சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

சேலம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம். சேலம் கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதால் சர்ச்சை. சேலம் எடப்பாடி அருகே கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை.இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி … Read more

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் … Read more

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

விழுப்புரம் : ஜானகிபுரம் பகுதியில் 6 வயது கொண்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 14 முதல் 17 வயதுடைய 4 இளைஞர்கள் கடந்த 29 ஆம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை உள்ளது. உரிய இழப்பீடு மற்றும் நிரந்திர வேலை … Read more

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை. மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர். கோடை தொடங்கியதில் இருந்து வேலூரில் அதிகப்படியான வெயில் கொளுத்தி வருவதால் மதியம் வரை 100 நாள் வேலை செய்வதில் சிரமம் உள்ளது. ஆகவே கோடை … Read more

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் … Read more

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை அதிகாரி) நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இவ்வாறு  மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியதாவது,என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு … Read more

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

கம்மாளப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம். இதன் காரணமாக காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம். தமிழகம் முழுவதும் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 385 கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கம்மாளப்பட்டி … Read more

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்! கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் அவ்வப்போது வந்து செல்லும். இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் … Read more

சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

A gang of 5 brutally raped a 14-year-old girl in Salem!

சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தையும் இருக்கும் வினித் என்ற நபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பழகி வந்துள்ளார், இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியிடம் வெளியில் அழைத்து செல்வதாக … Read more