மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

Photo of author

By Divya

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

Divya

மலச்சிக்கல்? வயிற்றில் தேங்கி கிடக்கும் மலங்கள் அனைத்தையும் நிமிடத்தில் வெளியேற்றும் அதிசய பானம்!!

நம்மில் பலர் காலைக்கடனை சரியாக முடிக்காமல் அதை அடக்கி வைத்து வருவதனால் மலச்சிக்கல் பாதிப்பால் அவதிப்படுகிறோம்.இதனால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதை சரி செய்ய முறையான இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதன் மூலம் விரைவில் அந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

தேவையான பொருட்கள்:-

*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*இந்துப்பு – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி சோம்புசேர்த்து கொள்ளவும். சோம்பு நீண்ட நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதன் நிறம் கொதிக்கும் நீரில் இறங்கும் வரை விட்டால் போதும். அதோடு 1 சிட்டிகை அளவு இந்துப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு சுத்தமான விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வெது வெதுப்பாக இருக்கும் போதே பருக வேண்டும்.

இந்த ரெமிடியை வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இந்த குடித்த உடன் உணவு எடுத்து கொள்ள கூடாது. அடிக்கடி வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். மலம் முழுவதும் வெளியேற்ற பட்டதும் இளநீர், தயிர் சாதம் இதுபோன்ற குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.