Home Blog Page 5829

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

0

தொடர்ந்து மூன்று வருடங்கள் டிசமபர் மாத இறுதியில் தனது  படத்தை வெளியிட்டு, அதையும் வெற்றிப்படமாக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவ கார்த்திகேயன்.

ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவர அமைந்தாலும் , அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாவது அந்த படம் எந்த சூழ்நிலையில் வெளியாகிறது என்பதை பொறுத்துதான். இதை சரியாக புரிந்ததுகொண்டு வருட இறுதியான கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையை குறிவைத்து   தனது படங்களை வெளியிட்டு தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ளார் சிவா கார்த்திகேயன்.

கடந்த 2017’ம் ஆண்டு  டிசம்பர் 22’ ம் தேதி சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படம் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த வருடம், தான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததோடு , படத்தை தயாரித்து தனது நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக்கி வெளியிட்ட படம் கனா. அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு பல விருதுகளையும் வென்றது. அந்த படம் வெளியானது டிசம்பர் 21,2018.

இந்த வருடம் வெளியான Mr.லோக்கல் படம் சரியாக போகவில்லை என்பதால் அடுத்தப்படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சரியாக அனைத்தையும் தேர்ந்தெடுத்து . அதோடு தனக்கு ராசியான டிசம்பர் இறுதியையும் இணைத்து சிவகார்த்திகேயன் அடித்திருக்கும் டிசம்பர் ஹாட்ரிக்தான்  “ஹீரோ”.

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படம் எது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவராமல் இருந்தது

இந்த நிலையில் சூர்யாவின் 40வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் அதனை தனது நிறுவனமான வி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து சூர்யா, தாணு மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் இணையும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது

இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமாக சூரி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சூர்யாவின் படத்தை இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்த பின்னர் அவர் சூரி மற்றும் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

குடியுரிமை விவகாரம்: மலேசிய பிரதமருக்கு இந்தியா பதிலடி

0

இந்தியாவில் சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் இந்த சட்டம் குறித்து பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும் ஒரு சில நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியபோது ’இது போன்ற ஒரு சட்டத்தை எங்கள் நாடு நிறைவேற்றினால் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களையும் சீனர்களையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு போதிய தகுதி இல்லாத போதும் குடியுரிமை கொடுத்து ஆதரித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியபோது ’குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது முற்றிலும் எங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் இந்த சட்டம் குறித்த உண்மையை விளங்கிக்கொள்ளாமல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்துக் கூறுவதில் இருந்து மலேசியா விலகி இருப்பது நலம் என்றும் இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது.

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

0

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, குஷ்பு ஆகிய இருவருமே ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும், வீரா படத்திற்கு பின் ரஜினிக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாக நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும், அண்ணன் தங்கை பாசம் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த தகவல்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளம் மூலம் கசிந்துள்ளது என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏ.டி.எம் பணத்துடன் தப்பி ஓட்டம் கார் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர் போலீசார்?

0

சென்னை தி நகர் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வங்கி ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. நேற்று மாலை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர் அசோக் நகரைச் சேர்ந்தவர். தலைமையில் ஊழியர்கள் கேகே நகரைச் சேர்ந்த வினோத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது ஆகியோர் காரில் வந்து பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.

காரில் மீதம் ரூபாய் 52லட்சத்தை வைத்து இருந்தனர் . அப்போது சற்று தள்ளி காரை ஓரமாக நிறுத்துவதாக டிரைவர் காரை எடுத்துச் சென்றார்.

மூன்று பேரும் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பி விட்டு வந்தனர் ஆனால் சற்று தள்ளி காரை நிறுத்த கூறிய அம்ப்ரோஸ் வாகனம் காணாது அதிர்ச்சி அடைந்த மூவரும் அந்த பகுதி முழுவதும் தேடியும் அவரைக் காணவில்லை.

செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது ரூபாய் 52 லட்சத்துடன் டிரைவர் அம்ப்ரோஸ் தப்பிச் சென்றதை அப்போது அறிந்தனர்.

வேன் ஓட்டுநர் அம்புரோஸ் பணத்துடன் மாயமானாலும் அந்த வேனில் ஜிபிஎஸ் கருவி இருந்துள்ளது. அதை வைத்து போலீஸார் சோதித்தபோது அந்த வேன் ஆர்.கே.நகர் மணலி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்க பட்டது.

மேலும் அம்புரோஸ் மனைவி வியாசர்பாடியில் இருப்பது தெரியவந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் உறவினர் வீட்டில் 20 லட்ச ரூபாய் பதுக்கியது தெரிய வந்துள்ளது.
அந்த பணம் மீட்கப்பட்டது. மீதி பணத்துடன் தப்பிய அம்புரோஸைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இதேபோன்று பலமுறை பணத்துடன் வேன் ஓட்டுநர்கள் தப்பிச் சென்றதும் பின்னர் பிடிபட்டதும் நடந்துள்ளது.

தென்னை தோப்பை நாசம் செய்த யானைகள்?

0

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கமான தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்ச கரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களை சாகுபடி செய்துவந்துள்ளார். நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் இவரது தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது . காலையில் விவசாயி சக்திவேல் தனது தோட்டத்திக்கு சென்று பார்த்தபோது தனது தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் இரவு நேரத்தில் தனது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது அவருக்கு தெரியவந்தது. சுமார் 15 தென்னை மரங்களை யானைகள் சேதப்படுத்தியிருக்கும் என தெரியவந்துள்ளது. யானை சேதப்படுத்திய தென்னைமரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

0

பிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

நடிகர் பிரேம்ஜி ஹீரோவாகவும் அவருக்கு காதலியாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் 80 வயது கிழவி ஒருவர் வில்லியாகவும் நடிக்க இருக்கும் படம் ஒன்று தமிழில் உருவாகி வருகிறது.
ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா என்பவர் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் பிரேம்ஜி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் நாயகியாக வெப்சீரிஸில் நடித்த நடிகை ஒருவர் அறிமுகமாகிறார். மேலும் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா, பிரேம்ஜியை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் மாயாக்கா என்ற 80 வயது கிழவி ஒருவர் வில்லியாக நடிக்க இருப்பதாகவும் அவரது நகைச்சுவைத்தனமான வில்லத்தனத்தை சமாளிக்க முடியாமல் பிரேம்ஜி திணறுவது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் படமாக இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அடுத்த 30 நாட்களுக்கு பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கிராம பகுதிகளில் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் எப்படி இயங்குகிறது என்பது நகர்ப்புற வாசிகளுக்கு தெரியாது என்றும் அதை வெட்டவெளிச்சமாக்குவதே இந்த படத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது.

“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” – ட்ராவிட் அதிரடி.

0

மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ரா, சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடற்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார். பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடற்தகுதித் தேர்வைப் பெங்களூரிலுள்ள ட்ராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடற்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பும்ராவுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்த என்சிஏ தலைவர் திராவிட்டும், உடற்தகுதித் தேர்வாளர் ஆஷிஸ் கவுசி்க் ஆகியோர் திட்டமிட்டிருத்த நிலையில்; என்சிஏ அமைப்பில் பயிற்சி பெற ஆர்வமில்லாமல் விசாகப்பட்டிணத்தில் இந்திய அணியோடு பயிற்சியில் பும்ரா ஈடுபட்டுள்ளார். பும்ராவின் இந்த செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்த ராகுல் திராவிட்,  உடற்தகுதி தேர்வு நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘எனக்கு பும்ரா, திராவிட் விவகாரம் குறித்து தெளிவாக தெரியாது. ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று, உடற்தகுதி தேர்வை நிரூபித்து அதன்பின்தான் இந்திய அணிக்குள் வர வேண்டும். அதுதான் வழிமுறை’ என்றார். திராவிட் மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது, மிகச்சிறந்த வீரர், அவரின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். திராவிட் தலைமையில் என்சிஏ சிறப்பாக உருவாகும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.

0

இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரச்சாரத்துக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.க வின் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக டில்லி ராம் லீலா மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் டில்லியில் அங்கீகாரம் இல்லாத குடிசை பகுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் விளக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு களம் இறங்கியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது . ராம்லீலா மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் கிடையாது – பிரகாஷ் ஜாவடேகர்.

0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டி முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் “குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ஐ.நா கண்காணித்து, தானே முன்வந்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ” என கூறினார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “மம்தாவின் பொது வாக்கெடுப்பு கோரிக்கை ஆச்சர்யம் அளிக்கிறது. பார்லிமென்டை மக்கள் தேர்வு செய்துள்ளனர், அந்த பார்லியில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஐ.நா எப்படி தலையிட முடியும்.இந்த கோரிக்கையின் மூலம் நாட்டிலுள்ள 130 கோடி மக்களை மம்தா அவமதித்துவிட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை,சட்ட விரோதமாக குடியேறியவர்களை எந்த நாடும் அனுமதிக்காது” என்றார்.