இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

Photo of author

By Divya

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

Divya

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

நெஞ்சு சளி, வறட்டு இருமல், காய்ச்சலுக்கு இயற்கை வழியில் தீர்வு இதோ…

*சித்தரத்தை

இதை பொடித்து வாயில் போட்டு சாப்பிட்டால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

*சித்தரத்தை
*தேன்

சித்தரத்தையை அரைத்து பொடியாக்கி தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

*சித்தரத்தை
*திப்பிலி
*அதிமதுரம்

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு சித்தரத்தை + திப்பிலி + அதிமதுரம் பொடியை சேர்த்து காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி, வறட்டு இருமல், காய்ச்சல் சரியாகும்.

*சித்தரத்தை
*சுக்கு
*மிளகு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடியை சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

*பூண்டு
*சித்தரத்தை பொடி
*மிளகுத் தூள்
*தேன்
*பால்

ஒரு அளவு பாலில் 1/4 ஸ்பூன் சித்தரத்தை பொடி, 1 பல் இடித்த பூண்டு, 1/4 ஸ்பூன் இடித்த மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும்.