாதிகள் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த கண்டன குரலால் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய தமிழர்?

0

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகன் சதீஷ் சூரிய என்ற 2 மகன்களும் உள்ளனர் சங்கர் பிரதமர் நரேந்திர மோடி மீது நீண்டகாலமாக பெரிதும் ஈடுபாடு கொண்டவர் தன் சொந்த ஊரில் அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார்.

இதனால் தனது சொந்த செலவிலேயே தன் சொந்த இடத்தில் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டினார். தனது விவசாய நிலத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.

பாஜக விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கர் இது பற்றி கூறியதாவது பிரதமர் மோடியின் மீது சிறு வயது முதலே கொண்ட அன்பால் எந்தவித எதிர்பார்ப்பும் யாருடைய உதவியுமின்றி எனது சொந்த செலவில் கோவிலை கட்ட விரும்பினேன்.

தற்போது விவசாயத்தில் கிடைத்த வருமானம் ஒரு அளவு பணத்தைக் கொண்டு கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது கோவில் கட்டி முடித்து விட்டேன்.

மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் கட்சிகளையும் தாண்டி மோடி ஒரு நல்ல மனிதர் என அவர் கூறினார். அந்த ஈர்ப்பில் தான் அவருக்கு நான் கோவில் கட்டினேன் என்று கூறினார்.

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

0

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

லாட்டரி சீட்டில் தனக்கு ரூ.220 கோடி விழுந்துவிட்டதாக தவறாக எண்ணி அவசரத்தில் வேலையை விட்ட பெண் செய்தியாளர் ஒருவர் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் செய்தியாளர் நடாலியா என்பவர் கிறிஸ்மஸ் சிறப்பு குலுக்கல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதல் பரிசான ரூபாய் 220 கோடியை பெற்ற எண் அறிவிக்கப்பட்டது. அந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு தன்னிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு உடனே நான் துள்ளி குதித்தார் நடாலியா.

நேரலை ஒளிபரப்பு என்பதையும் அவர் கவனிக்காமல் தான் இனிமேல் 220 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரி என்றும் இனிமேல் வேலைக்கு செல்ல மாட்டேன் என்றும் வேலையை ராஜினாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவர் வாங்கிய சீட்டுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே பரிசு விழுந்ததாக தெரியவந்தது. இதனால் பெரும் சோகத்திற்கு உள்ளான அவர் தான் உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலால் வருந்துவதாக தெரிவித்தார். மேலும் தான் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்றும் மீண்டும் வேலைக்கு செல்லவுள்ளதாக கூறினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

மனைவிக்கு பாலியல் தொல்லை தந்தவரை அடித்து கொன்ற கணவர்?

0

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி தெற்கு மணக்காடு பகுதியை சேர்ந்தவர்
கலியமூர்த்தி இவரின் மனைவி கனகா, உறவினரான பக்கத்து வீட்டைu சேர்ந்த ராமர். தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, கனகா, மற்றும் கனகாவின் தந்தை மூவரும் ராமரின் தோட்டத்தில் அடித்து கொன்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் விவசாயி ராமர், தனது தோட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ராமரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,

இதுகுறித்து கலியமூர்த்தி போலீசிடம் கூறுகையில் ராமரை எவ்வளவு மிரட்டியும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, தமது மனைவி கனகா மற்றும் அவரது தந்தையின் உதவியுடன் ராமரை அடித்து கொலை செய்தேன் என்று கூறினார் . இது குறித்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

0

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது அர்ஜென்டினாவில் இருக்கும் ஒருவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் அச்சு அசலாக அவர் மைக்கேல் ஜாக்சன் போல் இருப்பதை அடுத்து மற்றும் ஜாக்சன் இதுநாள் வரை மறைந்து வாழ்ந்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த செர்ஜியோ என்பவர் ஒரு பாப் இசை பாடல்களை மேடையில் பாடினார். அச்சு அசல் மைக்கேல் ஜாக்சன் போலவே அவர் நடனமாடி பாடல்களை பாடினார். அதுமட்டுமன்றி சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்திலும் மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்ததால் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். அவரது நடை உடை பாவனை பேச்சு நடனம் ஆகிய அனைத்தும் அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பதால் இவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் சில சில ஆண்டுகள் மறைந்து வாழ்வதற்காக அவர் இறந்து விட்டது போல நாடகமாடி உள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனை ஷோ செர்ஜியோ, தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இது குறித்து செர்ஜியோ கூறும்போது ’என்னை ஒரு பத்திரிகையாளர் பேட்டி எடுத்தபோது மைக்கேல் ஜாக்சன் போன்று இருப்பதால் அதேபோல் மேக்கப் போட்டு பேட்டி எடுத்தார் என்றும் அதன் பின்னர் சுவிஸ் நாட்டின் விளம்பர படத்தில் மைக்கேல் ஜாக்சன் போல் வேடமிட்டு நடித்ததால் என்னை உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று கூறி வருகிறார்கள் என்றும் ஆனால் எனக்கு மைக்கேல் ஜாக்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

0

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழா 40 கழித்து இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.

அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் படுத்த கோலத்திலும் , மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 3.59 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்தனர் என தகவல் வந்துள்ளது.

சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடம்?

ஆகஸ்டு 16-ந் தேதி தரிசனம் முடிந்ததும் அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது.

அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.

இதன் காரணமாக வழக்கத்தை விட காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து காண படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4.19 கோடி பேர் வருகை தந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர் தரிசனம் மவுசால் சுற்றுலா இடத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது, சென்னை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

0

கீர்த்திசுரேஷூக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இன்று கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டதை அடுத்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தின் உள்ளே வந்ததும் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கேக் வெட்டினர். இந்த கொண்டாட்டத்தின்போது கீர்த்தி சுரேஷ்க்கு ரஜினிகாந்த் கேக் ஊட்டினார். இதுகுறித்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேற்று கீர்த்தி சுரேஷ் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களிடம் தேசிய விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த கேக் வெட்டும் கொண்டாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

0

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்வு !!!

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் ஆயிரத்து 700 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலக கோடீஸ்வரர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்ற முறை பதின் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் இம்முறை 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடப்பாண்டில் டிசம்பர் 23-ஆம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலர் சுமார் 1.20 லட்சம் கோடி உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 6100 கோடி டாலரை எட்டியுள்ளது RIL பங்கின் விலை 45 உயர்ந்திருப்பதை முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பங்கு சந்தை தொடர் ஏற்றம் கூட அவர் சொத்து மதிப்பு உயர முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

சென்றமுறை தோல்விக்கு பதிலடி கொடுக்குமா?

0

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இதில் நடந்த பகலிரவு டெஸ்ட் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானம் என்று அழைக்கப்படும், மெல்பர்னில் நாளை தொடங்குகிறது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ஒரு சிறப்பு உண்டு, அந்த சிறப்பு என்னவென்றால்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பொதுவாக கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே என்று பெயர். இந்த பாக்ஸிங் டே போட்டியில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது அது குறித்து இப்போது பார்ப்போம்.

முதலில் பக்கிஸ் பாக்ஸிங் டே என்றால் என்ன என்று பார்ப்போம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலை நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கும் பழக்கமுண்டு ஆலயத்திற்கு வருபவர்கள் தங்களால் முடிந்த கொடையை போடுவார்கள் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி அன்று பாக்ஸை பிரித்து அதில் உள்ள பணம் பொருட்கள் ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவது வழக்கம் பாக்சை திறக்கும் நாள் ஆங்கிலத்தில் பாக்ஸிங் டே என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது குடும்பத்தை பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளிகள் சிறப்பு கிறிஸ்துமஸ் பாக்ஸ் பரிசாக கொடுத்து அனுப்புவார்கள் இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி அதாவது ஒரு அணி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும்.

கடந்த முறை இங்கு இந்திய அணி விளையாடி வெற்றி கண்டது இந்த தடவை வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோதாவில் குதித்து விளையாட இருக்கிறது 1987 க்கு பிறகு இது இரண்டாவது முறையாகும்.

கடந்த முறை பாக்சிங் டே போட்டியில் இந்தியாவுடன் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி இந்த முறை பாக்ஸிங் டே போட்டியில் வெற்றி பெறும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.