தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
25
#image_title

தலைவலி முதல் தூக்கமின்மை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு இருக்கிறது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நவீன கால வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு முறையால் அனைவரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் சுவையை மட்டுமே கொண்டிருக்கிறது தவிர ஆரோக்கியம் என்பது சிறிதளவும் இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்த ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும்
உடல் சோர்வு,மன சோர்வு,தூக்கமின்மை,மன அழுத்தம்,தலைவலி உள்ளிட்ட பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்கு வீட்டு வைத்தியம் சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை எள் – 1 தேக்கரண்டி

*கசகசா – 1 தேக்கரண்டி

*பாதம் பருப்பு – 10

*பால் – 1 டம்ளர்

*கற்கண்டு – 2

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளை எள் 1 தேக்கரண்டி,கசகசா 1 தேக்கரண்டி மற்றும் பாதம் பருப்பு 10 என்ற எண்ணிக்கையில் சேர்த்து மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.மிதமான தீயில் அவை கொதிக்கும் நேரத்தில் தயார் செய்து வைத்துள்ள பொடி 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

பின்னர் சுவைக்காக 2 கற்கண்டு சேர்த்து கொள்ளலாம்.சர்க்கரைநோய் பாதிப்பு இருப்பவர்கள் இனிப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.