Home Blog Page 5939

சுஷ்மா சுவராஜ் கூறிய கடைசி வரிகள்! இதை எதிர்பார்த்தேன்! இவர்களுக்கு எனது நன்றிகள்!

0

சுஷ்மா சுவராஜ் முன்னாள் டெல்லி முதல் அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார். இவர் உடல்நலக்குறைவால் அதிகாலை உயிரிழந்தார். அக்கட்சியினர் மற்றும் அவரை சார்ந்தோர் மீளா துயரத்தில் உள்ளனர். இதை அடுத்து சுஷ்மா சுவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றினை ட்வீட் செய்திருந்தார்.

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் கடந்த வருடம் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவ்வபோது அரசியல் பிரவேசம் செய்து வந்தார். இன்று அதிகாலை heart attack உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.

முதலமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். மிகவும் தயிரியமான பெண்மணிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் இவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக காஷ்மீர் மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. என்னுடைய வாழ்நாளில் இந்த தருணத்தை பார்ப்பதற்காகத் தான் காத்திருந்தேன்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முன்பாக நேற்றும், மாநிலங்களவையில் காஷ்மீர் மறுவரையறை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசியதற்கு வாழ்த்து தெரிவித்து சுஷ்மா சுவராஜ் ட்வீட் செய்திருந்தார்.

சுஷ்மா சுவராஜ் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அவரை பிரிந்து வாழும் மக்களுக்கு ஆறுதல் கூற முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

0

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஒபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் அவர் அமைச்சர் ஆக போகிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழக துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வமும் டெல்லி அரசியலில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தன் மகனை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்வம் காட்டவில்லை என்ற சந்தேகம் உள்ளது. காரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சரானால் மாநிலத்தில் தமிழக துணை முதல்வரான ஓ பன்னீர்செல்வம் கை ஓங்கி விடும் என்று எடப்பாடி தரப்பு அஞ்சுகிறது. இதையெல்லாம் கவனித்து கொண்டே ஒ பன்னீர்செல்வம் தரப்பு ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமாரை அமைச்சராக்கும் தங்கள் பணியை கவனமாக செய்து வருகிறது.

Who-is-the-Next-Union-Minister-from-Tamil-Nadu-News4-Tamil-Online-Tamil-News-Channel
Who-is-the-Next-Union-Minister-from-Tamil-Nadu-News4-Tamil-Online-Tamil-News-Channel2

இவர்களை சமாளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணி கட்சியான அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவியை பெற்று கொடுக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும் கடந்த காலங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததை காரணமாக வைத்து அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க பாஜக தரப்பும் தயாராக உள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தற்போதுள்ள மத்திய அமைச்சரவையை இந்த மாதத்தில்  விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்த விரிவாக்கத்தின் போது  எப்படியாவது அமைச்சர் பதவியை பெற்று விட பாமகவின் அன்புமணி ராமதாசும், அதிமுகவின் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். 

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது பற்றி பாஜகவின் அமீத்ஷா ஏற்கனவே சில யோசனைகளை ஓபிஎஸ்சிடம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் டெல்லியில் அமீத்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், அதனை மீண்டும் வலியுறுத்தி விட்டு சென்னை திரும்பியிருக்கிறார், இந்த நிலையில், பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாசும் பிரதமர் மோடி அவர்களை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா? ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா? குழப்பத்தில் பாஜக!

டெல்லி வட்டாரத்தில் நடக்கும் இந்த நகர்வுகளை பார்க்கும் பொது ஏற்கனவே அமைச்சராக இருந்த அனுபவமுள்ள அன்புமணி ராமதாசுக்கே அதிக வாய்ப்புள்ளது போல தெரிகிறது. இந்தச் சூழலில் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிராக உள்ள சி.பி.ஐ. வழக்கில், கீழ் கோர்ட்டில் பதியப்பட்ட குற்றப் பத்திரிகையை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கும் பாமகவினர், அன்புமணி அமைச்சராவதில் இனி பிரச்சனை இருக்காது என நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். 

பாஜக தரப்பும் தமிழகத்தில் திமுகவினரை சமாளிக்க அன்புமணி ராமதாஸ் தான் சரியான நபர் என்று கருதுகிறது. எப்படியிருந்தாலும் தமிழகத்தில் பாஜக கூட்டணி அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென நினைத்தால் ஓபிஸ் மகனுக்கும் குறைந்தபட்சம் இணை அமைச்சர் பதவியாவது வழங்கி தமிழகத்திற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தற்போது யாராவது ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரலாமா? அல்லது இருவருக்கும் தரலாமா? ஒருவருக்கு என்றால் யாருக்கு தருவது என்பது உள்ளிட்ட பல குழப்பங்களில் பாஜக தலைமை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

0

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள். இதையும் போனி கபூரே தயாரிக்க முன்வந்துள்ளார். இந்தப் படம் முழுக்க ஆக்‌ஷன் பின்னணி கொண்ட கதைக்களம் என்று இயக்குநர் எச்.வினோத் தரப்பிலிருந்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் அஜித் – எச்.வினோத் இணையவுள்ள படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்று தகவல் வெளியானது. ஆனால், முன்பே ஒப்புக்கொண்ட பணிகள் இருப்பதால் புதிய படங்கள் எதையுமே நான் ஒப்புக் கொள்ளவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அஜித் – எச்.வினோத் கூட்டணி படத்துக்கு அவர் இசையமைக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
‘தல 60’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலிருந்தே எச்.வினோத் – ஜிப்ரான் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள்.

அஜீத்துடன் முதன் முறையாக இணையும் இளம் இசையமைப்பாளர்

இதனால், ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் அஜித் – ஜிப்ரான் சந்திப்பு நடந்திருப்பதால், இந்தப் புதிய கூட்டணிக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள்.
முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தப்படவுள்ள இந்தப் படத்தின் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது
அடிச்சுத் தூக்குங்க ஜிப்ரான்..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

0

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர்.

மனித உடலில் எசன்சியல், நான்எசன்சியல் என இரண்டு வகையான அமிலங்கள் உள்ளன, அதாவது மனித உடல் உற்பத்தி செய்யும் அமிலம் நான்எசன்சியல் உடலால் உற்பத்தி செய்ய இயலாத அமிலம் எசன்சியல். இவ்வாறு மனித உடலால் உற்பத்தி செய்ய இயலாத இந்த வகை அமிலங்கள் அசைவ உணவு மூலமே நமக்கு கிடைக்கும். ஆனால் இதைக் கொடுக்கும் ஒரேஒரு சைவ உணவு முருங்கைக் கீரை மட்டுமே.

தினமும் காலையில் ஒரு பிடி முருங்கைக் கீரையை மிளகு, சீரகம் சேர்த்து நெய்யில் வதக்கி உண்ண ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும் இதன் கீரையும் பூவும் குழந்தையின்மை பிரச்சினைக்கும் சிறந்த மருந்தாகும்.

இதில் அதிக அளவில் ‘புரதமும்’ ‘வைட்டமின் சி’ யும் உள்ளது. மேலும் இதன் இலைகள் காய்ந்து போனாலும் இதனுடைய ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். இத்தனித்துவத்தை மற்ற கீரைகளில் காண முடியாது.

இனிமேலாவது மனைவிமார்களே வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உணவில் சேர்த்து குடும்பத்தைப் பராமரியுங்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தல தோனி இப்படி பண்ணிட்டாரே! வயரலாகும் புகைப்படம் உள்ளே!

0

கிரிக்கெட்டில் தல அனைவராலும் அழைக்கபடும் தொனி இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நபர். இந்திய அணியில் இருந்து 2 மாதம் விலகி சற்று ஓய்வு எடுத்து இராணுவ உடையில் கலக்கி வருகிறார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனி அணியில் இல்லாததால் டோனியின் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் அளிப்பர் என எதிர்பார்க்க பட்டது.

ஆனால் டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடும் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தன. ஆனால் அந்த வருத்தத்தை போக்க தோனி இராணுவத்தில் பணி புரியும் காணொளி புகைப்படங்களை கண்டு சந்தோசத்தில் உள்ளன.

தல டோனி காஷ்மீரில் வீரர்களுடன் ராணுவ உடையில் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து டோனி, வாலிபால் விளையாடும் வீடியோவை டோனியின் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது மட்டும் இல்லாமல் தொனி காலணியை சுத்தம் செய்யும் காட்சி புகைப்படமாக வந்துள்ளது. இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் இந்த எளிமையை கண்டு அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்

0

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்

தளபதி விஜய்யின் ‘பிகில்’ படமானது அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வரும் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, தற்போது சிறுசிறு காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புகூட சென்னைக்கு வெளியே, விலையுர்ந்த பைக் ஒன்றை விஜய் ஓட்டுவது போன்ற காட்சியைப் படமாக்கியது படக்குழு. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. தற்போது இந்தப் பாடல் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் பல பெண் ரசிகைகள் இப்போதே இந்தப் பாடலை தங்கள் காலர் டியூனாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்

இந்நிலையில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலில் விஜய்யுடன் இணைந்து ஒரு காட்சியில் தோன்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றியிருக்கிறார். சமீபத்தில்கூட, ‘அவெஞ்சர்ஸ்’பட புரோமோஷனுக்காக உருவான பாடலில்கூட ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கலாகத் தோன்றியிருப்பார்.

இருந்தாலும், படத்தில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘பிகில்’ படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் ஷாரூக் இணைந்து ஆடப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில், அது உண்மையில்லை என்றும் அதற்குப் பதிலாகத்தான் விஜய் ரசிகர்களுக்கு அட்லீ இந்த சர்ப்பரைஸைத் தரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்

நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.
அவரு பாட, இவரு ஆட… அட்டடடடடடா தளபதி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் இந்த பிகில்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையை தெறிக்கவிட்ட திமுக எம்.பி டி.ஆர் பாலு!

0

காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையை தெறிக்கவிட்ட திமுக எம்.பி டி.ஆர் பாலு!

பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பல முறை கூறிய காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நடந்த விவாதத்தில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பாஜக அரசின் இந்த முடிவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.டி. ஆர்.பாலு மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்றும், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டு சிறையில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

பாஜக அரசின் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த முடிவை எதிர்த்து விமர்சனம் செய்த அவரின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் பேசிய அவர் “உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் வரவில்லை. அவர்கள் நிலைமை என்ன? நாட்டில் என்ன எமர்ஜென்சியா நடக்கிறது? ராணுவத்தை துணையாக வைத்து கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியதை அவசரகதியில் நிறைவேற்றி உள்ளீர்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் இதற்காக முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தை முழுமையாக கேட்ட பின்புதான் இது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஏன் அதை செய்யவில்லை?” என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திருமாவளவன் சர்ச்சை பேச்சு! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம்? போராட்டத்தை கொச்சை படுத்துவதா?

0

பீட்டா என்றால் தமிழகத்தில் அனைவரும் அறிவர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய உணர்வு மிக்க விளையாட்டு ஆகும். பீட்டா என்ற அமைப்பு மாடுகளை துன்புறுத்துவது தவறு என்று ஜல்லிக்கட்டை தடை செய்தது. அந்த தடையை தமிழக மக்கள் மாணவர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் முன்னெடுத்து போராட்டம் செய்து அந்த தடையை தகர்த்து எடுத்தனர். இந்த போராட்டம் மெரினாவில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை மைய படுத்து கோலிவுட்டில் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்த படவிழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் விநியோகம் செய்யப்பட்ட சாப்பாடு பார்சலில் காண்டம் இருந்தது என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். காஞ்சிபுரம் அத்திவரதர், இன்றைய அரசியல், ஜல்லிக்கட்டு போன்றவை பற்றி திருமாவளவன் பேசினார். அவர் பேசியதில் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய பேச்சு தான் சர்ச்சைக்குரிய விசியம் அது தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன எனவும். இரவு நேரத்தில் போராட்ட களத்திலேயே பெண்களும் ஆண்களும் தவறான செயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது எனவும். மேலும் போராட்டம் முடிந்து பிறகு அனைவரும் சென்ற நிலையில் மெரினாவில் படகு ஓர மறைவுகளில் நிறைய காண்டம்கள் கிடைத்ததாகவும் என எனக்கு நிறைய பேர் கூறினர் என அவர் கூறினார்.

அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தினமும் பல்வேறு நிறுவனங்களும், உணவு பார்சல் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அப்படி கொடுக்கப்பட்ட பார்சலில் காண்டம் இருந்ததாகவும் சிலர் கூறியதாக திருமாவளவன் கூறினார்.

இது மெரினா புரட்சி படத்தை எடுத்தவர்களுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் சிலர் இதனை கூறினர். ஆனால் யார் அப்படி சொன்னது என்று என திருமா குறிப்பிடவில்லை. உணவுப் பார்சல்களில் காண்டம் இருந்தது என்றால் அதனை ஓபன் செய்த மறுநிமிடமே கொடுத்த நபரிடம் கேட்டிருக்கலாம் அல்லவா என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை திருமாவளவன் கொட்சை படுத்துவதாக என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அப்பாடி! நேர்கொண்டபார்வை படம் இப்படி இருக்கா? பார்த்தவர்கள் கருத்து இதோ!

0

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி தற்போது சென்னையில் திரையிட்டு வருகின்றனர்.

இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக!

பார்த்தீர்களா? நேர்கொண்ட பார்வை படத்தின் பத்திரிக்கையாளர் கட்சியின் கருத்துக்கள். இந்த முறை தல திருவிழா உண்டு என்பதை இந்த பதிவுகள் கூறுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கூட்டணி கட்சியை கிழித்து தொங்கவிட்ட வைகோ? காங்கிரஸ் தான் குற்றவாளி! துரோகி!

0

கஷ்மீர் பிரச்சனைக்கு நேற்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது.,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது.

திரு வைகோ காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உதவி உடன் தான் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார்.

செய்தியாளர்களிடம் கூறியதாவது, காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாஜக அடித்த தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை முழுமையாக தூக்கி எறிய வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.

மேலும் பேசிய அவர், ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையிலடைத்தது காங்கிரஸ். கார்கில் யுத்தத்தில் காஷ்மீரை பாதுகாக்க தமிழக இளைஞர்கள் பங்கெடுத்து ரத்தம் சிந்தினர். ஆனால் மத்திய அரசோ காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது.

மேலும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கூட காங்கிரஸ் பெரிதாக எதிர்க்கவில்லை என்பதும், ரத்து செய்த விதத்தைத்தான் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கின்றது என்பதும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்