பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட கோவை உக்கடம்! கோட்டை ஈஸ்வரன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்!

கடந்த 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்து உண்டானது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அதோடு அவருக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் அவர் தற்கொலை படை தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும் காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக … Read more

அட அரசியல் கோமாளி கொஞ்சம் வாய மூடு! அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் பதில் சொன்னதை விடவும் பாஜகவிற்கு பதில் சொல்வதை அந்த கட்சி மிகவும் கடினமாக கருதுகிறது. பாஜகவிற்கு திமுக பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாள்தோறும் அந்தக் கட்சியின் மாநில தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டவை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. அதோடு திமுகவின் பல்வேறு அமைச்சர்களையும் பாஜகவின் மாநில தலைவர் … Read more

தமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே போல அதிமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றாலும் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அந்த கட்சி எதிர்க்கட்சியாக சரியான முறையில் செயல்படவில்லை என்று தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்ட போது ஆளும் கட்சியினர் அவரைக் கண்டு சற்றே அஞ்சினர் என்று சொன்னால் அது மிகையாகாது ஆனால் திமுக … Read more

என் தகுதிக்கு “நாய் பேய் சாராய வியாபரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” செந்தில் பாலாஜிக்கு ரிவென்ஜ் கொடுத்த அண்ணாமலை!

Annamalai who gave revenge to Senthil Balaji for my qualification "Can't respond to all the dog ghost liquor business"!

என் தகுதிக்கு “நாய் பேய் சாராய வியாபரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” செந்தில் பாலாஜிக்கு ரிவென்ஜ் கொடுத்த அண்ணாமலை! திமுக சில தினங்களுக்கு முன்பு பாஜக இந்தியை திணிப்பதாக போராட்டம் நடத்தியது. தற்பொழுது பாஜக, திமுக ஆங்கிலத்தை திணிக்கிறது என போராட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அண்ணாமலை திமுகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை குவித்தார். அதில், இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் வெங்காய … Read more

இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

ஊடகங்கள் தங்களுடைய கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை உலகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்பாராமல் நடைபெறும் இது போன்ற … Read more

திறமையற்ற திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அண்ணாமலையின் ஆவேசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சார்ந்தவர் நீலகண்டன் இவருடைய மனைவி கோகிலா இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடுவே கோகிலா இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்ததாக கிடைத்த ஒரு கடிதம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நான் கோகிலா என்னுடைய சாவுக்கு எம்.எம் குமார், அவருடைய மனைவி புவனேஸ்வரி உள்ளிட்டவர் தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுடைய அதிகாரத்தை குமார் எங்களிடம் காட்டி விட்டார் … Read more

நாளை அமெரிக்கா பயணமாகிறார் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை! எதற்காக தெரியுமா?

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தார். அதன் பிறகு காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தமிழகத்திற்கு வந்து பாஜகவில் இணைந்தார். அந்தக் கட்சியில் அவருக்கு முதலில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருந்த தற்போதைய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியானது. ஆகவே புதிய தமிழக … Read more

தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்! பாஜக வகுத்த அதிரடி வியூகம்?

பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக பாஜகவின் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்றைய தினம் அண்ணாநகையின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு நிறுவனமான என் ஐ ஏ மற்றும் மத்திய … Read more

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சியின் பிரமுகர்கள் சிலர் தரைதளத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பாட்டிலை தூக்கி கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்கள். பாஜக அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதன் காரணமாக, யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதங்களும் … Read more

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணமாக அண்ணாமலையின் திமுக எதிர்ப்பும் அவருடைய ஆக்ரோஷமான பேச்சுமே கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய வழக்கமான அந்த ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு வழக்கமான அரசியலை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் … Read more