கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!

0
153
#image_title

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டு 12 வயது சிறுவன் பலி!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் அகமது ஹசன் ரிபாய் எனும் 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று ஐஸ்கிரீம் சாப்பிட்ட இவர் திடீரென உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் மறுநாள் திங்கட்கிழமையன்று உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் முடிவில், சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் அவனது உடலில் விஷம் கலந்துள்ளதாக தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் எலி விஷம் கலந்து இருந்ததாக தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஐஸ்கிரீம் அவனுக்கு அளித்தது யார் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது உறவினரான பெண் சிறுவனுக்கு ஐஸ்கிரீம் அளித்தது தெரிய வந்தது.

அவரை போலிஸ் காவலில் எடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினரான பெண் ஒரு குடும்பமே சாப்பிடும் அளவிற்கு ஐஸ்கிரீம் வாங்கி வந்த நிலையில் சிறுவனின் தாயும் சகோதரர்களும் வீட்டில் இல்லாததால் சிறுவன் மட்டுமே வீட்டிலிருந்த வேலையில் அவன் மட்டுமே உயிரிழந்துள்ளான்.

ஒருவேளை குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த வீட்டில் இருந்திருந்தால் அனைவரும் உயிரிழப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.

author avatar
Savitha