“அரியர் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மட்டும் சொம்பயா?” என்ற பாணியில் ஸ்டாலின் விமர்சனம்

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் விலக்கு அளித்து, தேர்ச்சி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு ஸ்டாலின் பதிலளித்து வலியுறுத்தி உள்ளார்.  முன்னதாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் தவிர்த்து, ஏனைய ஆண்டுகளில் தேர்வு எழுத இருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் பின்பு அண்மையில் இறுதி ஆண்டு மாணவர்களும், பல ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களும் பிற பாடங்களில் அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்தி … Read more

நீட் தேர்வு குறித்த முதலமைச்சர் பழனிச்சாமியின் நிலைப்பாடு: திமுக சும்மா விடாது என ஸ்டாலின் பாய்ச்சல்

தமிழகத்தின் ஒட்டு மொத்த குரலாக நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு வேண்டும் என அல்ல, உயிர்களை காவு வாங்கும் உயிர்க்கொல்லி ‘நீட் தேர்வினால், கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான்! அந்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனது கடமையில் இருந்து அதிமுக அரசானது அரசியல் காரணங்களுக்காக இதனை தவிர்த்துப் போக நினைத்தால் திமுக சும்மா விடாது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஜெ. பாணியில் முதலமைச்சர் பழனிச்சாமியின் அனல் பறக்கும் அரசியல் வியூகங்கள்

கரோனா தடுப்பு பணிகளுக்காக ஆய்வு செய்யும்பொருட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி என பல மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகளின் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி … Read more

கோஷ்டி அரசியலால் திமுக பக்கம் நகரும் அதிமுகவின் முக்கிய பிரபலம்! குழப்பத்தில் அதிமுக தலைமை

Edappadi Palanisamy and O Panneerselvam-News4 Tamil Online Tamil News

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரண்டும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் அடுத்து யார் முதல்வர் என்ற போட்டி பூதாகரமாக கிளம்பியுள்ளது. தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் இணைந்து சமரச அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட போட்டியானது ஓய்ந்தபாடில்லை. அதேபோல திமுகவிற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் தலைவலியை … Read more

தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் இந்த முடிவிற்கு அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து தோனியின் முடிவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் … Read more

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr.Ramadoss

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை … Read more

வரும் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? உள்கட்சி மோதலால் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு!

வருகிற 2021 தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, கட்சிக்குள் இழுபறி நடக்கும் சம்பவம் தற்போது இருக்கும் அமைச்சர்கள் கூறும் கருத்துக்களே சாட்சியாக இருக்கிறது. அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்றவர்களே தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் அதிமுக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் போட்டி நிலவுகிறது. இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

திமுக கொண்டு வந்த சட்டத்தை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பச்சை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சி தகவல்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை கட்சியில் கொண்டு அவரது கொள்கைப்படி செயல்பட்டு வரும் அ.தி.மு.க., மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அம்மையாருக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சகட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. … Read more

ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கான அடுத்த இலவசத் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

Pugazhendhi Meet CM Edappadi Palaniswami-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முககவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் ஆரம்ப கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முககவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரேஷன் கடைகளில் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் … Read more