ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அதிமுகவின் உள்விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைய வேண்டும் என்று பிரதமரோ அல்லது அமித்ஷாவோ பேசியதில்லை. இனிவரும் காலங்களிலும் அப்படி எதுவும் நடக்காது. பாஜக தேசிய கட்சி, தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை இருக்கும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பு … Read more

அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சிதம்பரத்தில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அண்ணாமலை பங்கேற்காமல் போனது கட்சியினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலராது என்று தெரிவித்து என் கூட இருக்க வந்தவர்கள் இடையில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் … Read more

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்!

If you find this item alone, you will get a prize of Rs 100000! Go ahead now!

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்! சென்னை மாநகரத்தில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள.இந்தியாவில் அதிகம் கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்கள் வரிசையில் டெல்லி ,மும்பைக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை சென்னை தான் பெற்றுள்ளது. இவை குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்கும்,போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை  கண்டுபிடிக்க உதவுகின்றது.மேலும் கொலை ,திருட்டு ,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் … Read more

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 34 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 91% குறைவாக 3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் 16 மாவட்டங்களில் மழை பெய்யவில்லை 22 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை … Read more

தேர்தல் ஆணையர் தேர்வில் கொலீஜியம் குழு தலையீடா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை!

தேர்தல் ஆணையர் தேர்வில் கொலீஜியம் குழு தலையீடா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை!

நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்ற கொலிஜியம் முறையை தேர்தல் ஆணையர்கள் நியமனத்திலும் செயல்படுத்த உத்தரவிடக்கோரி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று அமர்வு கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த வழக்கு … Read more

தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!

தமிழகத்தில் அசுர வளர்ச்சியில் பாஜக! அண்ணாந்து பார்க்கும் திராவிட கட்சிகள்! எச்சரிக்கும் முக்கிய நபர்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். ஆனாலும் அவ்வப்போது அதிமுக தொடர்பான கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, அதிமுகவில் உள்ள பிரச்சினைகளையும் அதில் சுட்டிக்காட்டி வருகிறார். அந்த விதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் … Read more

தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

தமிழக ஆளுநர் அவர்களை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார் அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே போதை பொருள் கட்டுப்படுத்துவதை நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழக அரசால் தடுக்க இயலவில்லை என்று கூறினார். அதோடு அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருள் கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். அதோடு இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் மனு வழங்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆகவே மதுபானங்களில் மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை மாநகராட்சி 165 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்று பணியாற்றி வருபவர் நாஞ்சில் பிரசாத் உடல்நலக் குறைவு காரணமாக, இவர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நாஞ்சில் பிரசாத் மாநகராட்சி தேர்தலில் 165 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், கடந்த … Read more

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

ஆளுநரை புகழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி! வெளுத்து வாங்கிய திமுக எம்பி!

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டை புகழும் எதிர்க்கட்சியினரை என்ன சொல்வது? இதனைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று திமுகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக ஆளுநரை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த புகார் மனுவையும் வழங்கினர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு … Read more

2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

2023 பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தும் தமிழகம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் சாசன விதிகள் தொடர்புடைய மனுக்கள் என்பதால் 2018 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், கிருஷி கேஷ் … Read more