ஒரே நாளில் 400 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

ஒரே நாளில் 400 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 400ரூபாய் குறைந்து ரூபாய் 35,720-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கம் … Read more

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கொடுத்துள்ளது. இது பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி குழித்துறை பகுதியைச் சேர்ந்த யூடியூபே சர்ச் என்ற இளைஞன் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அதில் அவர் பயணம் செய்யும் பொழுது இது ஆண்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்துனரின் செயல்கள் ஆகியவற்றை படமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்தில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..வரும் 25ம் தேதி முக்கிய அறிவிப்பு-பள்ளிக்கல்வித்துறை.!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வட்டார கல்வி அலுவலர் அவர்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வருகிற நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தொடக்க … Read more

இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா.!! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!!

இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா.!! அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!!

நாளை, அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் … Read more

தொடர்ந்து இன்றும் உயர்ந்த பெட்ரொல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து இன்றும் உயர்ந்த பெட்ரொல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் … Read more

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!

What a pity for a ninth grade student who fell in love! The truth that came to light later!

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை! மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 7 ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே தெருவில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர். அதன் பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் பல்வேறு பகுதிகளிலும் சிறுமியின் … Read more

புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்!

Surasamaharam today on the occasion of Dasara in the famous temple!

புகழ் பெற்ற கோவிலில் தசராவை ஒட்டி இன்று சூரசம்ஹாரம்! தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. சில புகழ்பெற்ற கோவில்களில் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.  இதனை மொத்தம் 10 முதல் 12 நாட்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு கொண்டாடுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான இன்று நள்ளிரவில் சூரசம்காரம் நடைபெறவுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக கோவில் விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க … Read more

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

இனி இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் கிடையாது.!! அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் மற்றும் தங்க நகை கடன்களை வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு வங்கிகளில் தனியார் வங்கிகளை விட குறைந்த சதவிகித வட்டி வசூலிக்கப்படும் என்பதால் தங்க நகைக்கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை … Read more

மாணவனை கொடூரமாக அடித்து, காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டம்.!!

மாணவனை கொடூரமாக அடித்து, காலால் எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டம்.!!

கடலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்தும், காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பள்ளி ஆசிரியர் அவனை முட்டி போட வைத்துள்ளார். அதன்பிறகு, அங்கு இருந்த பிரம்பால் அந்த மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரியர் அந்த மாணவனை தனது கால்களால் எட்டி உதைத்தும் … Read more