Saturday, September 21, 2024
Home Blog Page 4946

பழைய விதிகளை தகர்த்த நேர்கொண்ட பார்வை! தென் தமிழகத்தை புரட்டியதா! தியேட்டர் உரிமையாளர்களின் கருத்து!

போனிக்கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரமாண்டமாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்பு மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது மாறி தற்பொழுது பார்த்தவர்களின் கருத்தை கேட்டு பார்காதவர்களின் எண்ணகள் பார்க்கவேண்டும் என்ற ஆசை வின்னைமுட்டும் அளவிருக்கு உயர்ந்துள்ளது.

தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது பெண்களின் நிலையை எடுத்துக்கூறும் படமாக அமைந்துள்ளது. இதனால் பெண்களின் மத்தியில் நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை உள்ளது.

சூர்யா,சிவகார்த்திகேயன், நடிகர் கிருஷ்ணா, வரலட்சுமி சரதகுமார், சித்தார்த் போன்றவர்கள் வெளிப்படையாக பாராட்டியுள்ளனர். முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னையில் திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர். இதனால் இன்னும் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

முன்னதாகவே இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை இந்த கருத்துக்கள் மெருகேற்றியது.

தமிழகத்தில் ரிலீஸ் ஆன முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து உள்ளது. ரிலீஸ் ஆன அன்று வேலை நாட்களாக இருந்தாலும் கூட நல்ல வசூல் செய்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ஏறக்குறைய 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது அஜித் படங்களில் அதிகமாக வசூல் செய்த படமாக கருத படுகிறது.

தென் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டி உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறும்பொழுது, கமர்சியல் ரீதியான படங்களே தென் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் இந்த படம் அப்படி இல்லாமல் சமூக பிரச்சனை சார்த படமாக உள்ளது. இருந்த போதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமூகம் ரீதியான படங்கள் வெற்றி பெற்றாலும் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையாது. குறைவாகவே வசூலை ஈட்டும். ஆனால் நேர்கொண்ட பார்வை படம் அப்படி இல்லாமல் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படம் நல்ல வசூலையும் படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் விதியையே மாற்றி விட்டது இந்த படம். நாளுக்கு நாள் தியேட்டர் வரும் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

களைகட்டும் ஆடித்திருவிழா ….. மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!

0

களைகட்டும் ஆடித்திருவிழா …..மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!

சேலம்:ஆடி மாதம் என்றாலே விழாக்கோலம் கொள்ளும் சேலம் மாவட்டத்தில் சேலம் பெரிய மாரியம்மன் திருவிழா முடிந்ததை அடுத்து மழவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாரியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குத் தான் கோலாகலம் என்றால் பெரும்பாலும் வட தமிழகத்தில் கொண்டடப்படும் விழாக்கள் ஆடி மாதத்தில் தான்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதியில் ஓலப்பாடி கிராமத்தில் மழை வேண்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், விரதம் இருந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பிறகு சுவாமி உற்சவம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது.

இதே போன்று பல்வேறு ஊர்களில் மக்கள் மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

0

தற்கொலைக்கு இடம் பார்த்த
தம்பதிகள்!
இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

வேலூர்: திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சடலம் கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது வாலிபருடன் வந்த இளம்பெண் அலறி துடித்தபடி பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமானார்.

தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அளித்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்(32) என்பதும், அந்த இளம்பெண் அவரது மனைவி புவனேஸ்வரி(27) கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணம் நடந்துள்ளது. ‘திருமணத்துக்கு முன்பே மகேஷுக்கு வேறு பெண்களிடம் தொடர்பு இருந்துள்ளது.

இதுதொடர்பாக திருமணமான சில நாட்களிலேயே எங்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அழைத்து சென்றார்.

அங்கு சென்றதும் நான் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்தபோது, பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தை திருப்பினார். 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார்.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். உடனே என்னை கீழே தள்ளிவிடப்பார்த்தார். நான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இறுக்கமாக பிடித்து கொண்டேன். இதனால், அவர் மட்டும் குதித்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் நானும் அங்கிருந்து குதிக்க முயன்றேன். ஆனால் என்னை தடுத்துவிட்டனர்’ என்று புவனேஸ்வரி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் சொல்றத நம்பமுடியாது!!

0

சாமி சொன்னால் கூட நம்பலாம் போல!! ஆனா சாட்லைட் நம்பமுடியாது!!

சென்னை: தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையை சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து கூட கணிக்க முடியாது என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம், தேனி, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்து தற்போது முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.

என்ன காரணம் என்று பார்க்கும்போது

ரமணன் தனது பேட்டியில் கூறியதாவது , பொதுவால் மழை வருவதற்கு சில காரணம் இருக்க வேண்டும்.உதாரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது சுழற்சி இருக்க வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.


கடந்த மூன்று நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனால் அதனால் தமிழகம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. வங்கக்கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக நகர்ந்தது.

வடககிலிந்து வந்த காற்றானது

மஹாராஷ்டிரா, குஜராத் வழியே இது ராஜஸ்தான் சென்றுவிட்டது. ஆனால் இதனால் அரபிக்கடல் காற்று தமிழகம் வழியாக இழுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் மேலடுக்கு சுழற்சியும் ஏற்ப்பட்டுள்ளது. இந்த காற்று தமிழகம் வழியாக வடக்கு நோக்கி இழுக்கப்படுவதால் மழை பெய்கிறது.

காற்று  எப்படி செல்கிறது:
மேலடுக்கில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று செல்வதால்தான் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையை கணிக்க முடியாது. ஏனென்றால் காற்று எப்போது வீசும் என்பதை கணிக்கவே முடியாது. அதிகாலையில் வீசும் காற்று மறுநாள் மழையாக மாறும். இதை முன்பே கணிப்பது கஷ்டம்.

அப்போ சாட்டிலைட் பயன்பாடு தான் என்ன

இதில் நாம் சாட்டிலைட் புகைப்படங்களையும் கணிக்க முடியாது. சாட்டிலைட் புகைப்படங்கள் காற்று காரணமாக நொடிக்கு நெடி மாறும். இதனால் மழை பெய்ய போவதை தகுந்த காலநிலை பொருத்தது. அதனால் நாம் முன் கூட்டியே கணிக்க முடியாது, என்று முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தொழிநுட்பங்கள் வந்தும்கூட ரமணன் அவர்கள் அறிவித்துள்ள பேட்டியானது மக்களிடையே நம்பிக்கை இழக்க செய்கிறது…. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு முறைகளில் கருத்துகளையும் மீமஸ்களையும் பதிந்துள்ளனர்.
அதில் ஒன்றுதான் சாமி சொல்றவன் கூட மழை வருவதை சரியா சொல்லிட்டான்
சாட்லைட் வச்சிட்டு என்னத்த பண்றாகளோ என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

0

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

“மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் வேகமாக நிரம்புவது மகிழ்ச்சளித்தாலும் இன்னொருபக்கம் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களின் நிலை பரிதவிப்புக்குள்ளாயிருக்கிறது.

சேதமடைந்த தரைப்பாலம்

இந்நிலையில், கனமழையில் அரித்துச்செல்லப்பட்ட சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் தரைப்பாலம் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், “தொடர் மழைப்பொழிவால் நீலகிரியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரிகள் நீலகிரியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 275.47மி. மீட்டர் மழை பெய்துள்ளது.

லேசான மழையின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்டதால் சின்னச் சின்ன பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான். நொய்யல் ஆற்றில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது. எல்லா வாய்க்கால்களும் குளங்களும், தூர்வாரபட்டுள்ளதால் நீர்நிலைகளில் நிரம்பிவருகின்றன. நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளங்களுக்குச் செல்லும் பாதை சிறியது என்பதால் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகிறது. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 1335பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 72 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளது, 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தங்கள் இருப்பிடம் பாதுகாப்பானது இல்லை என்று கருதினால் பொதுமக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும். அதற்கு இப்போதே அதற்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்றார்.

மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , “நீலகிரி மாவட்டத்தில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் பவானி ஆற்றின் வழியாக பவானி சகார் அணைக்குச் செல்கிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை வெள்ளம் வந்த போதும் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, மாற்று வீடு கட்டிதருவதாக அம்மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதோடு மட்டுமல்லாது, அதற்காக 3 ஏக்கர் நிலமும் ஏற்கனவே ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த முறை வெள்ளம் வருவதற்குள் பவானி கரையோர மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் அனைத்தும் நிலத்தடிக்குள் செல்ல வேண்டும்.” என்று தனது பாணியில் அதிகாரிகளை  எச்சரித்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் இணைந்த நடிகர் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை.

அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும்.

ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த படம் கே.ஜி.எப். இது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ஆகும். இது தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. யாரும் எதிர் பாராத விதத்தில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

கே.ஜி.எப். முதல் படம் வெற்றி பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இந்தி சினிமாவின் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழ் நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார். நடிகர் சரண் சக்தி ஆகும். சரண் சக்தி தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். இது இல்லாமல் சகா என்ற தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தின் நடிப்பது பற்றி நடிகர் சரண் சக்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். பின்வருமாறு, கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல்லிற்கு நன்றி என நடிகர் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கே.ஜி. எஃப் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போன்று வெற்றியடைய படகுழுவிர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இனி கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் புதுகணக்கு! கலக்கத்தில் கனிமொழி?

0

திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் சலசலப்பை உண்டாக்கும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பதற்காக திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். ஆனால் டெல்லியில் மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களும் மம்தா பானர்ஜியை அழைப்பதற்காக மும்முரமாக செயல்பட்டார்.

ஆனால், அறிவாலயம் கனிமொழியின் மும்முரத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மம்தா பானர்ஜியா அழைக்க செல்லவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கட்டலையாம். இதனால் பெரிதும் சர்ச்சை எழுந்துள்ளது. கனிமொழி மும்முரதிர்க்கு தடை போட்டது ஏன் என்ற கேள்வி கனிமொழியின் ஆதரவாளர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் கனிமொழி அதிக அளவு அரசியல் ஈடுபாடு உள்ளவர். இதற்கு முன்னதாகவே மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆக பதவி ஏற்றார். திமுக மகளீர அணி தலைவர் பொறுப்பில் உள்ளார். இது போதாதா கனிமொழியின் அரசியல் நிலைமை என கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எந்த அரசியல் முன் அனுபவம் இல்லாமல் தற்போதுதான் இளைஞர் அணி தலைவர் பதவியை ஏற்றார் அவருக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது. என கனிமொழி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது ஸ்டாலின் நிலைபாடு மற்றும் ஸ்டாலின் மகன் உதயநிதி அவர்களை அரசியலில் இனி முன்னெடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கிறாரோ கனிமொழியை ஓரம் கட்ட படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மேஷம் ரிஷபம் கன்னி ராசி காரர்களே உஷார்! கண்டிப்பாக இன்று இதை செய்யக்கூடாது?

0

மனிதன் எவ்வளவோ திறமையுடன் முயற்சி செய்தாலும் சில தவறுகள் அல்லது அந்த முயற்சி பலன் இல்லாமல் போகலாம். அப்படி இருக்க ஒரு சிலருக்கு எதுமே செய்யாமல் அவர் செய்யும் செயல் வெற்றியை தரும், நினைத்த காரியங்கள் ஈடேறும். காரணம் எல்லாம் என் நேரம் என்று கூறுவது பார்த்திருப்போம்.

இதை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நம்மையே அறியாமல் நடக்கு அதுவே நம்மலுடைய ராசி மற்றும் கிரக தோஷம் கிரக நிலை இவையெல்லாம் பொறுத்தே அமைகிறது. அப்படி இருக்க இன்று மேஷம், ரிஷபம், கன்னி ராசி காரர்களின் சில இன்னல் ஏற்படுவதாக நம் ஜோசிய சிந்தனை கூறுகிறது அதை பற்றி பார்ப்போம்.

மேஷம்: இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் சிந்தித்து நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இதனால் உங்களுக்கு எதிர்ப்புகள் விலகும். உங்கள் ராசியில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் எல்லா நன்மை உண்டாகும். பணம் வரவு கூடும் நாள். உங்கள் நண்பர்களால் பயன்கள் கிடைக்க தோன்றும். புதிய நபர்களின் நட்பும் அதனால் அதனால் சந்தோசம் உண்டாகும். சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் ஏற்கனவே செய்த செயலை நினைத்து கஷ்டம் நேரிடும். உங்கள் நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

ரிஷபம்: இன்று செய்யும் செயலில் தாமதம் ஏற்படலாம். எடுத்துக் கொண்ட செயலில் சற்று சறுக்கல் மற்றும் காரிய தடை ஏற்படலாம். உடல் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும். செய்த செயலால் தேவையற்ற பயம் ஏற்படும். முன்னதாக செய்த செயலுக்கு பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் சில விஷயங்களுக்காக வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க கூடும். தேவையற்ற வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

கன்னி: இன்று உங்களுக்கு உங்கள் சிந்தனை வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும் நாள். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லாவற்றையும், எல்லோரையும் ஏற்று நடந்தால் நலன் உண்டாகும். பழைய கடன் குடுக்கல் வாங்கள் பாக்கிகளை வசூல் செய்வதில் புதிய உற்சாகம் இருக்கும். நினைத்த செயலை செய்து முடிக்க எடுக்கும் சிந்தனை சாதகமான பலன் தரும். தேவையற்ற சிந்தனை மனவருத்தம் உண்டாகும். உங்கள் நிறம்: வெளிர் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சர்ச்சைக்குள்ளான தமிழிசை பேட்டி! காங்கிரஸ்க்கு ஆதரவு கோரும் தமிழிசை? பிஜேபி ஷாக்?

0

காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரிய பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஜேபி தரப்பில் பதில் வந்துள்ளது பிஜேபி காங்கிரஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் திமுக கூட்டணியில் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு எதிரான முத்தலாக் தடை மசோதாவை கடுமையாக எதிர்த்து பேசினார். பின்னர் சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநில தனி அந்தஸ்து நீக்கப்பட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்து பேசினார்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது பற்றி பேசும் போது, பிஜேபி செய்தது இது ஜனநாயக படுகொலை எனவும் ஆனால், காங்கிரஸ் தான் முதன்மை குற்றவாளி என கூறினார். காஷ்மீரை பாதுகாக்க கார்கில் போரில் தமிழக இளைஞர்கள் பலர் பங்கு பெற்று பலர் உயிர் தியாகம் செய்து காஷ்மீரை பாதுகாத்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்படும் பொழுது காங்கிரஸ் 12 உறுப்பினர்கள் எங்கே சென்றனர். பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா? என கேள்வி எழுப்பி காங்கிரஸ் கட்சி தான் முதல் குற்றவாளி என கூறினார். இதனால் கோவம் அடைந்த காங்கிரஸ் பதிலடியாக கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் பேசும் பொழுது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தி இழந்து பேசுகிறார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசை குறை சொல்வதா? இது முட்டால் தனம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் உதவியில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு காங்கிரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது என்றார்.
இதற்கு பதிலடயாக திரு வைகோ அவர்கள் பேசும் பொழுது, நான் காங்கிரசின் தயவில் தேர்ந்தெடுக்க வில்லை என தெரிவித்தார்.

நான் திமுக தலைவர் ஸ்டாலின் உதவியுடன் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். காங்கிரஸ் தயவில் இல்லை. இனி எப்போதும் காங்கிரஸ் உதவிவுடன் பொறுப்பு ஏற்க்கமாட்டென் எனவும் தெரிவித்தார். இலங்கையில் ஈழ மக்களை அழித்த இன துரோகிதான் காங்கிரஸ் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதை பற்றி பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் காங்கிரஸ் கட்சி கூறுவதை ஏற்று கொள்கிறேன். கூட்டணி கட்சியின் உதவி உடன் உறுப்பினராக பதவி ஏற்று பின்பு கூட்டணி கட்சியை விமர்சிக்கும் வைகோவின் கூற்று தவறு. வைகோ கட்சி மாறி பேசுவது புதிதல்ல. கூட்டணியில் இருக்கும் போதே விமர்சிக்கவில்லை பதவி கிடைத்த உடன் விமர்சிப்பது வைகோவின் நிலைப்பாட்டை உறுதி படுத்துகிறது என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

0

திராவிட கட்சிகளை மிஞ்சிய தேர்தல் அறிக்கை!! தில்லாக வாக்களித்த குடிமகன்கள்!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். இந்த மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை அக்கட்சி சார்பாக வெளியிட்டுள்ளார். அதில் 2530 வாக்குகள் அள்ளிதந்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவை வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் பாசமிகு நண்பர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறி மாறி இலவசங்களை வழங்கி சலித்து போன திராவிட கட்சிகள் மத்தியில்
அவர்கள் வழி வந்தது போல தமிழகத்தை சீர் கெடுக்கும் இந்த அறிக்கை பிரச்சாரம் அதற்க்கும் வாக்களித்த குடி மகன்களை பார்க்கும் போது இந்நிலை மாற முதலில் மக்களே சிந்திக்க வேண்டும்.

ஆகையால் இந்த தேர்தல் ஒரு வெளிப்படையான பள்ளி மாணவர்களையும்
இளைஞர்களையும் பாதாலத்துக்கு இழுத்து செல்லும் திட்டமாக உள்ளது. இருப்பினும் மது குடிப்போர் சங்கத்துக்கு 2530 வாக்குகள் விழுந்ததை அரசியல் கட்சியினரும் மற்ற சுயேட்சை வேட்பாளர்களும் வியப்புடன் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்