Friday, July 18, 2025
Home Blog Page 3

மலையாள படத்தை பார்த்து காப்பி”ப” வடிவ மாணவர்கள் அமரும் முறை! இது சாதகமா? பாதகமா?

மலையாள மொழியில் அண்மையில் “ஸ்தாணர்த்தி ஸ்ரீகுட்டன்” என்னும் படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்கள் பள்ளியில் அமரும் முறையில் மாற்றம் செய்து எல்லோரும் சமம், பின் வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மோசமான மாணவர்கள் கிடையாது என்பதை மாணவர்களும் உணரவேண்டும் என்பதற்காக “ப” வடிவில் மாணவர்களை அமரவைத்து ஆசிரியர் மாணவர்களுக்கு இந்த படத்தில் பாடம் எடுப்பார்.

 

இந்த படத்தை பார்த்த நம் தமிழ்நாட்டு பள்ளிக்கல்வி துறையினர் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் இப்படி மாணவர்களை அமர வைக்க வேண்டும். அப்போது தான் யார் முன் வரிசை, யார் பின் வரிசை என்கிற பாகுபாடு மனப்பான்மை மாணவர்களுக்குள் வராது என்கிற கோணத்தில் இந்த ப வடிவ முறையை பள்ளி வழக்கத்திற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

 

உண்மையில் இந்த முறையை அமல்படுத்துவதால் நிச்சயம் மாணவர்களுக்கு இடையே உள்ள பாகுபாடு மனப்பான்மை முற்றிலும் குறைந்துவிடும். ஆனால் அதைவிட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாணவர்களுக்கு நிறைய பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

 

தொடர்ச்சியாக தினமும் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் இந்த மாதிரி அமர்ந்திருந்தால் குழந்தைகளின் கழுத்து எலும்பு மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும். கண்ணாடி அணிந்திருக்கும் மாணவர்கள் தங்களின் கண்ணாடி லென்ஸ் வழியாக பார்க்காமல் பக்கவாட்டின் வழியாக பார்ப்பதால் அவர்களின் கண்கள் பாதிக்கப்படும். தலை வலி, கழுத்து வலி பிரச்சனைகள் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். தொடர்ந்து இதே மாதிரி அமர்ந்திருப்பதால் கழுத்து மற்றும் கண்கள் பாதிப்படைய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இவ்வளவு பேசுறமே, நம்மால் தொடர்ந்து ஒரு படத்தை டீவியில் பக்கவாட்டில் அமர்ந்து பார்க்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள்.

விஜய் பக்கம் சாயும் ஓபிஎஸ்? அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பம்! காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் வளம் வருபவர் விஜய். கடைசியாக ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்துடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு அரசியலில் களமிறங்கிவிட்டார். தற்போது தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அனுதினமும் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக விஜய் குரல் கொடுத்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்த உடனே நடந்த முதல் மாநாட்டில் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு எப்போதும் கூட்டணி கதவு திறந்தே இருக்கும் என்றும், கொள்கை எதிரி பாஜகவுடனும், அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளை கவரும் வகையில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கூட்டணி கொள்கைகளையும் விஜய் வெளியிட்டார். இதனால் எந்நேரத்திலும் சிறு கட்சிகள் விஜய்யின் கூட்டணிக்குள் வந்துவிடும் நிலை தற்போது அரசியலில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்துக்கொண்டு தான் வருகிறேன். விஜய்யின் அரசியல் நகர்வுகள் சிறப்பாக உள்ளது என்றும், அவருக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் பேட்டி கொடுத்துள்ளார் ஒபிஎஸ். விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இவரே மீண்டும் அங்கு சென்றாலும் எடப்பாடி இவரை சேர்த்துக்கொள்ள மாட்டார். அதேபோல பாஜகவுடன் இணக்கமாக ஓபிஎஸ் இருந்தாலும் ஓபிஎஸ் பாஜக சேர எடப்பாடி விடமாட்டார். திமுகவுடனும் இவரால் கூட்டணிக்கு செல்ல முடியாது. சீமானுடன் சென்றால் டெபாசிட் கூட தேறாது. இந்த காரணங்களால் தான் ஓபிஎஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் அரசால் புரசலாக பேசிக்கொள்கிறார்கள். ஓபிஎஸ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது, அவருக்கும் ஜாதி ரீதியான வாக்குகள் அதிக அளவில் இருக்கு என்றும் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் சம்பாதிக்க இறங்கிவிட்டனர். பலர் லட்சம் முதல் கோடிகளில் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டனர். அதாவது தாங்கள் இத்தனை வருடங்களாக செய்துவந்த தொழில் மற்றும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேரமாக Youtube ல் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல புது விதிமுறைகளை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த புது விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி பணம் கொடுக்க முடியாது என்று Youtube அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் பின்வருமாறு : மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு இனி பணம் கிடைக்காது.

ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்தால் பணம் கிடைக்காது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிடுபவர்களுக்கு இனி பணம் கிடைக்காது. மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்படும் வீடியோக்கள், அடுத்தவர்களின் வீடீயோவை காப்பி அடித்து சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு வீடியோ வெளியிடுவது, தரம் இல்லாத வீடியோக்கள், டெம்ப்ளேட் அடிப்படையில் உருவாக்கப்படும் வீடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு இனி யூடியூபில் இருந்து பணம் கிடைக்காது என்கிற தகவல்களை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனால் Youtube தான் கதி என்று இருந்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய்.

கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் கட்சி மீட்டிங்கில் வெளிப்படையாக அறிவித்தார் விஜய். இதனால் திமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் எப்போதும் செல்லமாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. ஆனால் திமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது பக்கம் இழுக்க ஆரம்பம் முதலே விஜய் வலை விரித்து வருகிறார்.

விசிக, பாமக, காங்கிரஸ், தேமுதிக போன்ற முன்னணி கட்சிகளை விஜய் தனது கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறார். தவெக கட்சியுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்போவதாக விஜய் வெளிப்படையாக அறிவித்தார். தற்போது யாரும் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவிக்காத போதிலும் தேர்தல் நேரத்தில் நிச்சயம் களம் மாறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு திமுக மிக சொற்பமான தொகுதிகளையே கொடுத்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2029ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தமிழகத்தில் காங்கிரஸ் என்னும் கட்சியே இல்லாமல் போய்விடும்.

திமுக எப்போதும் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும் ஒதுக்காது, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கொடுக்காது. அதே விஜய்யுடன் சேர்ந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும். நாம் விஜய்யுடன் பேரம் பேசி நிறைய தொகுதிகளையும் வாங்கலாம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் விஜய்க்கு ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்காக விஜய்யை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நினைக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலில் ராகுல் காந்தி பிஸியாக இருப்பதால் அவர் பீஹார் மாநில தேர்தல் முடிந்து வந்த பிறகு இது குறித்து பேசலாம் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். எனவே காங்கிரஸ் தவெக கூட்டணி கூடிய விரைவில் முடிவாகி விடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

மகளிருக்கு ரூ 1500 உரிமைத்தொகை.. ஸ்டாலின் குட்டை உடைத்த எடப்பாடி!!

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. அதிலும் பல வரைமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனால் பலருக்கும் உரிமை தொகை கிடைக்காமல் போனது.

நாளடைவில் இந்த திட்டத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்தி சில தளர்வுகளை உண்டாக்கினர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு சலுகைகளை இத்திட்டத்தின் வழியாக கொடுத்துள்ளது. யாரெல்லாம் புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இனி உரிமை தொகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து பல அழுத்தங்களுக்கு பிறகு தான் மகளிர் உரிமைத் தொகையை நடைமுறைப்படுத்தியது. தற்போது வரை 75 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் எண்ணாது?? இந்த ஆட்சியில் விவசாயிகள் பற்றி எந்த கவனமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மகளிருக்கு 1500 கொடுத்திருப்போம் என கூறினார். வரப்போகும் தேர்தலில் கட்டாயம் மகளிர் குறித்து உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

 

தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் 10 பவுன் நகையை திருடி விட்டதாக சொல்லி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்று எந்த வித வழக்கும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர்.

இதில் சம்மந்தப்பட்ட 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை CBI க்கு மாற்றிவிட்டனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்பட்ட நிகிதாவை இதுவரை யாரும் கைது செய்யவில்லை.

உண்மையில் நகை தான் காணாமல் போனதா, இல்லை அஜித் மீது இருந்த முன்விரோத பகை காரணமாக நகை காணாமல் போய்விட்டதாக சொல்லி அஜித்தை பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று நிகிதா செயல்பட்டாரா என்கிற கோணத்தில் இதுவரை காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை. ஊடகங்களில் சொல்லப்படும் நிகிதாவிற்கு உதவிய அந்த தலைமை செயலக அதிகாரி யார் என்றும் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை.

அஜித்குமார் இறப்பில் இருந்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிகிதா இப்போது ரொம்ப கூலாக அமர்ந்து நியூஸ் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார். ஒரு வேலை நிகிதாவை காவல் துறையினர் தேடிவருவது உண்மை என்ற போதிலும் காவல்துறையின் கையில் சிக்காத நிகிதாவை எப்படி ஊடக நிருபர்கள் சந்தித்து பேட்டி எடுக்க முடியும்.

நிகிதாவை காவல்துறையினர் கடைசி வரை விசாரிக்கவே இல்லையோ என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் அரசு கல்லூரிக்கு சென்று அனைவரையும் சந்தித்து விட்டு மீண்டும் தனது விடுமுறையை இன்னும் 20 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டி விண்ணப்பித்து விட்டு வந்திருக்கிறார் நிகிதா. நிகிதாவை கல்லூரியில் பார்த்த பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது மகனுக்காக உயிரை காப்பாற்றியவரை நடுத்தெருவில் துரத்தி விட்ட வைகோ!!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் எப்படி வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேலே கொண்டு வருவார்களோ அதேபோல அரசியலிலும் வாரிசுகள் முன்னுரிமை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். திமுக ஸ்டாலின் உதயநிதி, பாமக ராமதாஸ் அன்புமணி, ஓபிஎஸ் அவருடைய மகன் ஓபி ரவீந்திரநாத் வரிசையில் வைகோவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

வைகோ மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்தபிறகு அவரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தலைவர்களை மதிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். வைகோவுடன் ஆரம்பம் முதலே பயணித்தவர் மல்லை சத்யா. இவர் தற்போது மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

தற்போது தனக்கு துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்றப்பார்க்கிறார் வைகோ என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மல்லை சத்யா. குடும்ப அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்த வைகோ இப்போது துரைவைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். துரோகி பட்டம் கொடுத்து என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.

வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று சொல்லும் அளவுக்கு வைகோ துணிந்து விட்டார். வாரிசு அரசியலுக்காகத்தான் என்னுடைய மகனுக்காகத்தான் இதை எல்லாம் செய்தேன் என்று வைகோ என்னை கட்சியை விட்டு துரத்தப்பார்ப்பது மனக்கவலை அளிப்பதாக பேட்டி கொடுத்துள்ளார் மல்லை சத்யா.

காவல்துறை அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி!! கோவையில் பதற்றம்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கோவை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார். பழனிசாமி பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களும் அவருக்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர்.

கோவை வடக்கு டவுன்ஹால் அருகில் எடப்பாடி வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே ஏற்கனவே திமுக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட திமுக நிர்வாகிகள் அதிமுக பேனரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரச்சனை பெருசானது.

பிரச்சனை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துவந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரி SIயை திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்.

SIயை நோக்கி நீ என்ன பைத்தியக்காரனா? நீ என்ன ரௌடியா? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன் என்று கோட்டை அப்பாஸ் திட்ட ஆரம்பித்தார். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி நேரடியாக திட்டிய சம்பவத்தால் அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. சிறிது நேரம் திமுகவினர் அந்த இடத்திலேயே சாலை மறியல் செய்தனர். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அரசின் புதிய திட்டம்: வீடு வாங்க விருப்பமா? இப்போதே விண்ணப்பியுங்கள்!!

0

ஏழை மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.இந்த திட்டமானது  2015ஆம் ஆண்டில் பாஜக அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கொண்டு வீடு கட்டுவதற்கான மானியமாக ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். அதிலும் நிலம் கூட இல்லாதவர்கள் அரசால் கட்டப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் வீடுகளைக் வாங்கிக்கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி வீட்டு கடன்களுக்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

இதற்கடுத்து 2024ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS அதாவது (வருமானம் ரூ.3 லட்சம் வரை), LIG (ரூ.3-6 லட்சம்), மற்றும் MIG (ரூ.6-9 லட்சம்) வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் இந்த திட்டத்திற்கு விதவைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தனியாக வாழும் பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர், தெரு வியாபாரிகள், மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தான் முன்னுரிமை என்று கூறியுள்ளனர்.

எப்படி விண்ணப்பிப்பது??

விண்ணப்பிக்க விரும்புவோர் PMAY-U இணையதளத்தில் “Apply PMAY-U 2.0” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு தேவையான ஆவணங்களைத் தயார் செய்து, அதில் கேட்கும் தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

வங்கி கணக்கு விவரம்

வருமானச் சான்றிதழ்

நில ஆவணம் (இருப்பின்)

இவையனைத்தையும் வைத்து எளிதாக இந்த மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு கனவுக்கு நிதி உதவியாக இருக்கும்.

யாதும் அறியான் படத்தில் ரகசிய வேலை பார்த்த விஜய்.. 2026 யில் CM இவர் தான்!!

TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்து தனது கொள்கை எதிரி மதவாத எதிரி யார் என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட ஒருபோதும் நாங்கள் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் சினிமாவை விட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிலும் இவரது கடைசி படமாக ஜனநாயகன் உள்ளது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியுள்ளார். ஆனால் இவரைப் போல் வேறு எந்த கட்சியினரும் கூட்டணிக்காக இந்த சலுக்கையை கொடுத்ததில்லை. இவரின் வருகையை பாராட்டி சினிமா பிரபலங்கள் பலரும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

அந்த வகையில் செந்தூரா படத்தை எடுத்த இயக்குனர் தற்போது யாதும் அறியான் என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் 2024 மற்றும் 2026 யில் எடுக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சி தான் தற்போது வைரலாகி உள்ளது. அதாவது 2026 யில் CM ஆக விஜய் இருப்பதாகவும், அதில் யாருக்கும் இனி இலவசம் என்பது கிடையாது எனக்கூறிய போஸ்டர் இடம்பெற்றுள்ளது. மேற்கொண்டு விவசாயிகளை முன்னிறுத்தி பல திட்டங்களை வைத்திருப்பது போலவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காட்சியானது படத்தின் ட்ரைலரில் வைத்துள்ளதால் பெருமளவு வைரலாகி வருகிறது. விஜய் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரியவைக்கவே இந்த போஸ்டர் என அவரது ஆதரவாளர்கள் கூறுவதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின் மறைமுக உதவி இந்த படத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.