வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

0
91
The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!
The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

மங்களூர் அருகே மது போதையில், ஒரு வனப்பகுதியில் மைனர் பெண்களுடன், இரண்டு சிறுவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர்.

இது பற்றி அறிந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு 2 மைனர் பெண்கள் மற்றும் அவர்களுடன் இருந்த சிறுவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இடம் விசாரித்ததில் அவர்கள் இருவரும் போதையில் இருந்ததும், அந்த பெண்களின் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் அந்த பெண்களை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்கு சென்று உல்லாசமாக பொழுதை கழிக்கலாம் என்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த போலீசார் பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் பஜ்பே போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பெண்களின் காதலர்களான இரண்டு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது போதை பழக்கம் பள்ளி சிறுவர்களையும், கல்லூரி மாணவர்களையும் அதிகளவில் ஆட்கொண்டு வருகிறது. அதில் இருந்து விடுபட அவர்களாக நினைத்தால் மட்டுமே முடியும்.