முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!

முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதாவது தடுப்பூசி போடுதல் அதிகப்படுத்துதல், பரிசோதனை மையத்தை அதிகப்படுத்துதல் மற்றும் இரவு நேர ஊரடங்கு, முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய மாநில அரசுகள். அதேசமயம் … Read more

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா?

tn assembly

தமிழக அரசின் முயற்சி ஒரே நாளில் நாசமாக உள்ளது! தடுக்க வழி உள்ளதா? தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுகாதாரத்துறையினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, கடைகள் வணிக நிறுவனங்கள் … Read more

வைரஸ் பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

Tamil Nadu Assembly

தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பேர் இதனால் இந்தியாவில் பாதிப்படைகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் திடீரென்று நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவர் அந்த ஊசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்துவிட்டதாக ஒருசிலர் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். ஆனால் சுகாதாரத் … Read more

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!

Sathya Pradha sahu

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…! கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதிலும் இந்தியாவால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தமிழகத்திலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை தொடங்கி, மறு உத்தரவு … Read more

உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…!

alexy navalni

உயிருக்கு போராடும் எதிர்கட்சித் தலைவர்! இரண்டு நாள்களில் இறந்து விடுவார் என டாக்டர்கள் எச்சரிக்கை…! ரஷ்ய நாட்டின் அதிபர் விலாடிமிர் புதின் அசைக்க முடியாத சக்தியாக அந்நாட்டில் இருந்து வருகிறார். யார் என்ன சொன்னாலும், அவரே அதிபராகவும், பிரதமராவகும் மாறி மாறி, அனைத்து ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய சக்தியாக அந்நாட்டை ஆண்டு வருகிறார். அவருக்கு மிகவும் குடைச்சல் கொடுக்கும் நபராக எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி இருக்கிறார். புதினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய நாவல்னிக்கு, … Read more

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…!

Seeman

தடுப்பூசியை எக்காரணத்தைக் கொண்டும் போட்டுக்காதீங்க! வைரலாகும் சீமானின் பேச்சு…! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தடுப்பூசி கண்டுபிடித்து உடனடியாக மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. ஒருசில நாடுகளின் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என வல்லுநர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தாங்கள் போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் … Read more

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டும் வருகின்றன. அந்த விதத்தில் மே மாதம் நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும். ஒத்திவைக்குமாறும், பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. … Read more

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலும் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தமிழகம் முழுவதிலும் பெரிய அளவில் கலவரங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் தேர்தல் நடந்த நாளன்று வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 2 வாக்குப் பெட்டிகளை இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்கள் எடுத்துச் செல்ல அதனை கண்ட திமுகவை சார்ந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் … Read more

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!

சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்ககளிலும் தீவிர பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் அதாவது சிசிடிவி கேமரா போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் … Read more

வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!

வெற்றி உறுதி! பழைய பைலை தூசிதட்டும் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கினார். பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர் வழங்கிய இந்த தீர்ப்பானது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கவனிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் … Read more