காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!

Karnataka election!! EPS OPS Confused Again!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!

new-resolution-in-the-assembly-12-hours-work-seaman-question

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி! தமிழக சட்டமன்றத்தில் நேற்று தொழிலாளர் மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றி அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றினர். ஆளும் திமுக அரசின் இந்த செயலை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை … Read more

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!   

Central government warning to 8 states including Tamil Nadu!! Increasing spread of Corona!!

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 500-க்கும் மேல் கொரானா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று பாதிப்பு 528 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 258 ஆண்கள் … Read more

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!

This is the last phase of my cricket life.. Dhoni melts about the fans!

என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்! 16-வது ஐபிஎல் டீ 20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று  வெள்ளிக்கிழமை இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் … Read more

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? - ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!! பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் … Read more

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் – வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் - வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

சூடான் நாட்டில் இதுவரை 80 தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், சூடான் உள்நாட்டு போரில் தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. அது தொடர்பான பட்டியலை தயாரித்து வருகிறோம். உக்ரைன் … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்!

கேரள மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள். கேரள மாநிலம் அதிரப்பள்ளி மலக்கம்பாறை பகுதியில் உள்ள சாலையில் திருச்சூர் மாவட்டம் முண்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வழிமறித்து நிற்பதை கண்ட இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை தாக்குவதற்கு யானை ஓடவே, இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் தங்கள் இரு சக்கர … Read more

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் அகமது ஹசன் ரிபாய் எனும் 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட இவர் திடீரென உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மறுநாள் திங்கட்கிழமையன்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம்!

மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம்!

மெரினாவில் பிறந்தநாளை கொண்டாட வந்த இடத்தில் நடந்த சோகம். கடையில் திருட வந்ததாக நினைத்து வாலிபரை கடை ஊழியர் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை மெரினா பொது பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் படுகாயங்களுடன் கிடப்பதாக அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று வாலிபர்களையும் … Read more

பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

கர்நாடக தேர்தல் வரலாற்றில் பாஜக வெற்றியே பெற்றிடாத தொகுதியிலிருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தலையொட்டி பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகா வருவதுடன் தேவனஹள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை பேரணியில் பங்கேற்றார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை … Read more