கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர். இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே … Read more

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மேலும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் என்ற கணக்கில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட … Read more

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr.Ramadoss

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. திருவாரூர்,கடலூர்,கோவை, தஞ்சாவூர்,புதுச்சேரி, நாகப்பட்டினம்,காரைக்கால் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியை பொருத்தமட்டில் மாவட்டத்தின் உள்பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் பெரும்பாலும் … Read more

பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

தமிழர் நீதிக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர், பெண்ணாடம் வால்பாறை பகுதியில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கொட்டகையின் பூட்டை உடைத்து,கொட்டகையை பெரும் சேதப் படுத்தி உள்ளார். இதனைக் கண்டு,பாமக நல்லூர் ஒன்றிய செயலர் வெங்கடேசன் என்பவர் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த தமிழர் நீதிக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர் பாமகவை சேர்ந்த வெங்கடேசனை ஆபாசமாக திட்டியும்,கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெங்கடேசன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்!

காவிரி ஆற்றில் நீந்தி வந்த ராட்சத மீன்! காவிரி டெல்டா பகுதிகளில் அதிகமான மழை பொழிந்து வருகிறது. அதனால் காவிரி அணை தேக்கங்களில் நீர் நிரம்பி வந்த நிலையில் தமிழக டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அதனால் அங்கிருந்த ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தருமபுரி மற்றும் சேலம் பகுதிகளில் 40,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக தர்மபுரியில் காவிரி … Read more

“வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்” புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

"வழக்கு வந்தால் தலைமறைவாகிவிடுவார்" புகழ் எஸ்விசேகர் மீது வழக்கு!

கடந்த செவ்வாயன்று, தமிழ்நாட்டில் “வெற்றிவேல், வீரவேல்” என மாநிலம் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியினர் முருகனை வணங்குவதாக குவிந்து கொண்டிருந்தனர். ​​அதன் உறுப்பினர்களில் ஒருவரான எஸ்விசேகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மூலம் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்துவதன் மூலம் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றதாக நடிகர், அரசியல்வாதி எஸ் வீ சேகர் மீது போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் போலீஸ் புகார் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சி.ராஜரத்தினம் என்பவரால் பதிவு செய்யப்பட்டது. “நடிகராக மாறிய … Read more

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மேலும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,278 … Read more

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம். இருந்தபோதும் ஜோசப் கணேசனின் … Read more