ஜெயிலர் திரைப்படம் உங்களை ஏமாற்றாது… நடிகர் வசந்த் ரவி பேட்டி!!

0
36

 

ஜெயிலர் திரைப்படம் உங்களை ஏமாற்றாது… நடிகர் வசந்த் ரவி பேட்டி…

 

ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் வசந்த் ரவி அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

 

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சுனில், சிவராஜ் குமார், மோகன் லால், ஜேக்கி ஷெரூப், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை28) நடைபெற்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் வசந்த் ரவி அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை பற்றி சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

 

நடிகர் வசந்த் ரவி அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நேர்க்காணல் ஒன்றில் “ஜெயிலர் திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு ரஜினி சார் அவர்களும், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்காக மட்டும் தான். நடிகர் ரஜினி சார் என்னிடம் ‘நீ 70 வயதிலும் உன்னை பிசியாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை கூறினார். ஜெயிலர் படத்தை பற்றி ஒரு விஷயம் நான் உறுதியாக சொல்வேன். ஜெயிலர் படம் உங்களை ஏமாற்றாது. இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் ரியாலஸ்டிக் மீட்டரை கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமை உள்ளது. மேலும் டார்க் காமெடியை டெட்பான் முக பாவனையோடு சொல்லும் அவருடைய தனி ஸ்டைல் தமிழ் சினிமா உலகிற்கு புதிய ஒன்றாக உள்ளது” என்று ஜெயிலர் திரைப்படத்தை பற்றி நடிகர் வசந்த் ரவி அவர்கள் கூறியுள்ளார்.