30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன. இந்த இணைப்பு பெட்டியலில்தான் தெருவிளக்கின் மொத்த கண்ட்ரோலும் இருந்தது.தெரு விளக்கை போட வேண்டுமென்றால் அந்தக் குருவிக் கூட்டைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.குருவிக் கூட்டை கலைக்க மனமில்லாமல் அந்த கிராம … Read more

ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?

ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?

ஈரோடு மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் ஜவுளி சந்தையானது உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த ஜவுளி சந்தையில் காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படும். கோடைக் காலங்களில் காட்டன் துணிகள் சேலைகள் கைக்குட்டைகள் போன்றவை அதிக அளவில் விற்கப்படும்.குளிர்காலங்களில் சுவட்டர் இதுபோன்ற துணிகள் அதிக விலையில் விற்கப்படும். அதிகப்படியான துணிகள் ஒரே இடத்தில் விற்கப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள வணிகர்களும் ஈரோட்டில் உள்ள … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை

TN Assembly-News4 Tamil Online Tamil News1

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூடுதலாக … Read more

கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார் வீட்டில் அவரது மகனின் ஆசைக்காக 3 கோழிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.சசிகுமார் வீட்டினர், அடைக்கப்பட்டிருந்த கோழியை திறந்து விட்டுள்ளனர். கோழியானது பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் மேய்ந்தது. பின்பு எதர்ச்சியாக அருகிலுள்ள அன்பழகனின் வீட்டிற்குள் செல்லவே அதனைக் கண்ட அன்பழகனின் மனைவி அந்தக் கோழியை கல்லால் அடித்து விரட்டி உள்ளார். இதனைக்கண்ட சசிகுமாரின் மனைவி கோழியை கல்லால் அடித்து விரட்டியதற்காக கேட்டகப் … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய தரப்பில் புதிய மருந்தினை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வது பற்றி பேச்சுவார்த்தை எட்டியது. மனிதர் மீது தடுப்பூசி பரிசோதனை நடத்தியதில் ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்த நிகழ்வும் குறிப்பிட வேண்டியதாகும்.   இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கோவோச்சின் மருந்தினை மனிதர்களிடையே செலுத்தும் பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி … Read more

போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!

போதையில் மச்சானிடம் தங்கையை பெண் கேட்ட மாப்பிள்ளை:? அம்மிக் கல்லை போட்டு கொன்ற மச்சான்? இதுதான் காரணம்!

சென்னை ஆலந்தூரை அடுத்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34)இவருடைய மாமாவின் பையன் எட்வின் (25)இவர்களின் இருவருக்குமிடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது.அதுமட்டுமின்றி மணிகண்டனின் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளது.மேலும் இவருக்கு திருமணம் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மணிகண்டன் ஆதம்பாக்கத்தில் உள்ள எட்வின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.மேலும் மணிகண்டன் குடிபோதையில் உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடனே கோபமடைந்த எட்வின் அமைதியாக இருந்துள்ளார்.அன்றிரவு மணிகண்டன் … Read more

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜி மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்தாலும் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிலர் உயிரிழந்து வருகின்றனர். … Read more

ஜூலை 21: இன்றைய பெட்ரோல் டீசல் விலை?

ஜூலை 21: இன்றைய பெட்ரோல் டீசல் விலை?

சென்னையில் இன்று (ஜூலை 21) பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை சற்று உயர்த்தி வந்தது. ஆனால் கடந்த 21 நாட்களாக மறுபடியும் பெட்ரோல் டீசல் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 4 அமைச்சர்கள் உட்பட 16 எம்எல்ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் அரசியல் விஐபிக்கள் வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன், மாமனார் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.   எனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகள் உண்மையல்ல, நான் நலமாக உள்ளேன் … Read more

இனி பட்டா மாற்றுவது எளிது:! ஆகஸ்ட் 1- ஆம் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

இனி பட்டா மாற்றுவது எளிது:! ஆகஸ்ட் 1- ஆம் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் வீடு அல்லது நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் சொத்தை வாங்குபவர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு தனியாக விண்ணிப்பிக்க வேண்டும்.சொத்தின் பட்டா வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். அவர் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தாசில்தார் பட்டா வழங்குவார்.இதனால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் பட்டா தன் பெயருக்கு மாற்ற நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிட உள்ளது. … Read more