Friday, September 20, 2024
Home Blog Page 4915

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

0

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு விருதை ஒன்றை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ’நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்தார், மேலும் இம்மாதம் கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை ஏற்கனவே பாஜகவின் ’பி’ டீம் என்று ஒரு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், ரஜினிகாந்துக்கு பாஜக அரசு அறிவித்துள்ள இந்த விருது அறிவிப்பு கூடுதல் சந்தேகத்தையும் ஏற்படுத்திவதாக ஒருசில அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த விருதில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் , கடந்த 44 ஆண்டுகளாக திரையுலகில் ரஜினி செய்த சாதனைக்காக கொடுக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக மத்திய அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

0

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு திரையரங்கில் திரையிடப்படவில்லை. எனவே அந்த பகுதி விஜய் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் இறங்கினர். திரையரங்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்ததாக சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரிய வந்தது.

இதனை அடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், விஜய் ரசிகர்கள் 32 பேரை கைது செய்தனர். அதன் பின்னர் மீண்டும் கிடைத்த சிசிடிவி தகவல்களில் இருந்து நேற்று மேலும் 18 பேரை கைது செய்ததால், பிகில் படம் பார்க்க வந்த 50 பேர் தற்போது கைதிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரசாங்கமும் போலீசும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதை பாராட்டியே தீரவேண்டும். இந்த பொறுப்புணர்ச்சி விஜய்க்கு மட்டும் இல்லாமல் யார் படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர் எந்த நடிகருக்கும் இப்படி ஒரு கெடுபிடி இல்லை என்றும் உதயநிதி படம் கூட எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இந்த ஆட்சியில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் விஜய்க்கு மட்டும் ஏன் இந்த முட்டுக்கட்டை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

நடிகை கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ???

0

துணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ???

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுகவின் சட்ட அமைச்சர் சி.வி . சண்முகம் துணை முதல்வராக நியப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக அதிமுகவின் அரசியல் தென் தமிழகத்தை மையமாகக் கொண்டும் , திமுகவின் அரசியல் வட தமிழகத்தை மையமாக கொண்டும் தான் இயங்கும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக உடையும் , காணாமல் போகும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் தொடர்ந்து தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி தொடர்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது வட மாவட்டத்தில் மிகப்பெரிய சமூகமான வன்னிய சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் அதிமுக பக்கம் சாய்ந்தது தான். பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் 37/38 பாராளுமன்ற தொகுதிகளில் திமுக வென்ற சூழலிலும், தமிழக சட்டமன்ற ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22க்கு 9 தொகுதிகளில் வென்று அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்தது.

ADMK CV Shanmugam as Deputy Chief Minister-News4 Tamil Latest Online Tamil News Today
ADMK CV Shanmugam as Deputy Chief Minister-News4 Tamil Latest Online Tamil News Today

இந்த 9 தொகுதிகளில் பெரும்பாலானவை வன்னியர் சமூக ஓட்டுக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மாவட்ட தொகுதிகள். ஆண்டிப்பட்டி, பெரிய குளம் போன்ற அதிமுகவின் மிக முக்கிய கோட்டைகளையே திமுகவிடம் இழந்த சூழலிலும் பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், அரூர் போன்ற திமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை அதிமுக வென்றதன் பின்னனியில் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் செயல்பாடுகளே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்து வன்னியர் ஓட்டுக்களை வேட்டையாடுவதில் திமுகவுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறார் .

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இருக்கும் 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வன்னியர் சமூகத்தைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட மாவட்டங்களாக உள்ளன. இந்த 22 மாவட்டங்களில் குறைந்தது 105 தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக வன்னியர் சமூகம் இருப்பதால் அந்த சமூகத்தை கவரும் நோக்கில் சி.வி. சண்முகத்திற்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் இருக்கும் போது இங்கே நிர்வாக வசதிக்காக 2 துணை முதல்வர்கள் இருப்பது எந்த விதத்திலும் தவறில்லை என்கிறார்கள் வட மாவட்ட கழக பொறுப்பாளர்கள்.

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

0

செல்போன் பேசிக்கொண்டே மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ

இன்றைய காலத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பொருளாக இருந்து வரும் நிலையில் இந்த செல்போனில் முழுக்க முழுக்க மூழ்கி விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதை பல சம்பவங்களில் இருந்து நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் செல்போன் பேசிக்கொண்டே திடீரென மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் ஒரு பெண் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கின்றார். அப்போது அவருக்கும் ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. அந்த செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது எதிரே உள்ள மெட்ரோ பாதையில் ஒரு மெட்ரோ ரயில் வந்து நின்றது. உடனே அவர் செல்போனில் பேசிக்கொண்டே தான் நிற்கும் தண்டவாளத்தில் தான் அந்த ரயில் வருவதாக நினைத்து ரயிலை நோக்கி நடந்தார்.

அப்போது அவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து அந்த தண்டவாளத்தில் ஒரு மெட்ரோ ரயில் வர பதட்டம் அடைந்த சக பயணிகள் உடனே அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். அந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டதாகவும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்றும் மேட்ரிட் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மேட்ரிட் மெட்ரோ ரயில் நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ஜூலை 18 தான் தமிழ்நாடு தினம்: கி.வீரமணி

0

தமிழ்நாடு என்ற மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த இன்றைய நாளை அதாவது நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய நாள் ஜூலை 18 என்றும் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் இயற்றப்பட்ட இந்த ஜூலை 18 ஆம் தேதி தான் தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும் என்றும் திராவிட கட்சி பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் வீரமணி அவர்களின் இந்தக் கூற்றை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் புத்தாண்டு தினம் எது என்பதில் பெரும் குழப்பம் இருந்தது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிப்பதும், கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தை மாதம் 1ஆம் தேதியைத்தான் தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவிப்பதும் என மாறி மாறி நிகழ்ந்தது என்பது கடந்த கால வரலாறு. ஆனால் இன்றும் சித்திரை 1ஆம் தேதியைத்தான் தமிழ்ப்புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோன்ற ஒரு பிரச்சனையை மீண்டும் கி.வீரமணி அவர்கள் கிளப்பியுள்ளார். அவரது முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கூகுள் விலைக்கு வாங்கிய இன்னொரு பிரபல நிறுவனம்!

0

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம், பிரபலமான நிறுவனங்களை கடந்த சில ஆண்டுகளாக விலைக்கு வாங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தை சுமார் 15ஆயிரம் கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் என்ற நிறுவனத்தை 2.1 பில்லியன் விலை கொடுத்து கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு என்பது குறிப்பிடத்தக்கது

கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் உற்பத்தியில் ஃபிட்பிட் நிறுவனம் உலகப்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கூகுள் நிறுவனம் இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கூகுள் இதேபோன்ற நிறுவனமான ஃபாசில் என்ற ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் நிறுவனத்தை 282 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது என்பது தெரிந்ததே

ஆண்ட்ராய்டை அடுத்து கூகுள் தற்போது ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அந்த துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களை விலைக்கு வாங்கி போட்டி ஏற்படாத வகையில் கூகுள் செய்து வருகிறது. மேலும் கூகுள் நிறுவனம் பிட்பிட் நிறுவனத்தை வாங்கினாலும் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் உடல்நிலை தொடர்பான தகவல்களை கூகுள் பயன்படுத்தாது என்று உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சுஜித்தை மீட்காததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: சென்னையில் பரபரப்பு!

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுஜித் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார் என்பது தெரிந்ததே. இந்த துயர சம்பவத்தால் தமிழ்நாடே துயரக்கடலில் மூழ்கியது

இந்த நிலையில் சுஜித்தை மீட்க அரசு இயந்திரங்கள் முழுமையாக முடுக்கிவிடப்பட்டு என்பதும் ரிக் இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டும் மீட்புப்பணி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் ஆழ்துளைகிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க சரியான உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாததுதான் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவர்களை மீட்கும் உபகரணத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் அரசு முழு முயற்சியுடன் பொருட்செலவை கருதாமல் மீட்பு பணியில் இருந்த நிலையிலும் எதிர்க்கட்சிகள் மீட்பு பணி குறித்து குறை கூறி வந்தன். இந்த நிலையில் சுஜித்தின் மரணத்திற்கு அவனது பெற்றோர்களும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. ஆழ்துளை கிணற்றை தோண்டி அதில் தண்ணீர் வராததால் அதனை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததே சுஜித்தின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை சரியான முறையில் மீட்கவில்லை என்று கூறி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

பாஜக ஆளும் இன்னொரு மாநிலத்திற்கு தேர்தல்! ஆட்சியை இழக்குமா? தக்க வைக்குமா?

0

பாஜக ஆட்சி செய்த இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி தொடர்பான இழுபறியால் புதிய அரசு இன்னமும் பதவியேற்கவில்லை. அதேபோல் ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி செய்யும் இன்னொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பதாகவும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுள்ளது

*நவம்பர் 30-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

*டிசம்பர் 7-ம் தேதி: 2-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 12-ம் தேதி: 3-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 16-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 20-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

மேலும் நவம்பர் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் வேட்புமனு நவம்பர் 14-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு அடுத்த நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், அதே வெற்றி அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகளிடம் இழக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பரவை முனியம்மா மருத்துவசெலவு: கண்டுகொள்ளாத அரசு, கருணையுடன் நடந்து கொண்ட மருத்துவமனை

0

சிங்கம் போல நடந்து வர்ரான் செல்ல பேராண்டி’ என்ற பாடல் மூலம் மிகப்பெரும் புகழ் பெற்றவர் பரவை முனியம்மா. கிராமிய பாடல்கள், திரைப்பட பாடல்கள் என அவர் பாடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின

தூள் படத்தில் விக்ரமுடன் நடித்த பரவை முனியம்மாவுக்கு அதன் பின்னர் நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தார். இந்த நிலையில் 83 வயதான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாக கிட்னி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மாதம் ஒரு ரூபாய் 6000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்படி வழிவகை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இந்த தொகை மருத்துவ செலவிற்கே போதாத நிலையில் அவர் தற்போது மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளார். இந்த நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை குறித்த ஒரு சில வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது

ஆனால் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாள் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதாகவும்
அறிக்கை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும் பரவை முனியம்மாவால் சரியாக பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பரவை முனியம்மாவின் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்கான செலவு அதிகமாக இருப்பதக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து தமிழக அரசும் நடிகர் சங்கமும் சிகிச்சை செலவுக்கு உதவி செய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை நடிகர் சங்கமும் கண்டுகொள்ளவில்லை தமிழக அரசும் இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை

இந்த நிலையில் பரவை முனியம்மா சிகிச்சை பெற்றுவரும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாவின் சிகிச்சைகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், அவரது உடல் நிலை முழுமையாக குணமடையும் வரை அவருக்கு உயர்தர சிகிச்சையை இலவசமாக அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நடிகர்சங்கமும், அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவரது பாடல்களுக்கு ரசிகர்களான மருத்துவ நிர்வாகம் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

0

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கக் கோருதல் & தொடர்பாக
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தேசிய அளவில் முதுநிலை பல்மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான நீட் தேர்வுகள் முறையே 20.12.2019, 05.01.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எல்லாம் கூடுதல் இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 6228 முதுநிலை பல்மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 1352 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 50% இடங்கள், அதாவது 676 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், நாடெங்கும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமானவை என்பதால், அவற்றில் 50%, அதாவது சுமார் 9000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

மத்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவ மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்படிப்பு (MBBS), இளநிலை பல்மருத்துவப் படிப்பு (BDS) ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது. இதனால் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 4,500 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 1,215 இடங்களும், இளநிலை பல்மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 425 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 115 இடங்களும் பறிக்கப் பட்டு பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுக் கொடுத்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவ்வாறு பெறப்பட்ட இடஒதுக்கீடு இவ்வாறு சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி (The Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006) மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டத்தின் 4வது பிரிவின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான 8 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் பொருந்தாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், North-Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Science, Shillong மட்டும் தான் மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகும். இதைத் தவிர, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை.

அதுமட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களையும், மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% இளநிலை மருத்துவ இடங்களும், 50% முதுநிலை மருத்துவப் படிபு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட உடனேயே அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களாக மாறிவிடுகின்றன. எனவே, அவற்றுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தனவர்கள், பழங்குடியினர், உயர் வகுப்பு ஏழைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது நியாயமாகாது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருத்தங்களின்படி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு பெறப்படுகிறது. இதனால், மாநில அரசுகளால் உள்ளூர் மாணவர்களுக்கு உரிய அளவில் வாய்ப்பு வழங்க முடியவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1758 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தால், அவற்றில் 50%, அதாவது 440 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், அந்த இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக இடஒதுக்கீட்டை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்பதை தாங்கள் உணர்வீர்கள்.

எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகிய தாங்கள், இந்த விசயத்தில் தலையிட்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர். இதுகுறித்து தங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.