போட்டுட்டாங்கடா அடுத்த காவித் துண்டா!

M.G.R

அண்மைக் காலமாகவே சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, கலங்கபடுத்துவது இதுபோன்ற இழிசெயல்களை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஜாதி மதங்களை கடந்த சமயத்தின் அடையாளமாகவும் ஏழை மக்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் குடிகொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நிகழ்ந்திருக்கிறது. புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   … Read more

பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா ?

pakrith date

உலகிலுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை பக்ரீத். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் பத்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது.  அன்று ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட்டு, அதனை ஏழை எளியோர் உடன் பகிர்ந்து,உண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியை குறித்து தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்  அறிவிப்பு … Read more

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக இந்த ஊதிய உயர்வு அமல்படுத்த முடியமால் போனது. முன்பு இருந்ததைவிட இந்த கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள்அதிக வேலைச் சுமை உடன் தனது உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா பரவல் … Read more

சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Madras High Court Madurai Bench

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி தாண்வன் காணொளி காட்சி மூலம் விசாரித்தார். தொடக்க நிலை விசாரணை நடைப்பெற்று கொண்டிருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முருகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து … Read more

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

Sathankulam Case CBI Officer infected by Coronavirus

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் லாக்கப்பில் மரணமடைந்தனர்.இதற்கு காவல்துறையினர் விசாரணையின் பேரில் நடத்திய கொடூர தாக்குதல் தான் காரணம் என கூறப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை

TN Assembly-News4 Tamil Online Tamil News1

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூடுதலாக … Read more

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அவ்வப்போது சக கைதி மற்றும் சிறை பெண் காவலர்களிடம் நளினிக்கு சிறிய மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில் நேற்றிரவு துணியால் நளினி கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் கூறிய நளினியின் வழக்கறிஞர், நளினியின் … Read more

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.   குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி திமுக … Read more

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் பலர் வெளிநாட்டிலேயே தங்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அந்தந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழு பாதுகாப்புடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சிறப்பு விமானத்தின் மேலும் அழைத்து வரப்பட்டனர்.   இந்நிலையில் பல மாதங்களாக தன்னுடைய மகன் சஞ்சையை காணாமல் இருந்த விஜய், தற்போது மகனை சந்தித்து குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் படித்துவந்ச சஞ்சய் … Read more