எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு தற்போது வயது 74. கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு … Read more

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

தமிழ் இசை உலகில் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது கூடுதலாக காவலர்களை குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு அருகே உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் … Read more

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்! கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத காரணத்தால்,ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லோன் எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.அந்தவகையில் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேஷன் மூலம் அவர் 20 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளார். 20 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கு ரூபாய் 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை அவர்தேர்வு செய்திருந்தார்.ஆனால் அவர் தேர்வு … Read more

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முழு விவரம்!!

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முழு விவரம்!!

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மைசூா், மங்களூா் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூா் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் … Read more

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்!

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்!

ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்! உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்,ஆசிரியர்கள் கழிப்பறையில்,பள்ளி நிர்வாகத்தினர் ரகசிய கேமரா வைத்து அதில் பதிவான காட்சிகளை வைத்து சம்பளம் கேட்கும் ஆசிரியர்களை,அதில் பதிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி சம்பளம் கொடுக்க முடியாது என்று மிரட்டி,அந்தப் பள்ளியின் நிர்வாக குழு செயலாளரே வேலை வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொறுமையை இழந்த ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தின் மீது … Read more

மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு... தமிழக அரசு உத்தரவு!

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சஜன்சிங் சவாண் வெளியிட்டுள்ள உத்தரவில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.15லிருந்து ரூ.16.50ஆக உயா்த்தப்படுகிறது. இந்த விலை உயா்வு அக்டோபா் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சஜன்சிங் சவாண் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் எப்படி:? அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தினார்.தற்போது வரை இவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து,முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை … Read more

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!

கோயம்பேடு சந்தை திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்..! தமிழக அரசு வெளியீடு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 28ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கடைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள உரிமையாளர்கள், பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: காய்கறி சந்தைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும். காய்கறி சந்தையில் உள்ள அனைத்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,692 பேர் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,692 பேர் பாதிப்பு; 66 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 66 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,076 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,470 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்

நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள்

  நாமக்கல் மாவட்டம் சத்துணவு மையங்களில் 598 காலிப்பணியிடங்கள் பணியிடம் – நாமக்கல் மாவட்டம் பணியிடங்கள்: சத்துணவு அமைப்பாளா்-166 சமையலா்- 22 சமையல் உதவியாளா் -410 விண்ணப்பிக்க வேண்டிய தேதி – செப்டம்பர் 24 முதல் 30ம் தேதி வரை. வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 5.45 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம். 1. 3 kilometre வசிப்பிடம் இருக்க வேண்டும் 2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. பூர்த்தி … Read more