இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!

People understood that there are many "sirs" in both the clubs!! Memes that spread on the Internet!!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது  ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த நகரங்களாக சென்னையும் திருச்சியும் தேர்வு!!

Chennai and Trichy voted as the best cities for women in India

அவதார் குழுமம் 2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில், மற்றும் அவதார் குழுமம் 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தினார்.அதன் படி … Read more

UmagineTN 2025: ஸ்டார்ட் அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு: தமிழக அரசின் அற்புத முயற்சி 

UmagineTN 2025

UmagineTN 2025: சென்னையில் இந்த மாதம் 9, 10 ஆம் தேதிகளில், உமாஜின்(UmagineTN 2025) தகவல் தொழில்நுட்ப மாநாடு நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் உமாஜின் 2025 மாநாடு நடக்க உள்ளது. இதில் உலகில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பேச்சாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மாநாட்டில், பெமா நிறுவனத்தின் வல்லுனர்கள், அமெரிக்க வல்லுனர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், … Read more

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!! மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!

Special buses for Pongal!! Municipal Transport Corporation Notice!!

தமிழ்நாடு அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 முதல் 13 வரை 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்: கோயம்பேடு: கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். மாதவரம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம், திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை … Read more

சென்னை மக்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி.. பயணிகளுக்கு ஸ்மார்ட் அட்டை!! இனி டென்ஷனே வேண்டாம்!!

Smart card for travelers

சென்னை: சென்னை பேருந்து பயணிகளுக்கு வந்த இன்ப அதிர்ச்சி வரப்போகும் ஸ்மார்ட் அட்டை. சென்னையில் உள்ள மக்கள் மின்சார ரயில் மெட்ரோ ரயில் பேருந்து போன்ற சேவைகளை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதே, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையை மாற்றி அமைக்க தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்கும் முறையை இன்று அறிமுகப்படுத்த உள்ளார். இதன் மூலம் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu from today till 9th!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை ஒரு சில மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை … Read more

கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் பெண் பலி!! நடவடிக்கை எடுக்குமா அரசு?

Woman dies after drinking drinking water mixed with sewage!! Will the government take action?

சென்னை:  மாநகராட்சி ஒன்பதாவது வார்டு திருவொற்றியூர் குப்பம் அப்பர் நகரை சேர்ந்த 10 பேருக்கு நவம்பர் 29 இல் திடிரென  வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்களை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள். பின்னர் காலரா ஹாஸ்பிடலில் இந்த 10 நபர்களையும் அட்மிட் செய்யப்பட்டனர். மேலும் அதில் 5 பேர் நலமுடன் வீடு திருப்பினர். அதில் அட்மிட் செய்யப்பட்ட  65 வயதான ஒரு பெண் தீவிர மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவர் இன்று அதிகாலை … Read more

“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!

சென்னையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான EDII – TN ஆனது மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் நடைபெறும் இடமானது EDII நிறுவனத்தின் வளாகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் 7 … Read more

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் திமுக அரசு ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!!

BJP State President at Annamalai X Site Protection for Criminals in DMK Govt Rule!!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு பேரணிக்கு அனுமதி மறுத்தோடு மகளிரணி நிர்வாகிகளே வீட்டு காவலில் வைத்திருந்தது. இந்த விடியா திமுக அரசு ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு சரித்திர பதிவேடு வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக சுற்றி  கொண்டிருக்க அனுமதி வழங்கிய அரசாங்க கருதப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு … Read more

யார் அந்த சார்? ‘நேர்மையான விசாரணை தேவை’!! திருமாவளவன் உருக்கம்!!

Who is that sir? 'Honest investigation required'!! Thirumavalavan melting!!

சென்னை: திருமாவளவன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: “மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம். அந்த … Read more