நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

0
46
#image_title

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும்.

ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கற்பூரம்(சூடம்) – 2

செய்முறை:-

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அதை மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடம் சூடு படுத்தவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து சூடம்(கற்பூரம்) 2 என்ற எண்ணிக்கையில் எடுத்து அதில் போட்டு கலக்கி கொள்ளவும்.இந்த எண்ணெயை மார்பின்(நெஞ்சு) மேல் தடவி வந்தோம் என்றால் தீராத நெஞ்சு சளி பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும்.

தீர்வு2:

தேவையான பொருட்கள்:-

*புதினா இலை – 5 முதல் 6

*கருப்பு மிளகு – 3 முதல் 5

செய்முறை:-

ஒரு பவுலில் 5 அல்லது 6 புதினா இலைகளை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை வாயில் போட்டு மெல்லவும்.அதோடு 3 முதல் 4 கருப்பு மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வர நெஞ்சு சளி பாதிப்பு முழுமையாக சரியாகிவிடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லி சாறு – 1/4 டம்ளர்

*தேன் – சிறிதளவு

*மிளகு – 4

செய்முறை:-

ஒரு உரலில் 4 கருப்பு மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.பின்னர் பெரு பவுலில் இதை சேர்த்து அத்தோடு 1/4 டம்ளர் பெரு நெல்லி சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் நெஞ்சு சளி,இருமல் உள்ளிட்ட பாதிப்பு விரைவில் சரியாகி விடும்.