கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!

கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்து – 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கடப்பந்தாங்கல் அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் லோடு ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த salcomp என்ற தனியார் செல்போன் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், பணிக்கு சென்ற … Read more

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழப்பு-விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு!

மயிலாடுதுறையில் லிப்ட் அருந்து கீழே விழுந்ததில் கடைஊழியர் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விபத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றசாட்டு. மயிலாடுதுறை போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் சோழவேந்தன். இவருக்கு கமலா என்ற மனைவியும் லோகேஷ்(11) மோகித்(8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சோழவேந்தன் மயிலாடுதுறை மகாதான தெருவில் மகாலட்சுமி என்ற சில்வர் பாத்திரம் மற்றும் பர்னிச்சர் மார்ட்டில் விற்பனையாளர் மற்றும் அனைத்து பணிகளையும் செய்யும் ஊழியராக இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். … Read more

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!! சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று … Read more

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மண்டபம் தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பகுதியில் உள்ள … Read more

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!! கள்ளக்குறிச்சி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது திறந்து 3 நாளில் மூட வேண்டும் பகிரங்கமாக மிரட்டப்படுவதால் கண்ணீருடன் கதறி கதறி அழும் விதவை பெண். தர்ணா போராட்டத்தால் பரபரப்பு. மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏ குண்டர்கள் வைத்து மிரட்டப்படுவதாக கண்ணீரும் கதறலுமாக விதவைப் பெண் … Read more

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!

கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!! இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37,093 ஆக உயர்வு.கடந்த 24 மணி நேரத்தில் , 3,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.21 பேர் உயிரிழப்பு. வாராந்திர பாதிப்பு சதவீதம் 3.81 … Read more

அதிரப்பள்ளியில் மீண்டும் தும்பிக்கையில்லாத காட்டுயானை குட்டி!!

அதிரப்பள்ளியில் மீண்டும் தும்பிக்கையில்லாத காட்டுயானை குட்டி!!

அதிரப்பள்ளியில் மீண்டும் தும்பிக்கையில்லாத காட்டுயானை குட்டி!! கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள அதிரப்பள்ளி உள்ள ரப்பர் தோட்டத்தில் வந்த யானை கூட்டத்தில் குட்டியானை ஓன்று தும்பிக்கையில்லாமல் காணப்பட்டது. இந்த குட்டியானையின் தும்பிக்கை எதாவது வனவிலங்கு தாக்குதலில் துண்டிக்கப்பட்டதா அல்லது வேறு எதாவது காரணத்தால் தும்பிக்கையை இழந்ததா என தெரியவில்லை. தும்பிக்கையில்லாமல் யானைக்குட்டியால் நீண்ட காலம் உயிர் வாழ முடியுமா என கேள்வி எழுந்தது. வனத்துறையினர் இந்த யானைகுட்டியை கண்காணிக்க முடிவு செய்த நிலையில் யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றதால் … Read more

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரம்! முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு குறித்து  நேரில் ஆஜராகி விளக்கம்-உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! தென்காசி காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன் ஜாமின் கோரி உறவினர்கள் தாக்கல் செய்த மனுவில் கிருத்திகா பட்டேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேல் அவரது பெற்றோர் … Read more

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!!

சொத்தை எழுதி வாங்கிவிட்டு கைவிட்ட கொடுமை!! ஸ்டரச்சர் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த மூதாட்டி!! கரூர், ஜவஹர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது பராமரிப்பில் அக்கா சரஸ்வதி (வயது 85) படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை இவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டரச்சரில் படுக்க வைத்து கூட்டம் நடைபெறும் அறைக்கு தள்ளிக் கொண்டு … Read more