கோழிக்கோடு விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

The pilot who died in the Kozhikode plane crash may have already been involved in the accident! His venture

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களையும், விபத்தில் சிக்கியவர்களையும் மீட்பதற்காக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மாநிலத்திலுள்ள கொரோனா பாதித்த பகுதிகள் பட்டியல்களை வெளியிட்டார். அதில் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனடிப்படையில் விபத்திற்கான மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். இது மீட்புப் பணியினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்ததால், … Read more

கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் … Read more

கொரோனாவை ஒழிக்க கே.எஸ்.அழகிரி ஐடியா கூறி அறிக்கையை வெளியிட்டார்

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாகி இருப்பதால், உலக அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்படும் பட்டியலில் இந்தியா முதலில் உள்ளது. இந்த நிலையில், கரோனா பரவல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையானாது, கடந்த 24 மணிநேரங்களில் நாடு முழுவதும் கொரோனா … Read more

கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் (40 வயதான ஆண்) அப்பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை. இந்நிலையில், … Read more

தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். … Read more

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். … Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த … Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மிக அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. … Read more

திருப்பதி கோவில் அர்ச்சகர் மரணம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோவிலானது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 82 நாட்கள் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, திருப்பதி கோயில் ஜீயர் உட்பட 20 அர்ச்சகர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். இதனால், தற்போது இலவச … Read more