தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

0
32
#image_title

தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!

தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.

1.பன்னீர் ரோஜா இதழ் டீ:-

தேவையான பொருட்கள்:-

*பன்னீர் ரோஜா இதழ்கள் – 15

*தண்ணீர் – 1கப்

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 2 அல்லது 3 பன்னீர் ரோஜாக்களை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள ரோஜா இதழ்களை அதில் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் இதழ்களின் நிறம் கொதிக்கும் நீரில் கலக்கும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை வரைவில் குறைந்து விடும்.

ரோஜா இதழில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கிறது.இந்த இதழை வைத்து தேநீர் பருகினால் விரைவில் உடல் எடை குறைந்து விடும்.

அதுமட்டும் இன்றி தலைமுடி மற்றும் சருமத்துக்கு பாதிப்பத்திற்கு இந்த ரோஜா இதழ் தேநீர் சிறந்த தீர்வாக இருக்கிறது.அதேபோல் செரிமான பாதிப்பு,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தினமும் 1 அல்லது 2 கப் ரோஜாப்பூ இதழ்கள் தேநீர் பருகினால் விரைவில் தீர்வு கிடைக்கும்.சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றை சரி செய்ய ரோஜா இதழ் பெரிதும் உதவுகிறது.

2.சங்கு பூ டீ:-

அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகை பூச்செடிகளில் ஒன்று சங்கு பூ செடி.இதில் உள்ள பூக்களை கொண்டு தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஊதா நிற சங்கு பூ – 10

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.பிறகு 10 ஊதா நிற சங்கு பூவை போட்டு 5 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.தற்பொழுது தண்ணீரின் நிறம் நீல நிறத்திற்கு வந்து விடும்.

அடுத்து இந்த சங்கு பூ டீ அதாவது ப்ளூ டீயில் எழுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.சுத்தமான தேன் 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி பருகவும்.

சங்கு பூ தேநீரில் ‘ஃப்ளேவனாய்ட்ஸ்’ என்ற ரசாயனம் இருக்கிறது.இது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.தினமும் சங்கு பூ தேநீர் பருகி வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைத்து விடும்.

உடல் பருமனால் அவதிப்பட்டு வரும் நபர்கள் ப்ளூ டீ அதாவது சங்கு பூ தேநீர் பருகி வருவதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.தினமும் சங்கு பூ தேநீர் பருகினால் குடற்புண்,அல்சர்,அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.அதேபோல் இந்த தேநீர் வயிறு எரிச்சலையும் குணமாக்குக்கும் தன்மை கொண்டது.

3.வெங்காய டீ :-

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)

*தேன் – 1 1/2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தூள் உப்பு – 1 சிட்டிகை அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.அதில் 1/4 கப் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு 2 கப் தண்ணீர் 1 கப் அளவிற்கு வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.அதனை டம்ளருக்கு வடிகட்டி அதில் தேன் 1 1/2 தேக்கரண்டி,எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி மற்றும் தூள் உப்பு 1சிட்டிகை அளவு சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

வெங்காயத்தில் இயற்கையாவாகவே ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகிறது.இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.இதில் தேநீர் செய்து பருகினால் உடலில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் மோசமான இரத்த ஓட்டம் பிரச்சனை விரைவில் சரியாகும்.