ஓய்வு முடிவை மாற்றினார்… சென்னை சூப்பர்கிங்ஸ்ஸின் நட்சத்திர வீரர்?

ஓய்வு முடிவை மாற்றினார்... சென்னை சூப்பர்கிங்ஸ்ஸின் நட்சத்திர வீரர்?

ஓய்வு முடிவை மாற்றினார் பிராவோ சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாட தயார் என்று அறிவிப்பு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வென்று அதன் பிறகு அவர் காயம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 36 … Read more

ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற நினைவுபடுத்தும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்ற நினைவுபடுத்தும் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் “பாலியல் … Read more

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்!

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்!

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த மோசடி மன்னன்! உத்தர பிரதேசம் மாநிலத்தின் சாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் பங்கஜ் குமார் (வயது 30). இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். மஞ்சுவுக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய பங்கஜ் குமார் தீர்மானித்தார். இதையடுத்து திட்சாரி என்ற கிராமத்தில் நேற்று பங்கஜ் குமாரின் இரண்டாவது திருமணவிழா நடைபெற்றது. அப்போது தனது குடும்பத்தாருடன் அங்கு சென்ற சென்ற பங்கஜின் முதல் மனைவி மஞ்சு மணமேடையில் இருந்த … Read more

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு! உலகிலேயே முத்த மொழி தமிழ் தான் என்றும் கீழடியில் 3000 மற்றும் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதை நாம் பெருமையாக சொல்லி கொண்டிருக்கின்றோம் இந்த நிலையில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் இந்தோனேஷியாவில் உள்ள குகையில் கிடைத்துள்ளதால் அந்த குகையில் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது மனித வரலாற்றிலே மிகவும் பழமையானதாக கருதப்படும் … Read more

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள் அண்டத்தில் கோள்கள் எத்தனை இருந்தாலும், இன்னும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் சூரியன் என்பது ஒன்றுதான் என்பதே இன்று வரை உள்ள நிலவரம். இந்த நிலையில் சீனாவின் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் உள்ள ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள கோர்காஸ் என்ற நகரத்தில் நேற்று இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சூரியன் உதித்த சில … Read more

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் இராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாம் மதமாற்ற முயற்சியை இராமலிங்கம் தட்டிக்கேட்டதால் கொலை நடைபெற்றதாக இந்து அமைப்புகளின் கடுமையான அழுத்தம் காரணமாக 11 நபர்களை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி. … Read more

மார்கழி மாதத்தில் இவ்வளவு நன்மைகளா?

மார்கழி மாதத்தில் இவ்வளவு நன்மைகளா?

மார்கழி மாதம் கடவுக்கான மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பைப் பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். இந்த மாதத்தில் நோன்பு இருப்பது மிகவும் சிறந்தது. மார்கழியில் அதிகாலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மார்கழி மாதங்களில் … Read more

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது டெல்லியில் 2012 ஆம் ஆண்டு நெருப்பை என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட அவர் உடன் சென்ற நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் இதில் தொடர்புடைய ராம்சிங்,முகேஷ்,வினய் அக்சய் ,பவன் மற்றும் ஒரு சிறுவனையும் … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ.70 கோடி போனஸ் தந்த நிறுவனம்: ஊழியர்கள் மகிழ்ச்சி! அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 200 ஊழியர்களுக்கு ரூபாய் 70 கோடி போனஸ் தொகை அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற பகுதியில் உள்ள செயின்ட் ஜான் ப்ராப்பர்ட்டீஸ் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் இந்த நிறுவனம் … Read more

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்

மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’என்ற படத்தில் வில்லனாகவும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகவும் நடித்து வரும் அக்ஷய் குமார் தனது மனைவிக்காக விலையுயர்ந்த காதணி ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அந்த காதலை என்னவெனில் வெங்காயத்தில் செய்யப்பட்ட காதணி என்பதுதான் அதன் சிறப்பு. வெங்காயத்தின் விலை தற்போது விஷம் போல் ஏறி கொண்டிருக்கும் நிலையில் வெங்காயத்தை வைத்து பல்வேறு … Read more