கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

நாடுமுழுவதும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் சில நிறுவனங்கள் மூடியுள்ளனர். பொருளாதாரம் குறைந்து வரும் நிலையில் , நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன.சர்வதேச அளவில் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கடை ஊழியர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் உள்ளிட்ட எந்தவித சுப நிகழ்ச்சிகளும் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.தங்கத்தின் இறக்குமதி குறைவாக இருப்பதால், வர்த்தக வரலாற்றில் இல்லாத … Read more

என்னுடைய கனவை இவர் நிறைவேற்றுவார் என அப்துல் கலாம் பாராட்டிய தமிழக அரசியல்வாதி

Dr Abdul Kalam Speech About Anbumani Ramadoss

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.இவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போதும், மத்தியில் குடியரசு தலைவராக  பதவி வகித்த போதும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் … Read more

சீமான் மற்றும் ஹரி நாடார் மிரட்டலால் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

Actress Vijayalakshmi Suicide

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,இயக்குனருமான சீமானை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்தது தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியான ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் மற்றும் மீசைய முறுக்கு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னையில் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவர் வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

விடுபட்ட தேர்வை இன்று எழுதும் பிளஸ் 2 மாணவர்கள்

Plus Two Exam

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்போது நடைபெறவிருந்த பன்னிரண்டாம் வகுப்பிற்கான இறுதி தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் விடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள் இன்று பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர் .தேர்வை எழுத 572 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததை அடுத்து இன்று சென்னையில் 170 பிளஸ் 2 … Read more

கருப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில் இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய இஸ்லாமியர்

Karuppar Kootam Surendran Natarajan

கந்த சஷ்டி கவசம் தொடர்பான கருப்பர் கூட்டத்தின் வரம்பு மீறிய விமர்சனம் மிகவும் கண்டனத்துக்கு உரியது.கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கந்தர் சஷ்டியில் வரும் பாடலை பற்றியும் அதில் வரும் பாடலின் பொருளை பற்றியும் “கருப்பர் கூட்டம் ” என்னும் பெயரில் வந்த யூட்யூப் சேனல் ஒன்றில் தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். திருப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் … Read more

சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் கை செயலிழப்பு! நடந்தது என்ன? மருத்துவர்கள் அளித்த அதிர்ச்சி தகவல்!

Sathankulam Inspector Sridhar

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், பல தரப்பினரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இரண்டு எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிற காவலர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதில் ஆய்வாளரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஜெயராஜின் குடும்பத்தினர், வியாபாரிகள், பல கட்சியைச் சேர்ந்தவர்களும் … Read more

தேசிய அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்த மாணவி! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Kanika

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரின் மகளான மாணவி கனிகா சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்பெற்று தேசிய அளவில் அவர் சார்ந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி “மன் கீ பாத்” நிகழ்ச்சியின் போது தொலைபேசி வாயிலாக மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி கனிகா கூறியதாவது, “பிரதமர் அலுவலகத்திலிருந்து எங்கள் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அலுவலக அதிகாரிகள் … Read more

நிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!

Tragedy for landholders! Measurement fee for lands, field, land size and up pictures increased 66 times!

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் மற்றும் நில அளவைகள், புலப்பட நகல்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்குகள் உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்து, உட்பிரிவு மற்றும் எல்லைகளை நிர்ணயிப்பது போன்ற அளவீடுகள் திருத்தம் செய்யவும், நிலத்தை மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவைத்துறை கண்காணித்து பணி வருகிறது. இதில் … Read more

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:!சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வைப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இதனையடுத்து கடலோரமாவட்டங்களுக்கு மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களன புதுவை ,காரைக்கால் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது’. தமிழகத்தில் உள்மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது … Read more

வங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து

வங்கிகளை தனியார்மயமாக்காமல் இப்படியும் செய்யலாம்:!ஆர்பிஐ இலிருந்து சதீஷ் மராத்தே அவர்களின் கருத்து

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை பற்றி அரசு சற்று சிந்திக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் வாரிய உறுப்பினர் சதீஷ் மராத்தே கூறியுள்ளார்.நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் செயல்பட வேண்டும். இதனால் பொதுத்துறை வங்கியினை தனியார்மயமாக்க கூடாது.பங்குகளை பெரும்பகுதியை  பொதுமக்கள் விற்பனை செய்யும்போது அரசாங்கம் தனது பங்குகளை 26% குறைத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாரிய உறுப்பினர் .கூட்டுறவு வங்கித் துறையுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு அரசு பொதுதுறை நடத்தி,வங்கியில் பணியாற்றத் தொடங்கியனை சதீஷ் … Read more