இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கேரள மாநில பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு … Read more

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கின்ற கொடநாடு எஸ்டேட்டில் அதன் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணை சென்ற வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை … Read more

முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை திருச்சிக்கு வருகை தந்தார். இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த பணிகள் ஆரம்பம், புதிய பணிகளுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். சிமெண்ட் ஆலைகளுக்கு … Read more

ஆளுநர்கள் வாரிசுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை! கனிமொழியின் கருத்துக்கு தமிழ் இசை சவுந்தரராஜன் அதிரடி விளக்கம்!

ஆளுநர்கள் வாரிசுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை! கனிமொழியின் கருத்துக்கு தமிழ் இசை சவுந்தரராஜன் அதிரடி விளக்கம்!

புதுவை அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஜன்ஜட்டியா கௌரவ் திவாஸ் விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா போன்றோர் பங்கேற்றுக் கொண்டனர். இந்த விழா முடிவற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில நாட்களுக்கு முன்னர் ஒரு புரட்சி இங்கே பிரிவினையை பற்றி பேசிய சமயத்தில் ராணுவ வீரர் ஒருவர் நாட்டின் எல்லையில் … Read more

மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!

மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!

கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் பம்ப்வெல் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி தீர்த்தஹள்ளியை சார்ந்த முகமது ஷாரிக் என்பவர் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், ஷாரிக் உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்து மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஷாரிக்கிற்க்கு 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் பேச முடியாமலும், கண்ணை திறக்க முடியாமலும் இருந்து வந்தார். அவருடைய … Read more

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த சமயத்தில் திமுக இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தனர், அதன் முடிவில் … Read more

மெரினாவில் இலவச வைஃபை! மாநகராட்சியின் அடுத்தடுத்த தீர்மானம்!!

மெரினாவில் இலவச வைஃபை! மாநகராட்சியின் அடுத்தடுத்த தீர்மானம்!!

மெரினாவில் இலவச வைஃபை! மாநகராட்சியின் அடுத்தடுத்த தீர்மானம்!! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் முதலாவதாக சென்னை மெரினா கடற்கரையில் இலவச வை-பை வசதி காண தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இலவச வைஃபை வசதிக்காக மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட உள்ளது. இதற்கு அடுத்தபடியாக வள்ளுவர் கோட்டம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் நுங்கம்பாக்கம் மயிலாப்பூர் கிண்டி தியாக ராயநகரில் தனியார் பட்ட நிலங்கள் உள்ளது அதனை நிலம் … Read more

கிராம உதவியாளர் பணியிடங்கள்! எழுத்து தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என்ன?

கிராம உதவியாளர் பணியிடங்கள்! எழுத்து தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என்ன?

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்து விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற இணைய பக்கத்தை பயன்படுத்தி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணியிடங்கள்: உத்தேச தேர்வு கால அட்டவணை அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 10.10.2022 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 7.11.2022 விண்ணப்பபங்கள் சரிபார்ப்பு 14.11.2022 எழுத்து மற்றும் வாசித்தல் … Read more

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

4 lakhs from Tamil Nadu government.. Action order flown to DGP!! Court sensational decision!

தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முருகானந்தம். இவர் ஓர் மாற்றுத்திறனாளி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்டபாணி என்பவர் வழக்கறிஞரான முருகானந்தம் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிறிதும் விசாரிக்காமல் காவல்துறை ஆய்வாளர் இவரை கூட்டி சென்றுள்ளார்.விசாரணை செய்யாமலேயே பின்பு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைய டுத்து வழக்கறிஞர் முருகானந்தம் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு … Read more