தமிழகத்தில் புதிதாக 5783 பேருக்கு கொரோனா; மேலும் 88 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5783 பேருக்கு கொரோனா; மேலும் 88 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,783 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 88 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,836 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,820 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

தபால் நிலையங்களில் புதியதாக செயல்படும் 73 சேவைகள் பற்றி தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!! நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் 73 சேவைகளை தொடங்க இந்திய தபால் அலுவலகம் முடிவு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கிலும், மக்கள் அன்றாட பயன்பாட்டிற்காக வெளியே சென்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருப்பதனை அரசு கருத்தில் கொண்டு, இனி மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவையும் தபால் நிலையத்தில் செயல்படுத்த இந்திய தபால் … Read more

மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு: அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் வாகனத்தில் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி வாகனம் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக செல்வகுமாருக்கும் அம்பிகாவுக்கும் … Read more

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க கைரேகை வைத்தால்தான் பொருள்க்கள் பெற முடியும் என புதிய திட்டம் தமிழக அரசு அமல் படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை அதிக அளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு விற்பதும் , ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்விகளை வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களை செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது. யுஜிசி தரப்பில் இறுதி பருவ தேர்வினை கட்டாயம் நடத்தப்பட்டு பட்டம் வழங்க வேண்டும் என்று … Read more

நாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !!

நாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !!

நாளை முதல் தொடங்குகிறது மெட்ரோ ரயில்கள் சேவை !! சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்து இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ,புறநகர் ரயில் தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாளை முதல் மெட்ரோ சேவையும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கும் என அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையானது நாளை காலை … Read more

‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

'நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்' மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் கைப்பையில் 4 ஏர்கன் மற்றும் 4 அலைபேசிகள் இருந்துள்ளன. இது தொடர்பாக … Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இன்று விடுமுறை!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இன்று விடுமுறை!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று விடுமுறை!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி நடைமுறைக்கு ஏற்றவாறு எண்ணைய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றது. கடந்த மே மாதம் பெட்ரோல் ,டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ,ஜூன் மாதம் முதலாக அவற்றின் விலையை உயர்த்தி விற்கப்பட தொடங்கியது. … Read more

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்! நெல்லைமாவட்டத்தில் புறநகரில் உள்ள விஎம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.அப்பகுதிகளில் வீட்டின் கேட்டில்,சில புரியாத குறியீடுகளும்,வார்த்தைகளும் எழுதப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஒரு வீட்டில் குறியீடுகளையும்,ஆங்கிலத்தில் ஏதோ புரியாதது போல் எழுதி இருக்கும் வார்த்தை மற்றும் அந்த வீட்டின் கேட்டில் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டு இருப்பதை கண்டு அச்சமடைந்து வீட்டு உரிமையாளர்,காவல் … Read more

டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கலந்தாய்வு குறித்த அறிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டிராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.     அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செக்கிழுத்த செம்மலாக போற்றப்படுபவர், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பெரும்பங்காற்றியவர் வ.உ.சி. சிதம்பரனார் ஆவார்.   மேற்கொண்டு … Read more