ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு நிலவுவதால் நேரடியாக வினியோகம் செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு கையில் பணம் கொடுத்து வந்தன.ஆனால் கடந்த ஆண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்து அதன்படி அன்றில் இருந்து தற்போது வரை ஏடிஎம் மூலமாகவே தொழிலாளர்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு வால்பாறை மற்றும் அதன் சுற்றியுள்ள பல … Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம்!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் … Read more

“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!

"கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்" என வந்த சோகம்!

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட … Read more

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் கலந்தாய்வு இணையவழி சேர்க்கை கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது.இணைய வழியிலேயே மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்யும் வகையில் இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த இணைய வழி கலந்தாய்வில் தற்போது வரை 1.53 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.23 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். … Read more

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்: இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என தகவல்!

கடலூரில் 8 டன் அளவுள்ள தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குட்கா, பான், புகையிலை போன்ற போதைப் பொருட்களை தடை விதித்துள்ளது. இருந்தாலும் இவைகள் கடைகளில் அதிக விலை கொடுத்து விற்கப்படுகிறது. எனினும் இது முழுமையாக தடை செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடலூரில் கே.என் பேட்டை பகுதியில் உள்ள திருப்பதி நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பான் புகையிலை போன்றவைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் … Read more

வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வைட்டமின் ஏ மருந்து வழங்கும் முகாம் 24 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம்:! குழந்தை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ மருந்து மருத்துவ முகாமின் மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த வைட்டமின் ஏ மருந்தானது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. தற்போது நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.இதனால் மக்கள் கூட்டம் கூடினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.ஆனால் இந்த விட்டமின் ஏ மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.எனவே தான் தமிழக அரசு ஐந்து வயதுக்கு உட்பட்ட … Read more

கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஐ.டி இளைஞர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியானேஸ்வரன் (29).இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பினை முடித்து விட்டு பெங்களுரில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்.தற்பொழுது கொரோனா ஊரடங்கால் வொர்க் பிரம் ஹோம் (work from home)செய்து வருகிறார்.வேலை பார்த்த பின்பு பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கினார் தியானேஸ்வரன். இவர் பாரம்பர்யமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கூறுகையில், கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருப்பதாகவும் பொழுது போவதற்காக தனது அப்பாவுடன் … Read more

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்துவருகிறது. கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. என்று கிராமிற்கு 28 ரூபாய் குறைந்தும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 224 … Read more

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி திறக்கபடுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும்  மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு … Read more

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை?

தமிழகத்தை பொருத்தவரையில் வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு வாரத்திற்க்கு முன்பிலிருந்தே,விநாயகர் சிலையை வாங்க ஆரம்பித்து விடுவர்.மேலும் விநாயகர் சதுர்த்தியிலிருந்து,3,5,7நாட்கள் என பூஜை செய்து பின்பு பவானி ஆறு,காவிரி ஆறு,போன்ற சிறப்புமிக்க நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், கொரோனா பரவுதலை கருத்தில்கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. … Read more