Friday, September 20, 2024
Home Blog Page 4913

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

0

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‌கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மணமகன் சுப்பிரமணியனுக்கும் – மணமகள் பிரதீபாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது, பெண்ணின் மாமனார் காசிவிஸ்வநாதன் பெயரை மணமகன் என்று குறிப்பிட்டு பேசினார், இதை கேட்டு திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சுதாரித்து கொண்ட ஸ்டாலின், தன் உளறல் பேச்சை உணர்ந்த உடன் திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறினார். திருமண ‌விழாவில் பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் தடுமாறி திருமணத்திற்கு வந்தவர்களை சிரிக்க செய்து, திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தொடர்ந்து உளறல் பாணியை கடைப்பிடிப்பதால் சமூக வலைத்தளங்களில் கேளி கிண்டல்களுக்கு நம்ம தலைவரே வழி வகுத்து கொடுத்துவிடுகிறார் என்று திமுக உடன்பிறப்புகளே புலம்பி வருகின்றனர் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

0

இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கருதி இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக!” என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நீரியல் விரிசல் முறையில் பூமிக்குள் உள்ள பாறைகளை விலக்கி பாறை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் பொருட்களை எடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வந்தது. அதனால் அந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையான ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூடப்பட்டன. லங்காஷயர் பகுதியில் இருந்த ஒரே ஒரு ஹைட்ரோகார்பன் கிணறு மட்டும் செயல்பாட்டில் இருந்து வந்தது. அந்த கிணற்றில் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாறை எரிவாயு எடுக்கப்படும் போது பூமிக்கு அடியில் ஏற்பட்ட உராய்வுகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இங்கிலாந்தின் பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் ஆய்வு செய்தது. அதில், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தொழில்நுட்பத்தால் ஆபத்து இல்லை என புதிதாக கண்டுபிடிக்கப்படும் வரை இத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளோம்; மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த புதிய கொள்கையின்படி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றுக் கொண்டால் அதைக்கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட அனைத்து வகை கரிமங்களையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோ கார்பன் என்ற வரையறைக்குள் வரும் மீத்தேன், ஈத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் எடுக்க முடியும். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்படுவதையும், காலப் போக்கில் இந்த பகுதிகள் பாலைவனமாக மாறுவதையும் தடுக்கவே முடியாது. நீரிசல் விரிசல் முறையின் ஆபத்தை ஆய்வுப்பூர்வமாகவும், அறிவியல் விதிகளின்படியும் அறிந்ததால் தான் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அதற்கு தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பான உண்மைகள் அனைத்தையும் அறிந்த பிறகும் இதை இந்தியா தடை செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகையும், மக்கள்தொகை அடர்த்தியும் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய நாடுகளில் கட்டிடங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், நிலநடுக்கம் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட்டால், அதன் சேதம் இந்தியாவை விட இங்கிலாந்தில் மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்றொருபுறம், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தியாவை விட இங்கிலாந்தில் அதிகம். இத்தனை அம்சங்கள் சாதகமாக இருந்தும் கூட, நீரியல் விரிசல் முறைக்கு இங்கிலாந்து தடை விதிக்கிறது என்றால், அதற்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடிகளை விட, குடிமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று நினைப்பது தான் காரணம். ஆனால், இந்திய அரசோ மக்களின் உயிர்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரப் பயன்களுக்கு மட்டும் முன்னுரிமை தருவது ஏன்? எனத் தெரியவில்லை.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே மக்கள் நலனைக் காப்பது தான் என்பதால், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தின் தீமைகளை உணர்ந்து கொண்டு, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

0

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான விளக்கம் அளித்துள்ளது.

இதில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது என்ற தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ இதில் எதுவும் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்றும் உறுதி அளித்துள்ளது.

உளவு பார்த்தது பற்றிய தகவல் தெரிந்த உடனேயே உளவு பார்க்க பயன்படுத்திய அந்த மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஒ. நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் இது குறித்து தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

நாட்டின் குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க வாட்ஸ் ஆப்  நிறுவனம்உறுதி பூண்டுள்ளது” என வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

0

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி வங்காளதேச அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அங்கு காற்றில் மாசு அதிகரித்து ஒரே புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் சில வீரர்களும், தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ, சுழற்பந்து வீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி போன்றோரும் பயிற்சியின் போது சுவாச கவசம் அணிந்து இருந்தனர்.

இதன்படி இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா (அருண் ஜெட்லி ஸ்டேடியம்)  ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா இந்திய அணியை வழி நடத்துகிறார்.  

இதனிடையே டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டது. அங்கு எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் தான் வங்காளதேச அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இப்போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்க வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. மேலும்  இன்று நடைபெறும்  போட்டியை காண வரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

0

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ள வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த திமுகவின் மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.

இந்தியாவிலேயே சுயமரியாதை முழு அரசு அங்கீகாரத்துடன் நடந்து வருகிறது தமிழகத்தில் தான் . தற்போது தமிழகத்தில் சுயமரியாதை ஒரு இயக்கமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணத்திற்கு முதன் முதலாக அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. திமுகவை அவர்களின் கருத்துக்கள் தான் வழி நடத்தி வருகிறது. திமுக பல சமூக சீர் திருத்தங்களை செய்து இருக்கிறது.

அதாவது முதன் முதலாக சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.1967 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. கடந்த 1967 ஆம் ஆண்டில் முதல்வர் ,பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தான் ஆட்சி அமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தெய்வீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை. மேலும் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் இருக்கும் வரை தமிழகத்தில் திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் மிக விரைவில் திமுக ஆட்சி அமையும்.

ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒரு போதும் நடக்காது. திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் பெறுவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

0

மருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து ஆளும் தரப்பிற்கு கிடைத்த நம்பிக்கையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் அதிமுக தரப்பு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் கூட்டணி கட்சியான பாமக சார்பாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாமக தரப்பில் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்,முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மற்றும் அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி போன்றோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் மறைந்ததற்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் பொது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி சட்டமன்ற இடைதேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதை போல விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதன் பிறகு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பாமகவின் வாக்குகளும் மருத்துவரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதால் அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே வியூகத்தை பின்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதில் அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையேயான போட்டி என்பது மாறி பாமக மற்றும் திமுக இடையேயான போட்டி என்ற நிலைக்கு மாறி காரசாரமான விமர்சனங்கள் மற்றும் விவாதங்களுடன் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் திமுக வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறியது பற்றியும் இனி வரும் தேர்தல்களில் இது போன்ற வாக்குறுதிகளை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாமகவிற்கான தொகுதிகள் எத்தனை என்பது பற்றியும், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாமக ஆதரவளித்ததை போல இல்லாமல் இந்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டதாக தெரிகிறது. எப்படியாவது அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி பாமகவின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும் நடைபெற்ற இடைதேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமகவின் வாக்கு வாங்கி எந்த அளவிற்கு உதவியது என்பதையெல்லாம் கவனிக்கும் போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் இந்த அரசியல் நகர்வு சரியானதாகவே பார்க்கபடுகிறது. மேலும் தற்போதைய சூழலில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும் தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பலத்தை காட்ட பாமகவின் நிலையான வாக்கு வங்கியை நம்பி தான் ஆக வேண்டும் அதற்கு பிரதிபலனாக பாமகவிற்கான முக்கியத்துவத்தை அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

0

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி,

புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. அவர் தனக்கு சொந்தமான புதுவை திருக்கனூர் பக்கத்தில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ராதாபுரத்தில் தனது விவசாய நிலத்தில் நடைபெற்ற பணிகளை பார்த்து கொண்டிருக்கும்போது விஷவண்டு கொட்டியதில் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்,.

உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்,. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,.

நாளை அவரது இறுதிச்சடங்கு புதுச்சேரியில் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புருஷோத்தமன் மரணத்திற்கு தமிழுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் புதுமுக நடிகர்: டைட்டில் அறிவிப்பு

0

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’யோகா அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த படத்தில் அறிமுக நடிகர் வருண் என்பவர் நடிக்க உள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷின் நெருங்கிய உறவினர் என்பதும் இந்த படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ’இமைபோல் காக்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் தூய தமிழில் இந்த படத்தின் டைட்டிலையும் கவுதம் மேனன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

0

10வது முறையாக அறிவிக்கப்பட்ட தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதி

தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ஆம் ஆண்டின் தீபாவளியும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில மாதங்களில் ஒன்பது முறை அறிவிக்கப்பட்டு அனைத்து ரிலீஸ் தேதிகளும் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு வந்ததால் தனுஷ் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது 10வது முறையாக நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் இந்த தேதியில் கண்டிப்பாக படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் கமிட் ஆன முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்னரே அவர் நடித்த ஒருசில படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. மேலும் இந்த படத்தில் சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

0

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தற்போது என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்கள் தவறாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே நான் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் உள்ளன. இதனால் வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டுமே பொய்யானது, போலியானது. லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது தமிழக போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் தரவில்லை. நான் ஒரு ரூபாய் கூட அட்வான்ஸ் வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து பத்து நாட்களில் மொத்தமாக தருவதாக கூறினார்கள். ஆனால் இன்று வரை எனக்கு பேமெண்ட் வரவில்லை.

இது சம்மந்தமாக விஜய் டிவிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. இந்த பேட்டிக்கு பின்னரும் விஜய் டிவி ஒப்பந்தப்படி எனது சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொலைக்காட்சியும் பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும். மேலும் விஜய் டிவி மீது ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.