விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏற்படும் சோகம்!

0
71

தமிழக திரைத்துறையில் அண்மைக் காலமாக பல துயர சம்பவங்கள் நடந்து கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிகர்களின் உறவினர்கள் என்று எல்லோரும் உயிரிழந்து வருகிறார்கள். இது மாபெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், நடிகர் விவேக் இயக்குனர்கள் எஸ் பி ஜனநாதன் தாமிரா, கேவி ஆனந்த் நடிகர், பாண்டு போன்றோர் அடுத்தடுத்து காலம் ஆகினர்.

சமீபத்தில் நடிகர் நெல்லை சிவா அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார். இவர் திரைப்படங்களில் நடித்தாலும் சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இதன் காரணமாக, இவர் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக, அந்தத் தொடர் நட்சத்திரங்கள் மாபெரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தேன்மொழி என்ற தொடரில் நடிகர் குட்டி ரமேஷ் நடித்து வந்தார். அவர் தற்போது காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் தொலைக்காட்சி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்த தொடரில் ஜாக்லின் தந்தையாகவும், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்தார். நடிகர் குட்டி ரமேஷ் இவர் முன்னரே பல தொடர்களில் ஒரு சில படங்களிலும் கூட நடித்திருக்கிறார். இந்த நிலையில், இவர் உடல் நலக் குறைவு காரணமாக, தற்போது இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.