ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் 1000-யைக் கடந்த கொரோனா பாதிப்பு… 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று உச்சம்!

Corona virus

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதைப் போலவே நடப்பு ஆண்டிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கட்டாய மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொற்றின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பொதுக்கூட்டம், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு… பிரபல கட்சியின் முக்கிய நிர்வாகி திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

hospital

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

நாளை முதல் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… 11 மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதல்வர்…!

School

இந்தியாவை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 15 லட்சத்து 14 ஆயிரத்து 331யைக் கடந்துள்ளது. 2 லட்சத்து 71 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் இருந்து மீண்டுவந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதோ? என மக்கள் அச்சத்தில் உறையும் அளவிற்கு தொற்று தீவிரமடைந்து வருகிறது. … Read more

இந்த 8 நகராட்சிகளில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு… ஏப்ரல் 10 வரை விடுமுறை அறிவிப்பு…!

School

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,276 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அகமதாபாத், வதோரா, சூரத், ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் … Read more

BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு… முக்கிய கட்சியின் நட்சத்திர வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்து வருவது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு தன்னுடைய பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு சென்னை ஆஃபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் … Read more

கொரோனா 2ம் அலை தீவிரம்: இன்று முதல் பேருந்துகள் இயங்காது…!

கொரோனா 2ம் அலை தீவிரம்: இன்று முதல் பேருந்துகள் இயங்காது...!

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி … Read more

‘மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்’… பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பறந்த உத்தரவு…!

Student

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் சக மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து, இருதினங்களுக்கு முன்பு 61 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. … Read more

SHOCKING: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி… 6 மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Corona virus

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு பாதுப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. … Read more

வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு?… நாளை மாநில முதல்வர்களுடன்பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!

Lock Down

2019ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சற்றே கட்டுக்குள் வர ஆரம்பித்தது. அதன் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 கோடி பேர் … Read more

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

MHA letter to States

மார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்! கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு, பொதுமுடக்கம் என அடுத்தடுத்து போடப்பட்டு 2020ஆம் ஆண்டு முடங்கியது. ஆனால் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொற்று பரவல் குறைந்ததால் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கம் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் சகஜமாக அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் … Read more