Thursday, July 3, 2025
Home Blog Page 5

சிம்புவால் தனுஷ் வெற்றிமாறன் இடையே ஏற்பட்ட மோதல்? சிம்புவை உள்ளே கொண்டு வந்ததால் 45 கோடி இழப்பு 

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காம்பினேஷன் இருக்கும். அதாவது இந்த இயக்குனருடன் இந்த நடிகர் சேர்ந்தால் படம் கன்பார்ம் வெற்றி என ஒரு கூட்டணி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் சேர்ந்தால் அந்த படம் எப்போதும் வெற்றி பெற்றுவிடும் என்பது மரபு.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை வெற்றிமாறன் தற்போது எழுதிவருவதாகவும், கூடிய விரையில் வடசென்னை 2 அன்புவின் எழுச்சி தயாராகப்போவதாகவும் கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷிற்கு பதிலாக சிம்புவை வைத்து வடசென்னை 2 படத்தை எடுக்கப்போவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், எனவே அவரிடம் தான் வடசென்னை படத்தின் உரிமம் இருக்கிறது. தனுஷை விட்டுவிட்டு சிம்புவை வைத்து படம் எடுத்தால் வடசென்னை படத்திற்கான NOC 45 கோடி தரவேண்டும் என தனுஷ் வெற்றிமாறனை நிர்பந்தப்படுத்தியதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இதன் உண்மைத்தன்மை பற்றி வெற்றிமாறன் விளக்கியுள்ளார். வெற்றிமாறனும், சிம்புவும் இணையப்போகும் படம் வடசென்னை 2 கிடையாது. வடசென்னை பாகம் 1 நடக்கும் காலக்கட்டத்தில் வடசென்னையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய படம் தான் இது. வடசென்னை உலகிற்குள் இந்த படம் வரும். வடசென்னையில் இடம்பெற்ற சில கதாப்பத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெறுவார்கள். மற்றபடி வடசென்னை படத்திற்கும், சிம்பு படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதுபற்றி தனுஷிடம் வெற்றி கேட்டபோது நீங்க சிம்புவை வச்சு என்ன படம் வேணும்னாலும் பண்ணிக்கோங்க, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, NOC தொகையில் எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம் என்று அன்பாக சொல்லி இருக்கிறார் தனுஷ். தனுசுக்கும், எனக்குமான நட்பு ரொம்ப ஆழமானது. கூடிய விரையில் வடசென்னை 2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும், சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப்போகும் படத்துக்கு தனுஷ் தனது முழு ஆதரவை கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறன்.

வெறும் பாடல் என்று நம்மால் கடந்துவிட முடியாது! படத்தின் வெற்றியையே பாட்டு தான் தீர்மானிக்கும்! வெறும் பாடலுக்காக ஏன் கோடிகளை வாரிக்குவிக்கிறார்கள்?

மற்ற நாடுகளை விட நம்முடைய இந்திய சினிமாவில் வெளியாகும் படங்களில் குறைந்தது 5 பாடல்களாவது இருக்கும். அதுவும் ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு கோடிகளில் செலவழிப்பார். பாட்டுக்காக லட்சங்களை செலவு செய்வது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விசயம் கிடையாது. ஆரம்பம் முதலே படத்தின் பாடல்களுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கோடிகளை கொட்டிக்குவித்துள்ளனர்.

1980களில் வெளியாகும் படங்களில் சில்க் சிமிதா நிச்சயம் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவார். சில்க் சிமிதாவை பார்ப்பதற்காகவே அவரின் கவர்ச்சியை காண்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுப்பார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கூட சில்க் சிமிதா கவர்ச்சி நடனம் இடம்பெறும். அந்த படங்களும் சில்க்கின் ஆசீர்வாதத்தால் வெற்றிநடை போடும்.

வைதேகி காத்திருந்தாள் என்ற ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். படத்தை ரசித்ததை விட இந்த படத்தில் இடம் பெரும் பாடல்களை பார்ப்பதற்காகவே வைதேகி காத்திருந்தாள் படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி குவிந்தனர்.

இயக்குனர் ஷங்கரின் படங்களை ஆரம்பம் முதல் எடுத்துக்கொண்டால் படத்தின் பாடல்களுக்கு நிறைய செலவு செய்திருப்பார். இப்பவும் கூட அதைத்தான் ஷங்கர் தன்னுடைய படங்களில் தொடர்கிறார். இவருடைய படத்தில் இருக்கும் கதையை விட பாடல்கள் தான் பிரமாண்டமாகவும், இசையும் தாறுமாறாக இருக்கும். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், பாய்ஸ் போன்ற படங்களில் பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

அதனாலேயே படம் மாபெரும் வெற்றி பெற்றது. அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் கதாநாயகியாக படம் முழுக்க வலம்வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் ஹும் சொல்றியா மாமா ஹும் ஹும் சொல்றியா மாமா பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்தனர். இந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா வாங்கிய சம்பளத்தை விட ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தாவின் சம்பளம் அதிகமாம்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் இயக்குனரும், நடன இயக்குனரும் என்னை தமன்னாவுடன் ஆடவைக்காமல் கடைசியில் ஒரு ஓரமாக நிற்க வச்சு ஏமாத்திட்டாங்க என்று ரஜினிகாந்தே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் புலம்பியது நம் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும். இதனால் தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படத்தில் இடம்பெறும் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கோடிகளை கொட்டிக் குவிக்கிறார்கள்.

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு 

4 வருட திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! கொலை கொள்ளை கற்பழிப்பு போதைப்பொருட்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக திமுக தலைமையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், அங்கங்கே கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு என குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக மது மற்றும் காஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கத்தினால் குடும்பத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொலை நடக்கும் அளவுக்கு சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக அரசு, தமிழகத்தில் கொலைகள் குறைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 2024-ல், 2023-ஐ ஒப்பிடுகையில் கொலைகள் 7% குறைந்துள்ளன என்றும், பழிவாங்கும் கொலைகள் 42% குறைந்துள்ளன என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். ஆனால் நிலவரம் வெறும் புள்ளிவிவரங்களால் விவரிக்க முடியாத அளவுக்கு சிக்கலானதாக உள்ளது.

தொடர்ச்சியாக நடந்த கொலைகள், அதுவும் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள், இந்த “அமைதியான தமிழகம்” என்ற அவருடைய பேச்சை கேள்விக்குள்ளாக்குகின்றன.

2024-ல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதும், பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங், அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டதும், அதிகாரிகளான வி.ஏ.ஓ. லூர்துசாமி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாஹீர் உசேன் ஆகியோர் தங்களை பாதுகாப்பற்ற நிலையில் காண நேர்ந்ததும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மேலும், போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 2023-இல் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் எண்ணிக்கை 39,000 ஆக இருந்த நிலையில், 2024-ல் அது 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதோடு, சைபர் குற்றங்கள், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் மனைவி, குழந்தைகள் மீதான வன்முறைகளும் உயர்வில் இருக்கின்றன.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான குற்றங்கள் 33.5% அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள் 16%, குழந்தைகள் மீதான போக்சோ வழக்குகள் 52% வரை அதிகரித்துள்ளன.

இந்த எல்லா சூழலிலும், ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புக் கரம்” எங்கே என்று பொதுமக்கள் கேட்கின்றனர். அறிவித்த வாக்குறுதிகளை நிலைநாட்டுவதில் அரசாங்கம் தளர்ந்துள்ளதா? அல்லது குற்றச்செயல்களுக்கு நேரடி நடவடிக்கைகள் எடுக்க முடியாத அளவுக்கு அமைப்புகள் வலுவாகிவிட்டதா? என்பதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சூழலில், “குற்றமற்ற அமைதியான தமிழகம்” என்ற திமுக அரசின் நம்பிக்கையூட்டும் தேர்தல் வாக்குறுதி, வெறும் தேர்தல் வாசகமாகவே தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்! அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் டீம் – ராமதாஸ் உத்தரவு 

தமிழக அரசியலில் பாமக உட்கட்சி விவகாரம் தான் தற்போது ஹாட் டாப் என நாள்தோறும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் மருத்துவர் ராமதாஸ் தனக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது எனவும் இனிமேல் நிறுவனரான எனக்கே அனைத்து அதிகாரமும் உண்டு என அவர் களத்தில் இறங்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும், தனக்கான ஆதரவாளர்களை நியமித்தும் வருகிறார். அந்த வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் சிலர், பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என பலரும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவராக இருந்தவர்களை நீக்கி தொண்டி ஆனந்தன் என்பவரை தலைவராக நியமித்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சோழன் குமார் வாண்டையார் தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சந்தித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.

அதற்கு காரணமாக பாட்டாளி சமூக ஊடகப்பேரவையை கட்டமைத்ததில் இவருடைய பங்கு அதிகம் எனவும், சிலரின் தூண்டுதலால் குறிப்பாக தற்போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளராக செயல்படும் சிலரின் தூண்டுதலால் அவருடைய பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளனர். இதனால் பாஜகவிற்கு சென்ற அவர் திடீரென்று மருத்துவரை சந்தித்தது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சோழன் குமார் வாண்டையாருக்கு பாட்டாளி சமூக ஊடகப்பேரவை ஒருங்கிணைப்பாளர் பதவியை மருத்துவர் ராமதாஸ் வழங்கியது விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கூட்டத்தை நடத்தினார். அடுத்த நாளே மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி சமூக ஊடகப்பேரவை தலைவர் தொண்டி ஆனந்தன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சோழன் குமார் வாண்டையார் உள்ளிட்டோர் ஊடகத்தில் எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் இனிமேல் தான் அன்புமணி ராமதாசுக்கு எதிரான செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்றும் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் தான் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேலம் அருள் எம் . எல் . ஏ பேச்சும் அமைந்தது என்று கூறப்படுகிறது.

இதுவரை அன்புமணி ராமதாஸ் தரப்பு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமை பண்பு இல்லாதவர் என்ற குற்றசாட்டை மட்டுமே மருத்துவர் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பினால் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிரான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக பக்கம் சாயும் தவெக! ஸ்டாலினை சந்திக்க விஜய் பிளான் – இறுதி நேரத்தில் மாறும் ஆட்டம் 

தமிழகத்தில் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய நிலையில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில் இருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடருகிறதா இல்லையா என இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனியே களம் காணும் சூழல் நிலவி வருகிறது. இதில் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் பேசிய போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகளை நேரிடையாக எதிர்த்து விமர்சனம் செய்தார்.

அதே போல தங்களுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அறிவித்து கூட்டணிக்கு தயாராக உள்ளதை தெளிவுப்படுத்தினார். திமுக பாஜக கட்சிகளை விமர்சனம் செய்ததால் அக்கட்சிகளுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதே போல அதிமுகவை எங்கயும் விமர்சனம் செய்யாத காரணத்தால் அக்கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருந்ததாகவும், இதற்காக சில கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளான ஆட்சியில் பங்கு, முதல்வர் பதவி உள்ளிட்ட காரணங்களால் இழுபறியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் நிலைமையை சுதாரித்து கொண்ட பாஜக அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தது. இதனால் அதிமுக தவெக கூட்டணியானது பேச்சுவார்த்தைகளுடன் முடிந்து போனது. இந்நிலையில் தான் தவெக தனியாக போட்டியிடுமா அல்லது அறிவித்தது போல கூட்டணி அமைத்து போட்டியிடுமா என விவாதங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. உயர்மட்ட நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, அருண்ராஜ் உள்ளிட்டோருடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பல கட்ட ஆலோசனைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில திமுக கூட்டணி பக்கம் போகலாம் என்று கொடுத்த ஆலோசனையின் பேரில் எதாவது ஒரு மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதுகுறித்து பேச முதல்வரிடம் அனுமதி வாங்கி அவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பலரும் பரந்தூர் விமான நிலைய பிரச்சனையை கையில் எடுக்கலாம் என கூறியதால் இது தொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பானது பரந்தூர் விமான நிலையம் சார்ந்த பிரச்சனைக்காக என வெளியில் தெரிந்தாலும், உள் அரங்கில் திமுக கூட்டணிக்குள் தவெக நுழைவதற்கான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கு முன் தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில் பின்னர் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். அதே போல விஜய் திமுகவை விமர்சனம் செய்திருந்தாலும் கட்சியின் நலன் கருதி திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கு வழக்கம்போல மற்ற திமுக கூட்டணி கட்சியினர் கூறும் பாஜக எதிர்ப்பை காரணமாக கூறிவிடலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி

தமிழகத்தில் மற்ற அரசியல் விவகாரங்களை விட பாமக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அப்பா மகனின் அதிகார போட்டியாக ஆரம்பித்த விவகாரம் தற்போது நிர்வாகிகள் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். அதே போல அன்புமணி ராமதாஸ் அவர்களும் தனக்கு ஆதரவான நபர்களின் பதவியை மருத்துவர் ராமதாஸ் பறித்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார். இந்நிலையில் அதிகாரப் பூர்வமாக கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, யார் நியமித்த நிர்வாகிகளை பின் தொடருவது என பல்வேறு குழப்பங்கள் கட்சியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் குழந்தையாக மாறி விட்டார். அவரை சுற்றியுள்ள 3 பேர் அவர்களின் சுயநலத்திற்காக கட்சியை பயன்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையான அவர் நியமித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா என கிடுக்கி பிடி கேள்வியை எழுப்பியுள்ளார். ஏற்கனவே காலையில் பால் போடுபவர், இலந்தை பழம் விற்றவர்களை அழைத்து வந்து பதவி கொடுத்துள்ளனர் என்று பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்து ராமதாஸ் அவர்களை குழந்தை என பேசிய விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில் ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கை முயற்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் மன்மொழி மானம் காப்பதற்கான அனைவரையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியாக பார்க்க வேண்டும். அதனால் சாதி, மதம், கட்சி சார்பு என்று எந்த ஒரு வேறுபாடும் பார்க்காமல் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு இழைக்கப்படக்கூடிய அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன்.

38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அதன் பிறகு ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்ட கழகத்திலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜூலை மூன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் நேரில் சென்று பேச வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லாமல் அனைவரையும் ஒன்று இணைக்கும் பணி என ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!

தமிழகத்தில் போதை பொருள் தொடர்பான அண்மையில் நடத்தப்பட்ட கைதானது மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதலில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய செல்போன் உரையாடல்களை வைத்து பிரதீப் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கானா நாட்டைச் சேர்ந்த ஜானிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலமாக நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் போதை பொருட்கள் பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஆனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த பொழுது அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரதாப் தயாரிப்பில் நடித்த படத்துக்காக சுமார் பத்து லட்சத்தை கேட்க சென்றபோது, அவர் கொக்கைன் போதை பொருள் கொடுத்து பழகியதாகவும் அதன் பிறகு தானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன், தெரியாமல் தவறு செய்து விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மகனை கவனித்துக் கொள்ள ஜாமீன் வேண்டுமென்றும் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது அதேபோல தான் நடிகர் கிருஷ்ணாவையும் காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

இரைப்பை அலர்ஜி மற்றும் வேகமான இதயத்துடிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றேன். அதனால் போதை பொருள் எடுத்துக் கொள்ள முடியாது என கிருஷ்ணா விளக்கம் தந்துள்ளார். போலீசார் அவரிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்திய பொழுது அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் மட்டும்தான் போதை பொருள் பயன்படுத்துகின்றார்களா.

இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா, கொக்கைன்  போன்ற போதை பொருள் கலாச்சாரம் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றது. ஏன் இவர்களை மட்டும் கைது செய்தீர்கள் போதை பொருள் பயன்படுத்திய மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்; பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்!

திமுக கடந்த தேர்தலின் பொழுது கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக மகளிர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது. அதனால் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தகுதி வாய்ந்த மகளிர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இத்திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 15ஆம் தேதி முதல் முதல்வர் முகாம் நடைபெறும், இந்த முகாமில் கலந்து கொண்டு மீண்டும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கூடுதல் பெண்கள் பயன்பெறும் வகையில் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களின் பெண்களும் இந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது வரை நான்கு சக்கர வாகனம் இருந்தால் தகுதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை அகற்றப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பெண்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுத் துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

அதிமுக-தவெக கூட்டணி; வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தற்போது தயாராகி வருகின்றனர். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. யார் கூட்டணியில் யார் சேருவார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் அவருடைய இலக்கு 2026 தேர்தல் தான் என ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறிவரும் நிலையில் அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என தற்போது வரை புதிராகவே இருக்கின்றது.

விஜய் சார்பாக தொண்டர்கள் அனைவரும் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதனால் மக்களின் ஆதரவு விஜய்க்கு முழுவதுமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 2026 அதிமுகவுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

மக்களுடனான கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான நிறைய வாய்ப்புகளை மக்கள் கொடுத்துள்ள நிலையில் மக்களோடு கூட்டணி தான் எங்களுக்கு வேண்டும் அரசியல் கூட்டணியில் பயணிக்க நாங்கள் வரவில்லை மக்களுடனான கூட்டணியில் தான் நாங்கள் பயணிக்க விரும்புகிறோம் என கூறியிருக்கின்றனர்.

அதிமுக-பாஜகவில் இருந்து விலகி ஒரு தேர்தலை சந்தித்த நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இரண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அதனால் தவெக-அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.