இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!!

0
115
#image_title

இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!!

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கொண்டைக்கடலையை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

கொண்டைக் கடலையில் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை என்று இரு வகைகள் இருக்கிறது. இதில் அதிக ப்ரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது. உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டு வரலாம். உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் அதை குறைக்க கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டு வரலாம். ஊறவைத்த கொண்டைக்கடலையில் அதிகளவு வைட்டமின் மற்றும் மினரல் இருக்கிறது. இவை சரும பிரச்சனையை சரி செய்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தினமும் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.