குறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

குறிப்பிட்ட நேரத்திலாவது ஒயின்ஷாப்பை ஓப்பன் பண்ணுங்க : ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிகவளாகம், தியேட்டர், கோயில்கள், சர்ச்கள், ஒயின் ஷாப்கள், பார்கள், உள்ளிட்டவை அதிரடியாக மூடப்பட்டன. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் … Read more

மோடியின் யோசனைக்கு நன்றி சொன்ன அமேரிக்க அதிபரின் மகள் : காரணம் இது தான்!

மோடியின் யோசனைக்கு நன்றி சொன்ன அமேரிக்க அதிபரின் மகள் : காரணம் இது தான்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் 300 கோடி நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கத்திய நாடுகளான இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா இன்னும் … Read more

இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்ற சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

சிதம்பரத்திலிருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் எடத்தெரு வைத்த தெருவைச் சேர்ந்த சாஜுதீன் மற்றும் இருவர் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவரகளது வீட்டில் இருவர் தனிமை படுத்தப்பட்டிருந்தனர், இதில் தாஜுதீன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் எடத் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரின் மகன் சாஜ்தீன் வயது 35 மற்றும் அவரது உறவினர்கள் இருவர்  டெல்லியில் … Read more

பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் முறையாக உலரிய முதல்வர் பழனிச்சாமி! என்ன சொன்னார் தெரியுமா?

Edappadi Palanichamy

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதனால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள … Read more

ரஷ்ய அதிபரை சந்தித்தவருக்கு கொரோனா தொற்று : புதின் நோயை பரப்பினாரா?

ரஷ்ய அதிபரை சந்தித்தவருக்கு கொரோனா தொற்று : புதின் நோயை பரப்பினாரா?

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு காட்டுத்தீ போல பரவியுள்ளது. இந்த நோய் தொற்றால் பல நாடுகளில் இதுவரை 8,56,917 நபர்களுக்கு பரவியுள்ளது, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,107-ஐ கடந்துள்ளது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இந்த வைரஸால் 2,337 நபர்களுக்கு பரவியுள்ளது, மேலும் 17 நபர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் … Read more

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா?

மூன்றாவது இடத்தில் தமிழகம்! எதில் தெரியுமா? இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியில் மார்ச் 8ஆம் தேதி நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 50 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டத்தில் மட்டும் … Read more

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக டி.டி.வி.தினகரன் 1 கோடி நிதியுதவி சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதலானது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இது வரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் 1251 நபர்களை தாக்கியுள்ளதகவும், அதில் 102 நபர்கள் குணமடைந்து விட்டதாகவும்,32 நபர்கள் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் … Read more

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு

அரசு ஊழியர்களின் ஊதியம் பாதியாகக் குறைப்பு கொரோனாவால் ஏப்ரல் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் போடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்ப ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது தெலுங்கானா அரசு. இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்களின் ஊதியத்தில் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது. ஐ.பி.எஸ் … Read more

கொரோனா தொற்றி மருத்துவமனையில் இருந்து சேட்டை செய்த விசித்திர பெண் : அதனை பார்த்த 3பேருக்கு நேர்ந்த விபரீதம்!

கொரோனா தொற்றி மருத்துவமனையில் இருந்து சேட்டை செய்த விசித்திர பெண் : அதனை பார்த்த 3பேருக்கு நேர்ந்த விபரீதம்!

உலகம் முழுவதும் கொத்து கொத்தாக பல உயிர்களை கொன்று வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி நாட்டு மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்து தமிழக அரசு கண்காணித்து வருகிறது. மேலும் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களை முடுக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

20,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் : அது உருவான சுவாரஸ்ய பின்னணி!

20,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் : அது உருவான சுவாரஸ்ய பின்னணி!

உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். இந்த நோய்த் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் மருத்துவ துறையினரும் துப்புரவு தொழிலாளர்களும் தீவிர களப்பணியில் இறங்கினர். இதனால் மருத்துவர்கள் சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்வதிலும் துப்புரவு தொழிலாளர்கள் … Read more