சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

0
89

என்று சமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை தரும் நபர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகை மற்றும் சமூக ஆர்வலரான ரேவதி சம்பத் என்பவர் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. மலையாள சினிமா உலகில் பிரபலமான ரேவதி சம்பத் தனக்கு 14 அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பட்டியலிட்டு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் இவர்கள் தன்னை பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதோடு இந்த குற்றவாளிகளின் பட்டியல் இதோ என்று இயக்குனர், நடிகர், மருத்துவர், பாடல் ஆசிரியர் மற்றும் புகைப்படம் எடுப்பவர் காவல் துறையைச் சார்ந்தவர் என்று பல தரப்பினரையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த பதிவு தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரேவதி சம்பத் இரு வாரங்களுக்கு முன்னதாக நடிகர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.