அதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!! 

0
78
#image_title

அதிரடியான நிபந்தனை வைத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!!! அதிர்ச்சியில் உறைந்த சோனியா காந்தி!!!

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அதிரடியாக நிபந்தனை வைத்துள்ளார். இந்த நிபந்தனையை கேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு அவர்கள் இராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்படும் பொழுது டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயம் தனது கைதை நிறுத்தக் கோரி சந்திரபாபு நாயுடு அவர்களின் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

அதாவது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களிடம் பேசி சந்திரபாபு நாயுடு அவர்களின் கைதை நிறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு அவர்கள் சார்பாக கோரிக்கை அளிக்கப்பட்டது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் தங்கை ஷர்மிளா அவர்கள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் கட்சியில் இருந்து விலகி தனியாக கட்சி துவங்கியுள்ளார். மேலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் தாயாரும் ஷர்மிளா அவர்களுடன் இணைந்துள்ளார். இருவரும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை ஷர்மிளா அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு “முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அனைவரும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி அமைய வேண்டும்” என்று சோனியா காந்தி அவர்கள் கூறியிருக்கிறார்.

சோனியா காந்தி அவர்கள் கூறியதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் “காங்கிரஸ் கட்சியுடன் என்னையும் என் கட்சியையும் இணைக்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் அரசியலில் இருந்து ராகுல் காந்தி அவர்கள் ஓய்வு பெற வேண்டும்” என்று அதிரடியான நிபந்தனையை வைத்துள்ளார். இந்த நிபந்தனையை கேட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.