இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி! ஆவேஷ்கான் பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

0
68

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணிக்கும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்தியாவும்,வெற்றிப்பெற்றனர். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில், 2 அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனடிப்படையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன், ருதுராஜ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் வழங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார், இவரைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன், கேப்டன் ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப தொடங்கினர்.

இதன்பிறகு ஹர்திக் பாண்டியா தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் 15 ஓவர் வரையில் நிதானம் காட்டிய இந்த ஜோடி அதன் பிறகு தங்களுடைய அதிரடி ஆரம்பித்தனர்.

ஹர்டிக் பாண்டியா 31 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இன்னொரு முனையில் அதிரடி ஆட்டம் காட்டிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் தன்னுடைய முதல் அரைசதத்தை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பதிவுசெய்தார்.

கடைசியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை சேர்த்தது. தென்ஆப்பிரிக்க அணியின் சார்பாக நிகிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

யான்சென், நோர்ட்ஜெ, மகாராஜ், உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது அந்த அணியின் கேப்டன் காயத்தால் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 14 ரன்னிலும், பிரிட்டோரியஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக வந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா இறுதியில் 16.5 ஓவர்களில் 87 ரன்களில் ஆட்டமிழந்தது இதன் காரணமாக, இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியின் சார்பக அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 அணிகளும் 2-2 என சமநிலையில் இருக்கின்றன. தொடரை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் 5-வது டி20 போட்டி நாளையதினம் நடைபெறுகிறது.