Thursday, July 3, 2025
Home Blog Page 4

தெலுங்கானா பாஜகவுக்கு அதிர்ச்சி – எம்எல்ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா பாஜகவில் நேற்று (திங்கட்கிழமை) கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏ டி. ராஜா சிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாநில பாஜக தலைவராக ராம் சந்தர் ராவ் நியமிக்கப்படவுள்ள தகவல்களால் ஏற்படும் ஏமாற்றத்தையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தெலுங்கானா பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா சிங் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில், பாஜகவுக்கு பல ஆண்டுகள் உறுதுணையாக இருந்த லட்சக்கணக்கான காரியகர்த்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தது போல இந்த முடிவு உள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“இந்த முடிவால் எனக்கு மட்டுமல்ல, பாஜகவை நம்பிய லட்சக்கணக்கான காரியகர்த்தர்கள், தொண்டர்கள், வாக்களிப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா பாஜக அரசை உருவாக்க தயாராக இருந்தது, ஆனால் தவறான தலைமைத் தேர்வால் அந்த வாய்ப்பு இழக்கப்பட்டுவிட்டது” என்று ராஜா சிங் குறிப்பிட்டுள்ளார்.

பின்புலத்தில் இருந்து சிலர் நஇயக்குவதால் கட்சி அரசியல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிநபர் சலுகைகள், கட்சியின் இலக்கை மேல் நடத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

“எனது கட்சி நம்பிக்கையை இழந்தாலும், ஹிந்துத்துவ மற்றும் தர்ம சேவைக்கு நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பேன். இந்த முடிவு கடினமானது தான், ஆனால் தேவையானது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கு நேரடி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

“தெலுங்கானா பாஜக வளர்ச்சி பாதையில் செல்வதற்கு சரியான தலைமை தேவை. தவறான முடிவால் அந்த வாய்ப்பு வீணாகிவிடக்கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பாஜகவில் இருந்து விலகினாலும், “ஜெய்ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம்” என முடிக்கும் ராஜா சிங், தனது ஹிந்துத்‌வ போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை தற்போதைய தலைவரும் அமைச்சருமான ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார்.

அறிக்கை வெளியீட்டு பின்னணி:
ராஜா சிங், முன்பும் பல சர்ச்சையான கருத்துகளுக்காக பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த ஏப்ரல் மாதம் ஹைதராபாதில் நடந்த ராம் நவமி பேரணியில், அவர் Waqf சட்ட திருத்தம் குறித்து பேசினார் மற்றும் இந்தியா ஒரு ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இவரின் இந்த ராஜினாமா மூலம் தெலுங்கானா பாஜக உட்கட்சி குழப்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேட்கலாம் – அன்புமணிக்கு திருமாவளவன் அட்வைஸ் 

பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து இதற்கு முன் செய்தியாளர்கள் கேட்டதற்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையின் படி நடக்கலாம் என ஏற்கனவே விசிக தலைவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தைலாபுரம் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து கடந்த சனிக்கிழமை நடந்த பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் விசிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு திடீர் பாசம் ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் திமுக B சொல்வதை கேட்கிறார் என விமர்சித்திருந்த நிலையில் இவர்களின் சந்திப்பு தொண்டர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் அன்புமணியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை, நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையில் அல்ல தந்தை மகனுக்கிடையே ஒரு விரிசல் உருவாகியுள்ளது, அது மேலும் பெரியதாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் கூறப்பட்ட பொறுப்பான வார்த்தை. தந்தைக்கு இருக்கும் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணத்தில் கூறப்பட்ட பொறுப்பான வார்த்தை.

அந்த கட்சி எப்படியோ போகட்டும் என விட்டு விட முடியாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதால் அக்கட்சிக்கு பெரும்பங்கு உண்டு. இந்த சூழலை தனக்கு சாதகமாக சனாதன சக்திகள் பயன்படுத்தி விடக் கூடாது. பாசிச சக்திகள் உள்ளே வந்து விடக் கூடாது என்ற அடிப்படையில் கூறியது.

மேலும் எச்சரிக்கையாக இருங்கள். யாரோ சொல்வதை கேட்பதை விட அப்பா சொல்வதை கேளுங்கள் என ஒரு பொறுப்பான வார்த்தையாக தான் கூறினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

300 பவுன் தங்கநகை, 70 லட்சம் ஆடம்பர கார்! இத்தனை வாங்கியும் அவங்க ஆசை அடங்கல!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா வயது 27. இவருக்கும் கோயம்புத்தூரை ஈஸ்வர மூர்த்தி சித்ராதேவி தம்பதியினரின் மகன் கவின்குமாருக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு சீர்வரிசையாக 500 பவுன் நகை, 70 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர கார் தருவதாக பேசப்பட்டது. பின்னர் 300 பவுன் நகை, 70 லட்சம் ஆடம்பர கார் மற்றும் இரண்டரை கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உடல் ரீதியாகவும், மாமனார் மாமியார் மனரீதியாகும் தினமும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மீதி கொடுக்க வேண்டிய 200 பவுன் நகையை எப்போ உங்க வீட்டுல கொடுப்பாங்க என்று அனுதினமும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தை ரிதன்யா நிறைய முறை தன்னுடைய தந்தையிடம் சொன்னபோது ஆரம்பத்துல எல்லாம் கொஞ்சம் அப்படி தான் இருக்கும், நீ கொஞ்சம் சமாளிச்சுக்கோ என்று அறிவுரை சொல்லியுள்ளார்.

சில முறை கணவர் வீட்டில் நடக்கும் கொடுமை பொறுக்கமுடியாமல் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ரிதன்யா. பின்னர் அவருடைய பெற்றோர் பெண்ணுக்கு புத்திமதி சொல்லி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று (29.6.2025) கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் சென்று நடுவழியில் காரை நிறுத்திவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ரிதன்யா.

நீண்டநேரம் கார் அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த மக்கள் காவல் துறையில் புகார் அளித்து வாகனத்தை திறந்து பார்த்துள்ளனர். காரினுள் பிணமாக கிடந்துள்ளார் ரிதன்யா. இறப்பதற்கு முன்னர் தன்னுடைய சாவிற்கு காரணம் என்னுடைய கணவர், மாமனார், மாமியார் தான் என கண்ணீர் மல்க தனது தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார் ரிதன்யா.

இதனால் போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார், மாமியாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நகைக்காக தங்கம் மாதிரி இருக்குற இந்த அப்பாவி பொண்ணை கொன்னுட்டிங்களேடா என்று ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் மக்கள் திட்டி வருகின்றனர்.

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசை வறுத்தெடுத்த நீதிமன்றம்!

ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி நிறைய கதைகளை அள்ளி விடுவார்கள். அதில் பொதுவாக எல்லா கட்சியும் சொல்லும் முக்கிய தேர்தல் அறிக்கை நாங்க ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடிவிடுவோம் என்பது தான். இதை தமிழகத்தை ஆளும் திமுக கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய குறிக்கோளாக வெளிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் ஆட்சி வந்த பிறகு நடந்தது என்ன? எப்போவும் போல மதுக்கடைகள் செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிச்சுக்கிட்டே தான் இருக்கு. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கம் குறைந்த அளவிலே இருந்தது. ஆனால் இப்போது பெண்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என மது அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசை டாஸ்மாக் விவகாரத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஒரு நிலைப்பாடு , டாஸ்மாக் விவகாரத்தில் வேறு நிலைப்பாடு ஏன்? டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு நடத்துவதற்கான காரணம் என்ன? ஒருபுறம் மதுக்கடைகள் திறப்பு, மறுபுறம் குடிபோதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என தமிழக அரசை கேள்விக்கணைகளால் வறுத்தெடுத்துள்ளது மதுரை உயர்நீதி மன்றம்.

பாமகவின் முழு பவர் இனி அன்புமணி கையில் தான்.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் பாஜக-வின் முக்கிய தலை!!

PMK: பாமக கட்சியானது இரண்டாக பிரியும் சூழல் உருவாகியுள்ளது. தலைமை அதிகாரம் யாருக்கு என்பது குறித்து தான் அப்பா மகனுக்கிடையே போட்டியாக இருக்கிறது. அதிலும் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார், இனி வரும் நாட்களில் நான் தான் தலைவர்  என் கடைசி மூச்சு வரைக்கும் நானே தான் அந்த பொறுப்பில் இருப்பேன் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அதனை அன்புமணி தற்போது வரை ஏற்கவில்லை.

அதிலும் ஒரே கட்சிக்குள் அப்பா மற்றும் மகன் இருவரும் மாற்று நிர்வாகிகளை அமர்த்தி தங்களுக்கு எதிரெதிர் ஆதரவு தெரிவிப்பவர்களை கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். இந்த செயல் முறையானது கட்சியை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்கிறது. மேற்கொண்டு கட்சி இராண்டாக பிரியும் சூழலும் உருவாகியுள்ளது. இதில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க வேம்டுமென ஆர்வம் காட்டி வருகிறார்.

மற்றொரு பக்கம் அன்புமணி தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டுமென பாஜகவுடனே கூட்டணி வைக்க விரும்பிகிறார். அதிலும் அன்புமணி பொதுக்குழு கூட்டம் எடுத்த முடிவு தான் எடுபடும். அப்படி பார்க்கையில் நான் தான் தலைவர் என கூறி வருகிறார். இதன் நடுவே ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தனது மகன் மற்றும் மருமகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தும் உள்ளார்.

இதற்கு முடிவு கட்ட வேண்டுமென அன்புமணி தற்போது டெல்லி சென்றுள்ளார். மத்திய பாஜாக-வின் முக்கிய இரு புள்ளிகளை சந்திக்க உள்ளாராம். இது ரீதியாக அவர்களிடம் ஆலோசனை செய்து தனது அப்பாவிடமிருந்து பாமக வின் முழு ஆதாரத்தையும் கைப்பற்றுவது எப்படி என்பது குறித்து திட்டமிட இருக்கிறார்களாம். டெல்லி மேலிடம் இதில் தலையிடும் பட்சத்தில் கட்டாயம் கட்சி இரண்டாக உடையும் என கூறுகின்றனர்.

அண்ணாமலை பேச்சால் அதிர்ந்த திமுக? என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் ஸ்டாலின்!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக இருந்த வரை அண்ணாமலை ஒரு வரைமுறையுடன் பேட்டி கொடுத்தார். தற்போது மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனிடம் சென்றுவிட்டது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். எனவே தான் பேசும் பேச்சுக்களில் ஒவ்வொரு பாலும் சிக்ஸர் அடிக்கிறார் அண்ணாமலை .

அதிமுக பாஜகவின் கூட்டணியில் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடனும் பாஜக கூட்டணிக்கு வலை விரித்து வருவதால் அண்ணாமலை தற்போது விஜய் மற்றும் அதிமுக பற்றி பேசுவதை குறைத்துள்ளார். தமிழகத்தை ஆளும் திமுக பற்றியும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பற்றி பேசுவதென்றால் அண்ணாமலைக்கு அல்வா சாப்பிடுவதை போல். தினமும் தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்கள் பற்றி ஊடகங்களில் தொடர்ந்து திமுகவை கழுவி ஊற்றி வருகிறார் அண்ணாமலை.

திருப்பூரில் அரசு பள்ளிக்கு அருகே மதுபோதை கும்பல் ஒன்று அராஜகம் செய்துவந்துள்ளது. அதை தட்டிக் கேட்க சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளது. திமுக ஆட்சியில் குழந்தைகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள் என எல்லோருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனைகள் பற்றி எதுவுமே கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்தி வருகிறார். பேசாமல் முழு நேரமாக அவர் நடிக்க சென்றுவிடலாம் என காட்டமாக ஸ்டாலினை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

சிம்புவால் தனுஷ் வெற்றிமாறன் இடையே ஏற்பட்ட மோதல்? சிம்புவை உள்ளே கொண்டு வந்ததால் 45 கோடி இழப்பு 

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காம்பினேஷன் இருக்கும். அதாவது இந்த இயக்குனருடன் இந்த நடிகர் சேர்ந்தால் படம் கன்பார்ம் வெற்றி என ஒரு கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் சேர்ந்தால் அந்த படம் எப்போதும் வெற்றி பெற்றுவிடும் என்பது மரபு.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை வெற்றிமாறன் தற்போது எழுதிவருவதாகவும், கூடிய விரையில் வடசென்னை 2 அன்புவின் எழுச்சி தயாராகப்போவதாகவும் கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷிற்கு பதிலாக சிம்புவை வைத்து வடசென்னை 2 படத்தை எடுக்கப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், எனவே அவரிடம் தான் வடசென்னை படத்தின் உரிமம் இருக்கிறது. தனுஷை விட்டுவிட்டு சிம்புவை வைத்து படம் எடுத்தால் வடசென்னை படத்திற்கான NOC 45 கோடி தரவேண்டும் என தனுஷ் வெற்றிமாறனை நிர்பந்தப்படுத்தியதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி வெற்றிமாறன் விளக்கியுள்ளார். வெற்றிமாறனும், சிம்புவும் இணையப்போகும் படம் வடசென்னை 2 கிடையாது. வடசென்னை பாகம் 1 நடக்கும் காலக்கட்டத்தில் வடசென்னையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய படம் தான் இது. வடசென்னை உலகிற்குள் இந்த படம் வரும். வடசென்னையில் இடம்பெற்ற சில கதாப்பத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெறுவார்கள். மற்றபடி வடசென்னை படத்திற்கும், சிம்பு படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதுபற்றி தனுஷிடம் வெற்றி கேட்டபோது நீங்க சிம்புவை வச்சு என்ன படம் வேணும்னாலும் பண்ணிக்கோங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, NOC தொகையில் எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று அன்பாக சொல்லி இருக்கிறார் தனுஷ். தனுசுக்கும், எனக்குமான நட்பு ரொம்ப ஆழமானது. கூடிய விரையில் வடசென்னை 2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும், சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்துக்கு தனுஷ் தனது முழு ஆதரவை கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறன்.

வெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?

மற்ற நாடுகளை விட நம்முடைய இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் குறைந்தது 5 பாடல்களாவது இருக்கும். அதுவும் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு கோடிகளில் செலவழிப்பார். பாட்டுக்காக லட்சங்களை செலவு செய்வது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விசயம் கிடையாது. ஆரம்பம் முதலே படத்தின் பாடல்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிகளை கொட்டிக்குவித்துள்ளனர்.

1980களில் வெளியாகும் படங்களில் சில்க் சிமிதா நிச்சயம் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவார். சில்க் சிமிதாவை பார்ப்பதற்காகவே அவரின் கவர்ச்சியை காண்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுப்பார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கூட சில்க் சிமிதா கவர்ச்சி நடனம் இடம்பெறும். அந்த படங்களும் சில்க்கின் ஆசீர்வாதத்தால் வெற்றிநடை போடும்.

வைதேகி காத்திருந்தாள் என்ற ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தை ரசித்ததை விட இந்த படத்தில் இடம் பெரும் பாடல்களை பார்ப்பதற்காகவே வைதேகி காத்திருந்தாள் படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி குவிந்தனர்.

இயக்குனர் ஷங்கரின் படங்களை ஆரம்பம் முதல் எடுத்துக்கொண்டால் படத்தின் பாடல்களுக்கு நிறைய செலவு செய்திருப்பார். இப்பவும் கூட அதைத்தான் ஷங்கர் தன்னுடைய படங்களில் தொடர்கிறார். இவருடைய படத்தில் இருக்கும் கதையை விட பாடல்கள் தான் பிரமாண்டமாகவும், இசையும் தாறுமாறாக இருக்கும். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், பாய்ஸ் போன்ற படங்களில் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

அதனாலேயே படம் மாபெரும் வெற்றி பெற்றது. அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் கதாநாயகியாக படம் முழுக்க வலம்வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் ஹும் சொல்றியா மாமா ஹும் ஹும் சொல்றியா மாமா பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்தனர். இந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா வாங்கிய சம்பளத்தை விட ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் அதிகமாம்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் இயக்குனரும், நடன இயக்குனரும் என்னை தமன்னாவுடன் ஆடவைக்காமல் கடைசியில் ஒரு ஓரமாக நிற்க வச்சு ஏமாத்திட்டாங்க என்று ரஜினிகாந்தே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் புலம்பியது நம் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும். இதனால் தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோடிகளை கொட்டிக் குவிக்கிறார்கள்.

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அங்கங்கே கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு என குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மது மற்றும் காஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கத்தினால் குடும்பத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொலை நடக்கும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக அரசு, தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2024-ல், 2023-ஐ ஒப்பிடுகையில் கொலைகள் 7% குறைந்துள்ளன என்றும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்துள்ளன என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஆனால் நிலவரம் வெறும் புள்ளிவிவரங்களால் விவரிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக உள்ளது.

தொடர்ச்சியாக நடந்த கொலைகள், அதுவும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள், இந்த “அமைதியான தமிழகம்” என்ற அவருடைய பேச்சை கேள்விக்குள்ளாக்குகின்றன.

2024-ல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதும், பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டதும், அதிகாரிகளான வி.ஏ.ஓ. லூர்துசாமி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாஹீர் உசேன் ஆகியோர் தங்களை பாதுகாப்பற்ற நிலையில் காண நேர்ந்ததும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 2023-இல் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் எண்ணிக்கை 39,000 ஆக இருந்த நிலையில், 2024-ல் அது 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதோடு, சைபர் குற்றங்கள், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் மனைவி, குழந்தைகள் மீதான வன்முறைகளும் உயர்வில் இருக்கின்றன.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான குற்றங்கள் 33.5% அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள் 16%, குழந்தைகள் மீதான போக்சோ வழக்குகள் 52% வரை அதிகரித்துள்ளன.

இந்த எல்லா சூழலிலும், ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புக் கரம்” எங்கே என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அறிவித்த வாக்குறுதிகளை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தளர்ந்துள்ளதா? அல்லது குற்றச்செயல்களுக்கு நேரடி நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவுக்கு அமைப்புகள் வலுவாகிவிட்டதா? என்பதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில், “குற்றமற்ற அமைதியான தமிழகம்” என்ற திமுக அரசின் நம்பிக்கையூட்டும் தேர்தல் வாக்குறுதி, வெறும் தேர்தல் வாசகமாகவே தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்! அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் டீம் – ராமதாஸ் உத்தரவு 

தமிழக அரசியலில் பாமக உட்கட்சி விவகாரம் தான் தற்போது ஹாட் டாப் என நாள்தோறும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது எனவும் இனிமேல் நிறுவனரான எனக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என அவர் களத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும், தனக்கான ஆதரவாளர்களை நியமித்தும் வருகிறார். அந்த வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் சிலர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என பலரும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவராக இருந்தவர்களை நீக்கி தொண்டி ஆனந்தன் என்பவரை தலைவராக நியமித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சோழன் குமார் வாண்டையார் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணமாக பாட்டாளி சமூக ஊடகப்பேரவையை கட்டமைத்ததில் இவருடைய பங்கு அதிகம் எனவும், சிலரின் தூண்டுதலால் குறிப்பாக தற்போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளராக செயல்படும் சிலரின் தூண்டுதலால் அவருடைய பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் பாஜகவிற்கு சென்ற அவர் திடீரென்று மருத்துவரை சந்தித்தது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சோழன் குமார் வாண்டையாருக்கு பாட்டாளி சமூக ஊடகப்பேரவை ஒருங்கிணைப்பாளர் பதவியை மருத்துவர் ராமதாஸ் வழங்கியது விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கூட்டத்தை நடத்தினார். அடுத்த நாளே மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவர் தொண்டி ஆனந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் உள்ளிட்டோர் ஊடகத்தில் எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இனிமேல் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிரான செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்றும் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தான் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேலம் அருள் எம் . எல் . ஏ பேச்சும் அமைந்தது என்று கூறப்படுகிறது.

இதுவரை அன்புமணி ராமதாஸ் தரப்பு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமை பண்பு இல்லாதவர் என்ற குற்றசாட்டை மட்டுமே மருத்துவர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பினால் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.