மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு தமிழக முதல்வர்,இன்று மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணி மற்றும் நலத்திட்ட பணிகளை பற்றி ஆய்வு நடத்தவுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.அதேபோன்று நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று தடுப்புபணியும் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றது.தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கொரோனா பரவுதலின் தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்யது வருகின்றார்.இது மட்டுமின்றி … Read more

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் பெற்றோர்கள் !

தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் பெற்றோர்கள் !

தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் பெற்றோர்கள்  தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் 1,6 மற்றும் 9 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில் , மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அரசு … Read more

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?

  ஆண்டிபட்டி அருகே அபிஷேக் என்பவர் பத்தாம் வகுப்பு , ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.தொற்று காரணமாக நடப்பாண்டின் பள்ளிகள் திறப்பு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.இதன் காரணமாக நடப்பாண்டின் … Read more

தங்கத்தின் விலை சரிந்தது! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை சரிந்தது! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை சரிந்தது! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்து வருகிறது நேற்று ஏறு முகமான தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது.   கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.   தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வந்த நிலையில் … Read more

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி

நீட் தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்திலும் ,உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளது. இதனால் நீட், ஜே இஇ போன்ற மத்திய அரசு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு தயாராகிவரும் 19 வயது இளம்பெண் , தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியை … Read more

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பயிர்கள் சர்வநாசம்!! கலக்கத்தில் விவசாயிகள்..!

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: பயிர்கள் சர்வநாசம்!! கலக்கத்தில் விவசாயிகள்..!

உசிலம்பட்டி அருகே வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டுத்தீவன பயிர்களை ஆயிரக்கணக்கில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சில வெட்டுக்கிளிகள் மட்டும் தென்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில், தற்போது ஆயிரக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படை எடுத்து வந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து … Read more

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் அறிவித்துள்ள புதிய அறிக்கையில், மத்திய பிரதேச மாநில அரசு தரும் அனைத்து வேலைவாய்ப்புகளும் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்தியப்பிரதேச மாநில வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானது என ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய (18 ஆக) அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இதனடிப்படையில் தமிழகத்திலும் அதேபோன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டு சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என … Read more

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

மதுரையில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அப்பள்ளியின் ஆசிரியர்களே செலுத்துவதாக ஓர் உன்னதமான முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரானா வைரஸின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசுத்தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசின் உத்தரவையடுத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் … Read more

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது:! வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை!

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது:! வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை!

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக ஆக்கவேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கனவாகும்.ஆனால் சில நாட்களாக மதுரையை துணை தலைநகரமென்று அமைச்சர்கள் கூறி வருவதை கண்டித்து வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1983-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.ஆனால் எம்ஜிஆரின் இந்த முடிவிற்கு பல எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இருந்தபோதிலும் திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டுமென்று அவர் தொடர்ந்து முயற்சித்தார்.ஆனால் … Read more