சசிகுமார் எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
96
தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் இயக்குனராக வெற்றி அடைந்த சசிக்குமார் இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்க்கு காரணம் படத்தின் கதை அம்சம் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே கதையை மையமாகக் கொண்டு திரைப்படத்தை இயக்குவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர் வரிசையில் சசிகுமார் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் சமீப காலமாக சசிகுமார் திரைப்படங்களில் இருந்து சற்றே விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இவருடைய நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம், பசங்க, சுந்தரபாண்டியன், போன்ற திரைப்படங்கள் சசிகுமார் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உண்டாக்கி கொடுத்துவிட்டது.

அண்மைக்காலமாக சசிகுமார் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் ரசிகர் கேட்கக் கூடிய ஒரே கேள்வி ஏன் நீங்கள் திரைப்படங்களை இயக்கவில்லை என்பதுதான் அவரது பல இனங்களாக மவுனம் காத்து வந்த சசிகுமார் சமயம் அந்த கேள்விக்கான விடையை தெரிவித்திருக்கின்றனர் அதாவது திரைப் படத்தை இயக்குவதற்கான சூழல் அமையவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு சுப்ரமணியபுரம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் சுப்பிரமணியபுரம் திரைப்படத்திற்கு பின்னர் ஏன் இவ்வளவு இடைவேளை என்று கேள்வி எழுப்பினார்கள். ஈசன் திரைப்படம் முடிவடைந்த பின்னர் ஒரு வரலாற்று திரைப்படத்தை எடுக்க நினைத்தேன். ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக, அந்த திரைப்படத்தை என்னால் இயக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் திரைப்படம் தயாரிப்பிலும் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக, அதனை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் ரசிகர்கள் நினைத்தபடி கண்டிப்பாக திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்திருக்கின்றார். இருந்தாலும் ரசிகர்கள் கூடிய விரைவில் திரைப்படத்தை இயக்குங்கள் என்று அவருக்கு சமூக வலைதளப் பக்கங்களில் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.