பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!
இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.
மூட்டுவலி வரக் காரணங்கள்:-
*உடல் பருமன்
*முதுமை
*எலும்புகளில் அடிபடுதல்
தேவையான பொருட்கள்:-
*இலவங்கம் – 2
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*துளசி – 10 இலைகள்
*இஞ்சி – 1 துண்டு
*தேன் – சிறிதளவு
அல்லது
எலுமிச்சை சாறு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 இலவங்கம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 10 துளசி இலைகள் மற்றும் 1 துண்டு இஞ்சி சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இவற்றை வடிகட்டி தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து எடுத்து வருவதால் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகள் நாளடைவில் குறையும்.
குறிப்பு:-
மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்நிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட உணவு பொருளான . இலவங்கம், அதிகளவு குர்குமின் கொண்ட மஞ்சள், ஒளிவிக் ஆசிட் கொண்ட துளசி மற்றும் ஆன்டி பயோடிக் பண்புகள் கொண்ட இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க முடியும்.