கற்பக மூலிகைகளாக பயன்படும் கீரைகள்!!! அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன!!?

0
31
#image_title

கற்பக மூலிகைகளாக பயன்படும் கீரைகள்!!! அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன!!?

கற்பக மூலிகைகள் என்று அழைக்கப்படும் சில கீரைகளின் வகைகளில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தெளிவாக தெரிந்து கொண்டு நீங்களும் பயன்பெறலாம்.

நமக்கு தெரிந்த கீரைகளில் சில கீரைகளை பற்றியேம் அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் எதற்கு மருந்தாக பயன்படுகின்றது என்பது பற்றியும் மேலோட்டமாக தெரியும். ஆனால் நமக்கு தெரியாத சில சிறப்பம்சங்களும் கரைகளில் இருக்கின்றது.

ஒரு சில கீரைகள் ஒரு சில முக்கியமான நோய்களை தீர்க்க வல்லது. உதாரணமாக முருங்கை கீரை ஆண்மையை பலப்படுத்தும். கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். மணத்தக்காளி வாய்ப்புண்களை குணப்படுத்தும் என்று தெரியும். ஆனால் இந்த வகையிலான கீரைகளில் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான்.

முருங்கை கீரை ஆண்மையை மட்டுமே குணப்படுத்தும் கீரை அல்ல. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. அதே போல ஒவ்வொரு வகையிலான காலையிலும் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கலைகளும் சிறப்பம்சங்களும்…

* கரிசலாங்கண்ணி கீரையை கேள்விப்பட்டிருப்போம். இதை வைத்து நரம்புத்தளர்ச்சியை.குணப்படுத்தலாம். அதே போல ஆண்மை தன்மை குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் இந்த கரிசலாங்கண்ணி கீரையை எடுத்துக் கொண்டால் ஆண்மை குறைவு சரியாகும்.

* முன்பு கூறியது போலவே மஞ்சள் காமாலை நோயை கீழா நெல்லி கீரை குணப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் தோல் சார்ந்த வியாதிகளையும் கீழாநெல்லி குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.

* சுக்கான் கீரையை எடுத்துக் கண்டால் ஈரல் பலமடைகின்றது. அதே போல இதயத்திற்கு வலிமை கிடைக்கின்றது. இந்த கீரையை விஷக்கடிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் காசநோயை குணப்படுத்த சுக்கான் கீரையை மருந்தாக பயன்படுத்தலாம்.

* நாம் காணும் தொல்லையில் இருந்து விடுதலை பெற நொச்சி இலையை பயன்படுத்தலாம். மூட்டு வலி இருக்கும் நபர்கள் நாசகார இலையை பயன்படுத்தி மூட்டுவலியை குணப்படுத்தலாம்.

* மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நாம் பொன்னா விரை கீரையை பயன்படுத்தலாம். பொன்னா விரை கீரை மலமிளக்கியாக செயல்படுகின்றது.

* முருங்கை கீரையை நாம் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகிறோம். இந்த முருங்கைக் கீரையானது இரத்தத்தை விருத்தி அடைய செய்கின்றது.

* வல்லாரை கீரையை நாம் நினைவாற்றல் அதிகரிக்க பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் நாம் வல்லாரை கீரையை நரம்புத் தளர்ச்சி நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம். அதே போல நமக்கு தொழுநோய்கள் இருந்தால் அதை குணப்படுத்தும் வல்லாரை கீரையை பயன்படுத்தலாம்.