கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் (40 வயதான ஆண்) அப்பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை. இந்நிலையில், … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் அதன் தேர்ச்சி மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியானது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தங்களது கல்லூரி படிப்புகளை தொடங்க ஏதுவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு பொறியியல் படிப்பு மேற்கொள்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அவர்கள் சேர விரும்பும் கல்லூரிகளை அந்தந்த மாவட்ட அரசு பொறியியல் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.அதேபோன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்காமல், … Read more

ஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!

ஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!

மும்பையில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகின்றது.கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மழை இப் பகுதியில் கொட்டி வருகின்றது.கனத்த மழை மட்டுமல்லாது பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது.மும்பை மாநகரில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிகக் கனத்த மழை பெய்யும் என்றும்,இது 46ஆண்டுகளுக்கு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை:? விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா தமிழக அரசு?

டெல்டா மாவட்ட விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை:? விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா தமிழக அரசு?

கடந்த 16 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் சரியான பருவ நீரும், தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.அரசின் ஒத்துழைப்பாலும் தண்ணீ செல்லும் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு சரியான நேரத்தில் கடைமடைக்கு செல்ல உதவியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட மூன்று லட்சத்தை ஏக்கரை தாண்டி அதிகமாக ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளது.கடந்த வருடம் போல் இல்லாமல் எவ்வித புயல் ,வெள்ளம் போன்ற எவ்வித பாதிப்புமின்றி பிரதமர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு உதவியது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு … Read more

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

கதாநாயகிகளை மையப்படுத்தி  உருவாகவுள்ள கதைக்கு, அக்கா தங்கையாக சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.  இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் படத்திற்கும் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தா  நடிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது. … Read more

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?

கர்நாடகாவில் கனமழை செய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நேற்று மாலையில் 1.50 லட்சம் கன அடியாக நீர் அதிகரித்து வருகின்றது. கர்நாடக கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து உள்ளதாகவும்,கிருஷ்ண சாகர் … Read more

 நடிக்க திரும்பும் முன்னாள் நாயகி!!

 நடிக்க திரும்பும் முன்னாள் நாயகி!!

தனது அழகு கொஞ்சும் நடிப்பினால் இளைஞர்களை சொக்கி போட்ட முன்னாள் நாயகி பிரியங்கா திரிவேதி. பெங்காலி படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கிய பிரியங்கா திரிவேதி, தமிழ் சினிமாவில் ‘ராஜ்ஜியம்‘ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன்பின் தல அஜித்துடன் ‘ராஜா’ படத்தில் இவரது நடிப்பினால்  பெரிதும் பிரபலமானார்.இந்தப்படத்தில் இவரது இன்னசென்ட் நடிப்பினால் பல ரசிகர்களின் நெஞ்சில் குடி கொண்டார். அதன்பின் விக்ரமுடன் ,காதல் சடுகுடு. படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் … Read more

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

சென்னையை கேபிள் மூலம் 8 தீவுகளுடன் இணைப்பு:! இன்று துவக்க விழா! இந்த திட்டத்தின் முழு விவரம்?

இந்திய பெருங்கடலில் கடலுக்கு அடியில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைத்து சென்னை உடன் 8 தீவுகளை இணைக்க இந்தியா பல நாட்களாக திட்டமிட்டு வந்தது.இந்த திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மத்திய அரசு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் கடல்வழியே இணையத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்தியக் கடல் பகுதியிலிருந்து கேபிள் செல்ல இருப்பதால் அவசியம் தேசிய வனவிலங்கு மையத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்திற்கு தேசிய … Read more

இன்று (10.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: ?

இன்று (10.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: ?

இன்று (10.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (10.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 ஆகவும், … Read more