அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
73
Is that the actress? The identity is unknown! Surprised fans!
Is that the actress? The identity is unknown! Surprised fans!

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்க்ஷய் குமார் ஆவார். இவர் தமிழ் திரைபடத்தில் எந்திரன் 2.0 படத்தில் ரஜினி காந்த் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார். தற்போது இந்தி இயக்குனர் ஒருவரின் நடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார், ஹிமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு பெல்பாட்டம் என பெயரிடப் பட்டுள்ளது.

இந்த திரைபடத்தில், 1980 களில் நடந்த உண்மை சம்பவம் கதையாக எடுக்கப் பட்டுள்ளது. முதலில் ஓ.டி.டி. யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால், திரையில் ஆகஸ்ட் 19 ம் தேதி வெளியிடலாம் எனவும், மக்கள் திரையரங்கிற்கு விரும்பி வரவழைக்கவும், மக்களை கவரும் வண்ணம் 3D தொழில் நுட்பத்தில், வெளியிடலாம் எனவும் படக்குழு தீர்மானம் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிகை லாரா தத்தா அப்படியே இந்திரா காந்தியின் சாயலில் இருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவரும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சோஷியல் மீடியாக்களில் சிலர் இந்த நடிகை யார்? அடையாளமே தெரியலையே? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்த அளவிற்கு அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அப்படியே அச்சு அசலாக கண் முன்னே காட்டிய ஒப்பனையாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நீங்களே பாருங்களேன் அச்சு பிசகாமல் அப்படியே உள்ளார்.